| 1 | நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், | 1பேது 5:1 3யோவா 1:1 |
| 2 | தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது: | 1கொரி 9:23 2கொரி 4:5 |
| 3 | பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக. | ரோம 1:7 1தீமோ 1:2 |
| 4 | பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். | பிலிப் 4:10 1தெச 2:19 1தெச 2:20 1தெச 3:6-10 3யோவா 1:3 3யோவா 1:4 |
| 5 | இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். | 1யோவா 2:7 1யோவா 2:8 1யோவா 3:11 |
| 6 | நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. | யோவா 14:15 யோவா 14:21 யோவா 15:10 யோவா 15:14 ரோம 13:8 ரோம 13:9 கலா 5:13 கலா 5:14 1யோவா 5:3 1யோவா 5:15 |
| 7 | மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். | 2பேது 2:1-3 1யோவா 2:18-22 1யோவா 4:1 |
| 8 | உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். | மத் 24:4 மத் 24:24 மத் 24:25 மாற் 13:5 மாற் 13:6 மாற் 13:9 மாற் 13:23 லூக் 21:8 எபிரெ 12:15 வெளிப் 3:11 |
| 9 | கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். | யோவா 15:6 1யோவா 2:22-24 |
| 10 | ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். | 2யோவா 1:11 ரோம 16:17 ரோம 16:18 1கொரி 5:11 1கொரி 16:22 கலா 1:8 கலா 1:9 2தீமோ 3:5 2தீமோ 3:6 தீத் 3:10 |
| 11 | அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். | சங் 50:18 எபே 5:11 1தீமோ 5:22 வெளிப் 18:4 |
| 12 | உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன். | யோவா 16:12 |
| 13 | தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென். | 2யோவா 1:1 1பேது 5:13 |