இணை வசன வேதாகமம்

Click to Subscribe

1பேதுரு 1

                   
புத்தகங்களைக் காட்டு
1இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,மத் 4:18 மத் 10:2 யோவா 1:41 யோவா 1:42 யோவா 21:15-17
2பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.1பேது 2:9 உபா 7:6 ஏசா 65:9 ஏசா 65:22 மத் 24:22 மத் 24:24 மத் 24:31 மாற் 13:20 மாற் 13:22 மாற் 13:27 லூக் 18:7 யோவா 15:16-19 ரோம 8:29 ரோம 8:33 ரோம 11:2 ரோம 11:5-7 ரோம 11:28-7 எபே 1:4 எபே 1:5 கொலோ 3:12 2தீமோ 2:10 தீத் 1:1 2யோவா 1:1 2யோவா 1:13
3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;1இரா 8:15 1நாளா 29:10-13 1நாளா 29:20-13 சங் 41:13 சங் 72:18 சங் 72:19 2கொரி 1:3 எபே 1:3 எபே 1:17 எபே 3:20
4அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.1பேது 3:9 மத் 25:34 அப் 20:32 அப் 26:18 கலா 3:18 எபே 1:11 எபே 1:14 எபே 1:18 கொலோ 1:12 எபிரெ 9:15
5கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.1சாமு 2:9 சங் 37:23 சங் 37:24 சங் 37:28 சங் 103:17 சங் 103:18 சங் 125:1 சங் 125:2 நீதி 2:8 ஏசா 54:17 எரே 32:40 யோவா 4:14 யோவா 5:24 யோவா 10:28-30 யோவா 17:11 யோவா 17:12 யோவா 17:15 ரோம 8:31-39 பிலிப் 1:6 யூதா 1:1 யூதா 1:24
6இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.1பேது 1:8 1பேது 4:13 1சாமு 2:1 சங் 9:14 சங் 35:10 சங் 95:1 ஏசா 12:2 ஏசா 12:3 ஏசா 61:3 ஏசா 61:10 மத் 5:12 லூக் 1:47 லூக் 2:10 லூக் 10:20 யோவா 16:22 ரோம 5:2 ரோம 5:11 ரோம 12:12 2கொரி 6:10 2கொரி 12:9 2கொரி 12:10 கலா 5:22 பிலிப் 3:3 பிலிப் 4:4 1தெச 1:6 யாக் 1:2 யாக் 1:9
7அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.1பேது 4:12 யோபு 23:10 சங் 66:10-12 நீதி 17:3 ஏசா 48:10 எரே 9:7 சகரி 13:9 மல்கி 3:3 ரோம 5:3 ரோம 5:4 யாக் 1:3 யாக் 1:4 யாக் 1:12 வெளிப் 2:10 வெளிப் 3:10
8அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,யோவா 20:29 2கொரி 4:18 2கொரி 5:7 எபிரெ 11:1 எபிரெ 11:27 1யோவா 4:20
9உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.ரோம 6:22 எபிரெ 11:13 யாக் 1:21
10உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;ஆதி 49:10 தானி 2:44 ஆகா 2:7 சகரி 6:12 மத் 13:17 லூக் 10:24 லூக் 24:25-27 லூக் 24:44 அப் 3:22-24 அப் 7:52 அப் 10:43 அப் 13:27-29 அப் 28:23 2பேது 1:19-21
11தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.1பேது 3:18 1பேது 3:19 ரோம 8:9 கலா 4:6 2பேது 1:21 வெளிப் 19:10
12தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.ஏசா 53:1 தானி 2:19 தானி 2:22 தானி 2:28 தானி 2:29 தானி 2:47 தானி 10:1 ஆமோ 3:7 மத் 11:25 மத் 11:27 மத் 16:17 லூக் 2:26 ரோம 1:17 1கொரி 2:10 கலா 1:12 கலா 1:16
13ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.யாத் 12:11 1இரா 18:46 2இரா 4:29 யோபு 38:3 யோபு 40:7 ஏசா 11:5 எரே 1:17 லூக் 12:35 லூக் 17:8 எபே 6:14
14நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,எபே 2:2 எபே 5:6
15உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.1பேது 2:9 1பேது 5:10 ரோம 8:28-30 ரோம 9:24 பிலிப் 3:14 1தெச 2:12 1தெச 4:7 2தீமோ 1:9 2பேது 1:3 2பேது 1:10
16நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.லேவி 11:44 லேவி 19:2 லேவி 20:7 ஆமோ 3:3
17அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.செப் 3:9 மத் 6:9 மத் 7:7-11 2கொரி 1:2 எபே 1:17 எபே 3:14
18உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,சங் 49:7 சங் 49:8 1கொரி 6:20 1கொரி 7:23
19குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.1பேது 2:22-24 1பேது 3:18 தானி 9:24 சகரி 13:7 மத் 20:28 மத் 26:28 அப் 20:28 எபே 1:7 கொலோ 1:14 எபிரெ 9:12-14 1யோவா 1:7 1யோவா 2:2 வெளிப் 1:5 வெளிப் 5:9
20அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.ஆதி 3:15 நீதி 8:23 மீகா 5:2 ரோம 3:25 ரோம 16:25 ரோம 16:26 எபே 1:4 எபே 3:9 எபே 3:11 கொலோ 1:26 2தீமோ 1:9 2தீமோ 1:10 தீத் 1:2 தீத் 1:3 வெளிப் 13:8
21உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.யோவா 5:24 யோவா 12:44 யோவா 14:6 எபிரெ 6:1 எபிரெ 7:25
22ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;யோவா 15:3 யோவா 17:17 யோவா 17:19 அப் 15:9 ரோம 6:16 ரோம 6:17 2தெச 2:13 யாக் 4:8
23அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.1பேது 1:3 யோவா 1:3 யோவா 3:5
24மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.2இரா 19:26 சங் 37:2 சங் 90:5 சங் 92:7 சங் 102:4 சங் 103:15 சங் 129:6 ஏசா 40:6-8 யாக் 1:10 யாக் 1:11 யாக் 4:14 1யோவா 2:17
25கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.1பேது 1:23 சங் 102:12 சங் 102:26 சங் 119:89 ஏசா 40:8 மத் 5:18 லூக் 16:17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.