| 1 | இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், | அப் 13:9 அப் 21:40 அப் 22:7 அப் 22:13 அப் 26:1 அப் 26:14 |
| 2 | ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது; | லூக் 24:26 லூக் 24:27 அப் 10:43 அப் 26:6 தீத் 1:2 |
| 3 | நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. | ரோம 1:9 ரோம 8:2 ரோம 8:3 ரோம 8:29-32 சங் 2:7 மத் 3:17 மத் 26:63 மத் 27:43 லூக் 1:35 யோவா 1:34 யோவா 1:49 யோவா 3:16-18 யோவா 3:35-18 யோவா 3:36-18 யோவா 5:25 யோவா 10:30 யோவா 10:36 யோவா 20:28 யோவா 20:31 அப் 3:13 அப் 8:37 அப் 9:20 1கொரி 1:9 கலா 4:4 கொலோ 1:13-15 1தெச 1:10 1யோவா 1:3 1யோவா 3:8 1யோவா 3:23 1யோவா 4:9 1யோவா 4:10 1யோவா 4:15 1யோவா 5:1 1யோவா 5:5 1யோவா 5:10-13 1யோவா 5:20-13 வெளிப் 2:18 |
| 4 | இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், | ரோம 1:3 யோவா 2:18-21 அப் 2:24 அப் 2:32 அப் 3:15 அப் 4:10-12 அப் 5:30-32 அப் 13:33-35 அப் 17:31 2கொரி 13:4 எபே 1:19-23 எபிரெ 5:5 எபிரெ 5:6 வெளிப் 1:18 |
| 5 | மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். | ரோம 12:3 ரோம 15:15 ரோம 15:16 யோவா 1:16 1கொரி 15:10 2கொரி 3:5 2கொரி 3:6 கலா 1:15 கலா 1:16 எபே 3:2-9 1தீமோ 1:11 1தீமோ 1:12 |
| 6 | அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், | எபே 1:11 கொலோ 1:6 கொலோ 1:21 |
| 7 | தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார். | அப் 15:23 1கொரி 1:2 2கொரி 1:1 பிலிப் 1:1 கொலோ 1:2 யாக் 1:1 1பேது 1:1 1பேது 1:2 யூதா 1:1 வெளிப் 2:1 வெளிப் 2:8 வெளிப் 2:12 வெளிப் 2:18 வெளிப் 2:29 வெளிப் 3:1 வெளிப் 3:7 வெளிப் 3:14 வெளிப் 3:22 |
| 8 | உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். | ரோம 6:17 |
| 9 | நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். | ரோம 9:1 யோபு 16:19 2கொரி 1:23 2கொரி 11:10 2கொரி 11:11 2கொரி 11:31 கலா 1:20 பிலிப் 1:8 1தெச 2:5-10 1தீமோ 2:7 |
| 10 | நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், | ரோம 15:22-24 ரோம 15:30-32 பிலிப் 4:6 1தெச 2:18 1தெச 3:10 1தெச 3:11 பிலேமோ 1:22 எபிரெ 13:19 |
| 11 | உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, | ரோம 15:23 ரோம 15:32 ஆதி 31:30 2சாமு 13:39 2சாமு 23:15 2கொரி 9:14 பிலிப் 1:8 பிலிப் 2:26 பிலிப் 4:1 |
| 12 | எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். | ரோம 15:24 ரோம 15:32 அப் 11:23 2கொரி 2:1-3 2கொரி 7:4-7 2கொரி 7:13-7 1தெச 2:17-20 1தெச 3:7-10 2தீமோ 1:4 2யோவா 1:4 3யோவா 1:3 3யோவா 1:4 |
| 13 | சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. | ரோம 11:25 1கொரி 10:1 1கொரி 12:1 2கொரி 1:8 1தெச 4:13 |
| 14 | கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். | ரோம 8:12 ரோம 13:8 அப் 9:15 அப் 13:2-4 அப் 22:21 அப் 26:17 அப் 26:18 1கொரி 9:16-23 2தீமோ 2:10 |
| 15 | ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். | ரோம 12:18 1இரா 8:18 மாற் 14:8 2கொரி 8:12 |
| 16 | கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. | சங் 40:9 சங் 40:10 சங் 71:15 சங் 71:16 சங் 119:46 மாற் 8:38 லூக் 9:26 1கொரி 2:2 2தீமோ 1:8 2தீமோ 1:12 2தீமோ 1:16 1பேது 4:16 |
| 17 | விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. | ரோம 3:21 |
| 18 | சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. | ரோம 4:15 |
| 19 | தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். | ரோம 1:20 சங் 19:1-6 ஏசா 40:26 எரே 10:10-13 அப் 14:16 அப் 17:23-30 |
| 20 | எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. | யோவா 1:18 கொலோ 1:15 1தீமோ 1:17 1தீமோ 6:16 எபிரெ 11:27 |
| 21 | அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. | ரோம 1:19 ரோம 1:28 யோவா 3:19 |
| 22 | அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, | ரோம 11:25 நீதி 25:14 நீதி 26:12 ஏசா 47:10 எரே 8:8 எரே 8:9 எரே 10:14 மத் 6:23 1கொரி 1:19-21 1கொரி 3:18 1கொரி 3:19 |
| 23 | அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள். | ரோம 1:25 சங் 106:20 எரே 2:11 |
| 24 | இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். | சங் 81:11 சங் 81:12 ஓசி 4:17 ஓசி 4:18 மத் 15:14 அப் 7:42 அப் 14:16 அப் 17:29 அப் 17:30 எபே 4:18 2தெச 2:10-12 |
| 25 | தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். | ரோம 1:18 1தெச 1:9 1யோவா 5:20 |
| 26 | இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். | ஆதி 19:5 லேவி 18:22-28 உபா 23:17 உபா 23:18 நியா 19:22 1கொரி 6:9 எபே 4:19 எபே 5:12 1தீமோ 1:10 யூதா 1:7 யூதா 1:10 |
| 27 | அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். | ரோம 1:23 ரோம 1:24 |
| 28 | தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். | ரோம 1:18 ரோம 1:21 யோபு 21:14 யோபு 21:15 நீதி 1:7 நீதி 1:22 நீதி 1:29 நீதி 5:12 நீதி 5:13 நீதி 17:16 எரே 4:22 எரே 9:6 ஓசி 4:6 அப் 17:23 அப் 17:32 ரோம 8:7 ரோம 8:8 1கொரி 15:34 2கொரி 4:4-6 2கொரி 10:5 2தெச 1:8 2தெச 2:10-12 2பேது 3:5 |
| 29 | அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், | ரோம 3:10 |
| 30 | புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், | நீதி 25:23 |
| 31 | உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். | ரோம 1:20 ரோம 1:21 ரோம 3:11 நீதி 18:2 ஏசா 27:11 எரே 4:22 மத் 15:16 |
| 32 | இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள். | ரோம 1:18 ரோம 1:21 ரோம 2:1-5 ரோம 2:21-23 |