| 1 | அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, | அப் 4:6 அப் 6:7 அப் 6:12 மத் 26:3 மத் 26:4 மத் 27:1 மத் 27:2 மத் 27:20 மத் 27:41 யோவா 15:20 யோவா 18:3 |
| 2 | அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, | அப் 5:17 அப் 13:45 அப் 19:23 நெகே 2:10 யோவா 11:47 யோவா 11:48 |
| 3 | அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். | அப் 5:18 அப் 6:12 அப் 8:3 அப் 9:2 அப் 12:1-3 அப் 16:19-24 மத் 10:16 மத் 10:17 லூக் 22:52 லூக் 22:54 யோவா 18:12 |
| 4 | வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. | அப் 28:24 2கொரி 2:14-17 பிலிப் 1:12-18 2தீமோ 2:9 2தீமோ 2:10 |
| 5 | மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், | அப் 5:20 அப் 5:21 மீகா 2:1 மத் 27:1 மத் 27:2 |
| 6 | பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, | லூக் 3:2 யோவா 11:49 யோவா 18:13 யோவா 18:14 யோவா 18:24 |
| 7 | அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். | அப் 5:27 1இரா 21:12-14 யோவா 8:3 யோவா 8:9 |
| 8 | அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, | அப் 4:31 அப் 2:4 அப் 7:55 மத் 10:19 மத் 10:20 லூக் 12:11 லூக் 12:12 லூக் 21:14 லூக் 21:15 |
| 9 | பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், | அப் 3:7 யோவா 7:23 யோவா 10:32 1பேது 3:15-17 1பேது 4:14 |
| 10 | உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. | அப் 13:38 அப் 28:28 எரே 42:19 எரே 42:20 தானி 3:18 |
| 11 | வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். | சங் 118:22 சங் 118:23 ஏசா 28:16 மத் 21:42-45 மாற் 12:10-12 லூக் 20:16-18 1பேது 2:6-8 |
| 12 | அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். | அப் 10:42 அப் 10:43 மத் 1:21 மாற் 16:15 மாற் 16:16 யோவா 3:36 யோவா 14:6 1கொரி 3:11 1தீமோ 2:5 1தீமோ 2:6 எபிரெ 2:3 எபிரெ 12:25 1யோவா 5:11 1யோவா 5:12 வெளிப் 7:9 வெளிப் 7:10 வெளிப் 20:15 |
| 13 | பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். | அப் 2:7-12 மத் 4:18-22 மத் 11:25 யோவா 7:15 யோவா 7:49 1கொரி 1:27 |
| 14 | சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. | அப் 4:10 அப் 3:8-12 |
| 15 | அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: | அப் 5:34-42 அப் 26:30-32 |
| 16 | இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. | யோவா 11:47 யோவா 11:48 யோவா 12:18 |
| 17 | ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு, | அப் 5:39 சங் 2:1-4 தானி 2:34 தானி 2:35 ரோம 10:16-18 ரோம 15:18-22 1தெச 1:8 |
| 18 | அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். | அப் 5:40 |
| 19 | பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். | 2கொரி 4:2 எபே 6:1 1தீமோ 2:3 |
| 20 | நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். | அப் 2:4 அப் 2:32 அப் 17:16 அப் 17:17 அப் 18:5 எண் 22:38 எண் 23:20 2சாமு 23:2 யோபு 32:18-20 எரே 1:7 எரே 1:17-19 எரே 4:19 எரே 6:11 எரே 20:9 எசே 3:11 எசே 3:14-21 மீகா 3:8 1கொரி 9:16 1கொரி 9:17 |
| 21 | நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். | அப் 4:17 அப் 5:40 |
| 22 | அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். | அப் 3:2 அப் 9:33 மத் 9:20 லூக் 13:11 யோவா 5:5 யோவா 9:1 |
| 23 | அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். | அப் 1:13 அப் 1:14 அப் 2:44-46 அப் 12:11 அப் 12:12 அப் 16:40 சங் 16:3 சங் 42:4 சங் 119:63 நீதி 13:20 மல்கி 3:16 2கொரி 6:14-17 |
| 24 | அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். | அப் 16:25 சங் 55:16-18 சங் 62:5-8 சங் 69:29 சங் 69:30 சங் 109:29-31 எரே 20:13 லூக் 6:11 லூக் 6:12 2கொரி 1:8-11 1தெச 5:16-18 2தீமோ 4:17 2தீமோ 4:18 |
| 25 | புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், | அப் 1:16 அப் 2:30 |
| 26 | கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. | சங் 83:2-8 யோவே 3:9-14 வெளிப் 17:12-14 வெளிப் 17:17-14 வெளிப் 19:16-21 |
| 27 | அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, | மத் 26:3 லூக் 22:1 லூக் 23:1 லூக் 23:8-12 |
| 28 | ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். | அப் 2:23 அப் 3:18 அப் 13:27-29 ஆதி 50:20 சங் 76:10 மத் 26:24 மத் 26:54 லூக் 22:22 லூக் 24:44-46 1பேது 2:7 1பேது 2:8 |
| 29 | இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, | அப் 4:17 அப் 4:18 அப் 4:21 ஏசா 37:17-20 ஏசா 63:15 புலம் 3:50 புலம் 5:1 தானி 9:18 |
| 30 | உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். | யாத் 6:6 உபா 4:34 எரே 15:15 எரே 20:11 எரே 20:12 லூக் 9:54-56 லூக் 22:49-51 |
| 31 | அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். | அப் 2:2 அப் 16:25 அப் 16:26 |
| 32 | விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. | அப் 1:14 அப் 2:1 அப் 5:12 2நாளா 30:12 எரே 32:39 எசே 11:19 எசே 11:20 யோவா 17:11 யோவா 17:21-23 ரோம 12:5 ரோம 15:5 ரோம 15:6 1கொரி 1:10 1கொரி 12:12-14 2கொரி 13:11 எபே 4:2-6 பிலிப் 1:27 பிலிப் 2:1 பிலிப் 2:2 1பேது 3:8 |
| 33 | கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. | அப் 4:30 அப் 1:8 அப் 1:22 அப் 2:32 அப் 2:33 அப் 3:15 அப் 3:16 அப் 5:12-16 மாற் 16:20 லூக் 24:48 லூக் 24:49 ரோம 15:18 ரோம 15:19 1தெச 1:5 எபிரெ 2:4 |
| 34 | நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, | உபா 2:7 சங் 34:9 சங் 34:10 லூக் 22:35 1தெச 4:12 |
| 35 | அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. | அப் 3:6 அப் 5:2 அப் 6:1-6 2கொரி 8:20 2கொரி 8:21 |
| 36 | சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், | அப் 11:22-25 அப் 11:30-25 அப் 12:25 அப் 13:1 அப் 15:2 அப் 15:12 அப் 15:37 1கொரி 9:6 கலா 2:1 கலா 2:9 கலா 2:13 |
| 37 | தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். | அப் 4:34 அப் 4:35 அப் 5:1 அப் 5:2 மத் 19:29 |