| 1 | என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. | அப் 20:21 அப் 24:24 கொலோ 1:4 1தீமோ 1:19 தீத் 1:1 2பேது 1:1 வெளிப் 14:12 |
| 2 | ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, | எஸ்தர் 3:10 எஸ்தர் 8:2 லூக் 15:22 |
| 3 | மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், | யூதா 1:16 |
| 4 | உங்களுக்குள்ளே போதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா? | யாக் 1:1-27 யோபு 34:19 மல்கி 2:9 |
| 5 | என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? | நியா 9:7 1இரா 22:28 யோபு 34:10 யோபு 38:14 நீதி 7:24 நீதி 8:32 மாற் 7:14 அப் 7:2 |
| 6 | நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்? | யாக் 2:3 சங் 14:6 நீதி 14:31 நீதி 17:5 பிரச 9:15 பிரச 9:16 ஏசா 53:3 யோவா 8:49 1கொரி 11:22 |
| 7 | உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்? | சங் 73:7-9 மத் 12:24 மத் 27:63 லூக் 22:64 லூக் 22:65 அப் 26:11 1தீமோ 1:13 வெளிப் 13:5 வெளிப் 13:6 |
| 8 | உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். | யாக் 2:12 யாக் 1:25 1பேது 2:9 |
| 9 | பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள். | யாக் 2:1-4 லேவி 19:15 |
| 10 | எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். | உபா 27:26 மத் 5:18 மத் 5:19 கலா 3:10 |
| 11 | ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். | யாத் 20:13 யாத் 20:14 உபா 5:17 உபா 5:18 மத் 5:21-28 மத் 19:18 மாற் 10:19 லூக் 18:20 ரோம 13:9 |
| 12 | சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். | பிலிப் 4:8 கொலோ 3:17 2பேது 1:4-8 |
| 13 | ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். | யாக் 5:4 ஆதி 42:21 நியா 1:7 யோபு 22:6-10 நீதி 21:13 ஏசா 27:11 மத் 5:7 மத் 6:15 மத் 7:1 மத் 7:2 மத் 18:28-35 மத் 25:41-46 லூக் 16:25 |
| 14 | என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? | யாக் 2:16 எரே 7:8 ரோம 2:25 1கொரி 13:3 1தீமோ 4:8 எபிரெ 13:9 |
| 15 | ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, | யாக் 2:5 யோபு 31:16-21 ஏசா 58:7 ஏசா 58:10 எசே 18:7 மத் 25:35-40 மாற் 14:7 லூக் 3:11 அப் 9:29 எபிரெ 11:37 |
| 16 | உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? | யோபு 22:7-9 நீதி 3:27 நீதி 3:28 மத் 14:15 மத் 14:16 மத் 15:32 மத் 25:42-45 ரோம 12:9 2கொரி 8:8 1யோவா 3:16-18 |
| 17 | அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். | யாக் 2:14 யாக் 2:19 யாக் 2:20 யாக் 2:26 1கொரி 13:3 1கொரி 13:13 1தெச 1:3 1தீமோ 1:5 2பேது 1:5-9 |
| 18 | ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. | யாக் 2:14 யாக் 2:22 ரோம 14:23 1கொரி 13:2 கலா 5:6 எபிரெ 11:6 எபிரெ 11:31 |
| 19 | தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. | உபா 6:4 ஏசா 43:10 ஏசா 44:6 ஏசா 44:8 ஏசா 45:6 ஏசா 45:21 ஏசா 45:22 ஏசா 46:9 சகரி 14:9 மாற் 12:29 யோவா 17:3 ரோம 3:30 1கொரி 8:4 1கொரி 8:6 கலா 3:20 எபே 4:5 எபே 4:6 1தீமோ 2:5 யூதா 1:4 |
| 20 | வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? | யாக் 1:26 யோபு 11:11 யோபு 11:12 சங் 94:8-11 நீதி 12:11 எரே 2:5 ரோம 1:21 1கொரி 15:35 1கொரி 15:36 கலா 6:3 கொலோ 2:8 1தீமோ 1:6 தீத் 1:10 |
| 21 | நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? | யோசு 24:3 ஏசா 51:2 மத் 3:9 லூக் 1:73 லூக் 16:24 லூக் 16:30 யோவா 8:39 யோவா 8:53 அப் 7:2 ரோம 4:1 ரோம 4:12 ரோம 4:16 |
| 22 | விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. | யாக் 2:18 கலா 5:6 எபிரெ 11:17-19 |
| 23 | அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். | மாற் 12:10 மாற் 15:28 லூக் 4:21 அப் 1:16 ரோம 9:17 ரோம 11:2 கலா 3:8-10 கலா 3:22-10 2தீமோ 3:16 1பேது 2:6 |
| 24 | ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. | யாக் 2:15-18 யாக் 2:21-18 யாக் 2:22-18 சங் 60:12 |
| 25 | அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? | யோசு 2:1 மத் 1:5 |
| 26 | அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. | யோபு 34:14 யோபு 34:15 சங் 104:29 சங் 146:4 பிரச 12:7 ஏசா 2:22 லூக் 23:46 அப் 7:59 அப் 7:60 |