இணை வசன வேதாகமம்

Click to Subscribe

1யோவான் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.1யோவா 2:12 1யோவா 2:13 1யோவா 3:7 1யோவா 3:18 1யோவா 4:4 1யோவா 5:21 யோவா 13:33 யோவா 21:5 1கொரி 4:14 1கொரி 4:15 கலா 4:19
2நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.1யோவா 1:7 1யோவா 4:10 ரோம 3:25 ரோம 3:26 1பேது 2:24 1பேது 3:18
3அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.1யோவா 2:4-6 1யோவா 3:14 1யோவா 3:19 1யோவா 4:13 1யோவா 5:19
4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.1யோவா 2:9 1யோவா 1:6 1யோவா 1:8 1யோவா 1:10 1யோவா 4:20 யாக் 2:14-16
5அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.1யோவா 2:3 1யோவா 2:4 சங் 105:45 சங் 106:3 சங் 119:2 சங் 119:4 சங் 119:146 நீதி 8:32 நீதி 28:7 பிரச 8:5 எசே 36:27 லூக் 11:28 யோவா 14:21 யோவா 14:23 வெளிப் 12:17 வெளிப் 14:12
6அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.1யோவா 2:4 1யோவா 1:6
7சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.1யோவா 3:11 அப் 17:19 2யோவா 1:5
8மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.1யோவா 4:21 யோவா 13:34 யோவா 15:12
9ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.1யோவா 2:4
10தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.1யோவா 3:14 ஓசி 6:3 யோவா 8:31 ரோம 14:13 2பேது 1:10
11தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.1யோவா 2:9 யோவா 12:35 தீத் 3:3
12பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.1யோவா 2:7 1யோவா 2:13 1யோவா 2:14 1யோவா 2:21 1யோவா 1:4
13பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.1யோவா 2:14 1தீமோ 5:1
14பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.1யோவா 2:13
15உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.1யோவா 4:5 1யோவா 5:4 1யோவா 5:5 1யோவா 5:10 யோவா 15:19 ரோம 12:2 கலா 1:10 எபே 2:2 கொலோ 3:1 கொலோ 3:2 1தீமோ 6:10
16ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.எண் 11:4 எண் 11:34 சங் 78:18 சங் 78:30 நீதி 6:25 மத் 5:28 ரோம 13:14 1கொரி 10:6 கலா 5:17 கலா 5:24 எபே 2:3 தீத் 2:12 தீத் 3:3 1பேது 1:14 1பேது 2:11 1பேது 4:2 1பேது 4:3 1பேது 4:2 1பேது 4:3 2பேது 2:10 2பேது 2:18 யூதா 1:16-18
17உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.சங் 39:6 சங் 73:18-20 சங் 90:9 சங் 102:26 ஏசா 40:6-8 மத் 24:35 1கொரி 7:31 யாக் 1:10 யாக் 1:11 யாக் 4:14 1பேது 1:24
18பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.யோவா 21:5
19அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.உபா 13:13 சங் 41:9 மத் 13:20 மத் 13:21 மாற் 4:5 மாற் 4:6 மாற் 4:16 மாற் 4:17 லூக் 8:13 யோவா 15:2 அப் 15:24 அப் 20:30 2பேது 2:20 2பேது 2:21 யூதா 1:19
20நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.1யோவா 2:27 1யோவா 4:13 சங் 23:5 சங் 45:7 சங் 92:10 ஏசா 61:1 லூக் 4:18 அப் 10:38 2கொரி 1:21 2கொரி 1:22 எபிரெ 1:9
21சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.நீதி 1:5 நீதி 9:8 நீதி 9:9 ரோம 15:14 ரோம 15:15 2பேது 1:12
22இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.1யோவா 2:4 1யோவா 1:6 1யோவா 4:20 யோவா 8:44 வெளிப் 3:9
23குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.1யோவா 2:22 1யோவா 4:15 மத் 11:27 லூக் 10:22 யோவா 5:23 யோவா 8:19 யோவா 10:30 யோவா 14:9 யோவா 14:10 யோவா 15:23 யோவா 15:24 2யோவா 1:9-11
24ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.சங் 119:11 நீதி 23:23 லூக் 9:44 யோவா 15:7 கொலோ 3:16 எபிரெ 2:1 எபிரெ 3:14 2யோவா 1:2 3யோவா 1:3 வெளிப் 3:3 வெளிப் 3:11
25நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.1யோவா 1:2 1யோவா 5:11-13 1யோவா 5:20-13 தானி 12:2 லூக் 18:30 யோவா 5:39 யோவா 6:27 யோவா 6:47 யோவா 6:54 யோவா 6:68 யோவா 10:28 யோவா 12:50 யோவா 17:2 யோவா 17:3 ரோம 2:7 ரோம 5:21 ரோம 6:23 கலா 6:8 1தீமோ 1:16 1தீமோ 6:12 1தீமோ 6:19 தீத் 1:2 தீத் 3:7 யூதா 1:21
26உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.1யோவா 3:7 நீதி 12:26 எசே 13:10 மாற் 13:22 அப் 20:29 அப் 20:30 2கொரி 11:13-15 கொலோ 2:8 கொலோ 2:18 1தீமோ 4:1 2தீமோ 3:13 2பேது 2:1-3 2யோவா 1:7
27நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.1யோவா 2:20 1யோவா 3:24 யோவா 4:14 1பேது 1:23 2யோவா 1:2
28இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.1யோவா 2:1
29அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.1யோவா 2:1 1யோவா 3:5 சகரி 9:9 அப் 3:14 அப் 22:14 2கொரி 5:21 எபிரெ 1:8 எபிரெ 1:9 எபிரெ 7:2 எபிரெ 7:26 1பேது 3:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.