இணை வசன வேதாகமம்

Click to Subscribe

அப்போஸ்தலர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.லேவி 10:1-3 யோசு 6:1 மத் 13:47 மத் 13:48 யோவா 6:37 2தீமோ 2:20
2தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.யோசு 7:11 யோசு 7:12 2இரா 5:21-25 மல்கி 1:14 மல்கி 3:8 மல்கி 3:9 யோவா 12:6 1தீமோ 6:10 2பேது 2:14 2பேது 2:15
3பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?ஆதி 3:13-17 1இரா 22:21 1இரா 22:22 1நாளா 21:1-3 மத் 4:3-11 மத் 13:19 லூக் 22:3 யோவா 13:2 யோவா 13:27 எபே 6:11-16 யாக் 4:7 1பேது 5:8 வெளிப் 12:9-11
4அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.யாத் 35:21 யாத் 35:22 யாத் 35:29 1நாளா 29:3 1நாளா 29:5 1நாளா 29:9 1நாளா 29:17 1கொரி 8:8 1கொரி 9:5-17 பிலேமோ 1:14
5அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.அப் 5:10 அப் 5:11 அப் 13:11 எண் 16:26-33 2இரா 1:10-14 2இரா 2:24 எரே 5:14 1கொரி 4:21 2கொரி 10:2-6 2கொரி 13:2 2கொரி 13:10 வெளிப் 11:5
6வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.லேவி 10:4-6 உபா 21:23 2சாமு 18:17 யோவா 19:40
7ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
8பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
9பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.ஆதி 3:9-13 லூக் 16:2 ரோம 3:19
10உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
11சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.அப் 5:5 அப் 19:17 சங் 89:7 எரே 32:40 1கொரி 10:11 1கொரி 10:12 பிலிப் 2:12 எபிரெ 4:1 எபிரெ 11:7 எபிரெ 12:15 எபிரெ 12:28 1பேது 1:17 வெளிப் 15:4
12அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.அப் 2:43 அப் 3:6 அப் 3:7 அப் 4:30 அப் 4:33 அப் 9:33 அப் 9:40 அப் 14:3 அப் 14:8-10 அப் 16:18 அப் 19:11 மாற் 16:17 மாற் 16:18 மாற் 16:20 ரோம 15:19 2கொரி 12:12 எபிரெ 2:4
13மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.அப் 5:5 எண் 17:12 எண் 17:13 எண் 24:8-10 1சாமு 16:4 1சாமு 16:5 1இரா 17:18 ஏசா 33:14 லூக் 12:1 லூக் 12:2 லூக் 14:26-35 யோவா 9:22 யோவா 12:42 யோவா 19:38 2பேது 2:20-22
14திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.அப் 2:41 அப் 2:47 அப் 4:4 அப் 6:7 அப் 9:31 அப் 9:35 அப் 9:42 ஏசா 44:3-5 ஏசா 45:24 ஏசா 55:11-13
15பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.அப் 19:11 அப் 19:12 மத் 9:21 மத் 14:36 யோவா 14:12
16சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.மத் 4:24 மத் 8:16 மத் 15:30 மத் 15:31 மாற் 2:3 மாற் 2:4 மாற் 6:54-56 யோவா 14:12
17அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,அப் 4:26 சங் 2:1-3 யோவா 11:47-49 யோவா 12:10 யோவா 12:19
18அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.அப் 4:3 அப் 8:3 அப் 12:5-7 அப் 16:23-27 லூக் 21:12 2கொரி 11:23 எபிரெ 11:36 வெளிப் 2:10
19கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:அப் 12:7-11 அப் 16:26 சங் 34:7 சங் 105:17-20 சங் 146:7 ஏசா 61:1
20நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.ஏசா 58:1 எரே 7:2 எரே 19:14 எரே 19:15 எரே 20:2 எரே 20:3 எரே 22:1 எரே 22:2 எரே 26:2 எரே 36:10 மத் 21:23 யோவா 18:20
21அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்.அப் 5:25 லூக் 21:37 லூக் 21:38 யோவா 8:2
22சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
23சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.அப் 5:19 சங் 2:4 சங் 33:10 நீதி 21:30 புலம் 3:37 புலம் 3:55-58 தானி 3:11-25 தானி 6:22-24 மத் 27:63-66 மத் 28:12-15 யோவா 8:59
24இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.அப் 5:26 அப் 4:1 லூக் 22:4 லூக் 22:52
25அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
26உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப்போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.அப் 5:13 மத் 14:5 மத் 21:26 மத் 26:5 லூக் 20:6 லூக் 20:19 லூக் 22:2
27அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:அப் 4:7 அப் 6:12 அப் 22:30 அப் 23:1 லூக் 22:66
28நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.அப் 5:40 அப் 4:18-21
29அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.அப் 4:19 ஆதி 3:17 1சாமு 15:24 மாற் 7:7-9 வெளிப் 14:8-12
30நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,அப் 3:13-15 அப் 22:14 1நாளா 12:17 1நாளா 29:18 எஸ்றா 7:27 லூக் 1:55 லூக் 1:72
31இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.அப் 2:33 அப் 2:36 அப் 4:11 சங் 89:19 சங் 89:24 சங் 110:1 சங் 110:2 எசே 17:24 மத் 28:18 எபே 1:20-23 பிலிப் 2:9-11 எபிரெ 2:10 எபிரெ 12:2 1பேது 3:22
32இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.அப் 5:29 அப் 1:8 அப் 2:32 அப் 10:39-41 அப் 13:31 லூக் 24:47 லூக் 24:48 யோவா 15:27 2கொரி 13:1 எபிரெ 2:3
33அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.அப் 2:37 அப் 7:54 அப் 22:22 லூக் 4:28 லூக் 4:29 லூக் 6:11 லூக் 11:50-54 லூக் 19:45-48 லூக் 20:19
34அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,அப் 23:7-9 சங் 76:10 யோவா 7:50-53
35சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.அப் 19:36 அப் 22:26 எரே 26:19 மத் 27:19
36ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.அப் 8:9 மத் 24:24 2தெச 2:3-7 2பேது 2:18 யூதா 1:16 வெளிப் 17:3 வெளிப் 17:5
37அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.லூக் 2:1 லூக் 13:1
38இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;அப் 5:35 யோவா 11:48
39தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.அப் 6:10 ஆதி 24:50 2சாமு 5:2 1இரா 12:24 யோபு 34:29 ஏசா 43:13 ஏசா 46:10 தானி 4:35 மத் 16:18 லூக் 21:15 1கொரி 1:25 வெளிப் 17:12-14
40அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.அப் 4:18
41அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,அப் 16:23-25 ஏசா 61:10 ஏசா 65:14 ஏசா 66:5 மத் 5:10-12 லூக் 6:22 ரோம 5:3 2கொரி 12:10 பிலிப் 1:29 எபிரெ 10:34 யாக் 1:2 1பேது 4:13-16
42தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.அப் 5:20 அப் 5:21 அப் 2:46 அப் 3:1 அப் 3:2-10 லூக் 21:37 லூக் 22:53 2தீமோ 4:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.