| 1 | இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். | மத் 14:13 மத் 14:15-21 மாற் 6:31 மாற் 6:32 மாற் 6:34 மாற் 6:35-44 லூக் 9:10-12 லூக் 9:13-17 |
| 2 | அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். | மத் 4:24 மத் 4:25 மத் 8:1 மத் 12:15 மத் 13:2 மத் 14:14 மத் 15:30 மத் 15:31 மாற் 6:33 |
| 3 | இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். | யோவா 6:15 மத் 14:23 மத் 15:29 லூக் 6:12 லூக் 6:13 லூக் 9:28 |
| 4 | அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. | யோவா 2:13 யோவா 5:1 யோவா 11:55 யோவா 12:1 யோவா 13:1 யாத் 12:6-14 லேவி 23:5 லேவி 23:7 உபா 16:1 |
| 5 | இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். | யோவா 4:35 மத் 14:14 மத் 14:15 மாற் 6:34 மாற் 6:35 லூக் 9:12 |
| 6 | தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். | ஆதி 22:1 உபா 8:2 உபா 8:16 உபா 13:3 உபா 33:8 2நாளா 32:31 |
| 7 | பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். | எண் 11:21 எண் 11:22 2இரா 4:43 மாற் 6:37 |
| 8 | அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: | யோவா 1:40-44 மத் 4:18 |
| 9 | இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். | மத் 14:17 மத் 16:9 மாற் 6:38 மாற் 8:19 லூக் 9:13 |
| 10 | இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். | மத் 14:18 மத் 14:19 மத் 15:35 மத் 15:36 மாற் 6:39-41 மாற் 8:6 மாற் 8:7 லூக் 9:14-16 |
| 11 | இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். | யோவா 6:23 1சாமு 9:13 லூக் 24:30 அப் 27:35 ரோம 14:6 1கொரி 10:31 1தெச 5:18 1தீமோ 4:4 1தீமோ 4:5 |
| 12 | அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். | நெகே 9:25 மத் 14:20 மத் 14:21 மத் 15:37 மத் 15:38 மாற் 6:42-44 மாற் 8:8 மாற் 8:9 லூக் 1:53 லூக் 9:17 |
| 13 | அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். | 1இரா 7:15 1இரா 7:16 2இரா 4:2-7 2நாளா 25:9 நீதி 11:24 நீதி 11:25 2கொரி 9:8 2கொரி 9:9 பிலிப் 4:19 |
| 14 | இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். | யோவா 1:21 யோவா 4:19 யோவா 4:25 யோவா 4:42 யோவா 7:40 ஆதி 49:10 உபா 18:15-18 மத் 11:3 மத் 21:11 லூக் 7:16 லூக் 24:19 அப் 3:22-24 அப் 7:37 |
| 15 | ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். | யோவா 2:24 யோவா 2:25 எபிரெ 4:13 |
| 16 | சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், |
| 17 | படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப் போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். | யோவா 6:24 யோவா 6:25 யோவா 2:12 யோவா 4:46 மாற் 6:45 |
| 18 | பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. | சங் 107:25 சங் 135:7 மத் 14:24 |
| 19 | அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். | எசே 27:26 யோனா 1:13 மாற் 6:47 மாற் 6:48 |
| 20 | அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். | சங் 35:3 ஏசா 41:10 ஏசா 41:14 ஏசா 43:1 ஏசா 43:2 ஏசா 44:8 மத் 14:27-31 மாற் 6:50 மாற் 16:6 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 21 | அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது. | சங் 24:7-10 உன்ன 3:4 மத் 14:32 மத் 14:33 மாற் 6:51 வெளிப் 3:20 |
| 22 | மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள். | யோவா 6:16 யோவா 6:17 மத் 14:22 மாற் 6:45 |
| 23 | கர்த்தர் ஸ்தோத்திரஞ் செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது. | யோவா 6:11 யோவா 6:12 |
| 24 | அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். | யோவா 6:17 யோவா 6:23 |
| 25 | கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். | யோவா 1:38 யோவா 1:39 |
| 26 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 6:47 யோவா 6:53 யோவா 3:3 யோவா 3:5 |
| 27 | அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். | யோவா 6:28 யோவா 6:29 கலா 5:6 பிலிப் 2:13 கொலோ 1:29 1தெச 1:3 |
| 28 | அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். | உபா 5:27 எரே 42:3-6 எரே 42:20-6 மீகா 6:7 மீகா 6:8 மத் 19:16 லூக் 10:25 அப் 2:37 அப் 9:6 அப் 16:30 |
| 29 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். | யோவா 3:16-18 யோவா 3:36-18 யோவா 5:39 உபா 18:18 உபா 18:19 சங் 2:12 மத் 17:5 மாற் 16:16 அப் 16:31 அப் 22:14-16 ரோம 4:4 ரோம 4:5 ரோம 9:30 ரோம 9:31 ரோம 10:3 ரோம 10:4 எபிரெ 5:9 1யோவா 3:23 1யோவா 5:1 |
| 30 | அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? | யோவா 2:18 யோவா 4:8 யாத் 4:8 1இரா 13:3 1இரா 13:5 ஏசா 7:11-14 மத் 12:38 மத் 12:39 மத் 16:1-4 மாற் 8:11 லூக் 11:29 லூக் 11:30 அப் 4:30 1கொரி 1:22 எபிரெ 2:4 |
| 31 | வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். | யோவா 6:49 யாத் 16:4-15 யாத் 16:35-15 எண் 11:6-9 உபா 8:3 யோசு 5:12 நெகே 9:20 சங் 105:40 |
| 32 | இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | யாத் 16:4 யாத் 16:8 சங் 78:23 |
| 33 | வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். | யோவா 6:38 யோவா 6:48 யோவா 3:13 யோவா 8:42 யோவா 13:3 யோவா 16:28 யோவா 17:8 1தீமோ 1:15 1யோவா 1:1 1யோவா 1:2 |
| 34 | அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். | யோவா 6:26 யோவா 4:15 சங் 4:6 |
| 35 | இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். | யோவா 6:41 யோவா 6:48-58 1கொரி 10:16-18 1கொரி 11:23-29 |
| 36 | நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். | யோவா 6:26 யோவா 6:30 யோவா 6:40 யோவா 6:64 யோவா 12:37 யோவா 15:24 லூக் 16:31 1பேது 1:8 1பேது 1:9 |
| 37 | பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. | யோவா 6:39 யோவா 6:45 யோவா 17:2 யோவா 17:6 யோவா 17:8 யோவா 17:9 யோவா 17:11 யோவா 17:24 |
| 38 | என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். | யோவா 6:33 யோவா 3:13 யோவா 3:31 எபே 4:9 |
| 39 | அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. | யோவா 6:40 மத் 18:14 லூக் 12:32 ரோம 8:28-31 2தெச 2:13 2தெச 2:14 2தீமோ 2:19 |
| 40 | குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். | யோவா 6:36 யோவா 6:37 யோவா 1:14 யோவா 4:14 யோவா 8:56 ஏசா 45:21 ஏசா 45:22 ஏசா 52:10 ஏசா 53:2 லூக் 2:30 2கொரி 4:6 எபிரெ 11:1 எபிரெ 11:27 1பேது 1:8 1யோவா 1:1-3 |
| 41 | நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: | யோவா 6:43 யோவா 6:52 யோவா 6:60 யோவா 6:66 யோவா 7:12 லூக் 5:30 லூக் 15:2 லூக் 19:7 1கொரி 10:10 யூதா 1:16 |
| 42 | இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். | யோவா 7:27 மத் 13:55 மத் 13:56 மாற் 6:3 லூக் 4:22 ரோம 1:3 ரோம 1:4 ரோம 9:5 1கொரி 15:47 கலா 4:4 |
| 43 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். | யோவா 6:64 யோவா 16:19 மத் 16:8 மாற் 9:33 எபிரெ 4:13 |
| 44 | என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். | யோவா 6:65 யோவா 5:44 யோவா 8:43 யோவா 12:37-40 ஏசா 44:18-20 எரே 13:23 மத் 12:34 ரோம 8:7 ரோம 8:8 |
| 45 | எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். | மாற் 1:2 லூக் 1:70 லூக் 18:31 |
| 46 | தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். | யோவா 1:18 யோவா 5:37 யோவா 8:19 யோவா 14:9 யோவா 14:10 யோவா 15:24 கொலோ 1:15 1தீமோ 6:16 1யோவா 4:12 |
| 47 | என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 6:40 யோவா 6:54 யோவா 3:16 யோவா 3:18 யோவா 3:36 யோவா 5:24 யோவா 14:19 ரோம 5:9 ரோம 5:10 கொலோ 3:3 கொலோ 3:4 1யோவா 5:12 1யோவா 5:13 |
| 48 | ஜீவ அப்பம் நானே. | யோவா 6:33-35 யோவா 6:41-35 யோவா 6:51-35 1கொரி 10:16 1கொரி 10:17 1கொரி 11:24 1கொரி 11:25 |
| 49 | உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். | எண் 26:65 சகரி 1:5 1கொரி 10:3-5 எபிரெ 3:17-19 யூதா 1:5 |
| 50 | இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. | யோவா 6:33 யோவா 6:42 யோவா 6:51 யோவா 3:13 |
| 51 | நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். | யோவா 3:13 யோவா 4:10 யோவா 4:11 யோவா 7:38 1பேது 2:4 |
| 52 | அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். | யோவா 6:41 யோவா 7:40-43 யோவா 9:16 யோவா 10:19 |
| 53 | அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 6:26 யோவா 6:47 யோவா 3:3 மத் 5:18 |
| 54 | என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். | யோவா 6:27 யோவா 6:40 யோவா 6:63 யோவா 4:14 சங் 22:26 நீதி 9:4-6 ஏசா 25:6-8 ஏசா 55:1-3 கலா 2:20 பிலிப் 3:7-10 |
| 55 | என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. | யோவா 6:32 யோவா 1:9 யோவா 1:47 யோவா 8:31 யோவா 8:36 யோவா 15:1 சங் 4:7 எபிரெ 8:2 1யோவா 5:20 |
| 56 | என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். | புலம் 3:24 |
| 57 | ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். | சங் 18:46 எரே 10:10 1தெச 1:9 எபிரெ 9:14 |
| 58 | வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். | யோவா 6:32 யோவா 6:34 யோவா 6:41 யோவா 6:47-51 |
| 59 | கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். | யோவா 6:24 யோவா 18:20 சங் 40:9 சங் 40:10 நீதி 1:20-23 நீதி 8:1-3 லூக் 4:31 |
| 60 | அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். | யோவா 6:66 யோவா 8:31 |
| 61 | சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? | யோவா 6:64 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 62 | மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? | யோவா 3:13 யோவா 16:28 யோவா 17:4 யோவா 17:5 யோவா 17:11 மாற் 16:19 லூக் 24:51 அப் 1:9 எபே 4:8-10 1பேது 3:22 |
| 63 | ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. | ஆதி 2:7 ரோம 8:2 1கொரி 15:45 2கொரி 3:6 கலா 5:25 1பேது 3:18 |
| 64 | ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: | யோவா 6:36 யோவா 6:61 யோவா 5:42 யோவா 8:23 யோவா 8:38-47 யோவா 8:55-47 யோவா 10:26 யோவா 13:10 யோவா 13:18-21 |
| 65 | ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். | யோவா 6:37 யோவா 6:44 யோவா 6:45 யோவா 10:16 யோவா 10:26 யோவா 10:27 யோவா 12:37-41 எபே 2:8 எபே 2:9 பிலிப் 1:29 1தீமோ 1:14 2தீமோ 2:25 தீத் 3:3-7 எபிரெ 12:2 யாக் 1:16-18 |
| 66 | அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். | யோவா 6:60 யோவா 8:31 செப் 1:6 மத் 12:40-45 மத் 13:20 மத் 13:21 மத் 19:22 மத் 21:8-11 மத் 27:20-25 லூக் 9:62 2தீமோ 1:15 2தீமோ 4:10 எபிரெ 10:38 2பேது 2:20-22 1யோவா 2:19 |
| 67 | அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். | யோசு 24:15-22 ரூத் 1:11-18 2சாமு 15:19 2சாமு 15:20 லூக் 14:25-33 |
| 68 | சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. | சங் 73:25 |
| 69 | நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். | யோவா 1:29 யோவா 1:41 யோவா 1:45-49 யோவா 11:27 யோவா 20:28 யோவா 20:31 மத் 16:16 மாற் 1:1 மாற் 8:29 லூக் 9:20 அப் 8:37 ரோம 1:3 1யோவா 5:1 1யோவா 5:20 |
| 70 | இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். | யோவா 6:64 யோவா 13:18 யோவா 17:12 மத் 10:1-4 லூக் 6:13-16 அப் 1:17 |
| 71 | சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார். | சங் 109:6-8 அப் 1:16-20 அப் 2:23 யூதா 1:4 |