| 1 | இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். | எபிரெ 6:20 ஆதி 14:18-20 |
| 2 | இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம். | ஆதி 28:22 லேவி 27:32 எண் 18:21 1சாமு 8:15 1சாமு 8:17 |
| 3 | இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். | யாத் 6:18 யாத் 6:20-27 1நாளா 6:1-3 |
| 4 | இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். | அப் 2:29 அப் 7:8 அப் 7:9 |
| 5 | லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள். | எபிரெ 5:4 யாத் 28:1 எண் 16:10 எண் 16:11 எண் 17:3-10 எண் 18:7 எண் 18:21-26 |
| 6 | ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். | எபிரெ 7:4 ஆதி 14:19 ஆதி 14:20 |
| 7 | சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை. | 1தீமோ 3:16 |
| 8 | அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான். | எபிரெ 7:23 எபிரெ 9:27 |
| 9 | அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், | எபிரெ 7:4 ஆதி 14:20 ரோம 5:12 |
| 10 | தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். | எபிரெ 7:5 ஆதி 35:11 ஆதி 46:26 1இரா 8:19 |
| 11 | அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? | எபிரெ 7:18 எபிரெ 7:19 எபிரெ 8:7 எபிரெ 8:10-13 எபிரெ 10:1-4 கலா 2:21 கலா 4:3 கலா 4:9 கொலோ 2:10-17 |
| 12 | ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். | ஏசா 66:21 எரே 31:31-34 எசே 16:61 அப் 6:13 அப் 6:14 |
| 13 | இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. | எண் 16:40 எண் 17:5 2நாளா 26:16-21 |
| 14 | நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. | லூக் 1:43 யோவா 20:13 யோவா 20:28 எபே 1:3 பிலிப் 3:8 |
| 15 | அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. | எபிரெ 7:3 எபிரெ 7:11 எபிரெ 7:17-21 சங் 110:4 |
| 16 | அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், | எபிரெ 9:9 எபிரெ 9:10 எபிரெ 10:1 கலா 4:3 கலா 4:9 கொலோ 2:14 கொலோ 2:20 |
| 17 | நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார். | எபிரெ 7:15 எபிரெ 7:21 எபிரெ 5:6 எபிரெ 5:10 எபிரெ 6:20 சங் 110:4 |
| 18 | முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. | எபிரெ 7:11 எபிரெ 7:12 எபிரெ 8:7-13 எபிரெ 10:1-9 ரோம 3:31 கலா 3:15 கலா 3:17 |
| 19 | நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். | எபிரெ 7:11 எபிரெ 9:9 அப் 13:39 ரோம 3:20 ரோம 3:21 ரோம 8:3 கலா 2:16 |
| 20 | அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார். |
| 21 | ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, | எபிரெ 7:17 சங் 110:4 |
| 22 | அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார். | ஆதி 43:9 ஆதி 44:32 நீதி 6:1 நீதி 20:16 |
| 23 | அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். | எபிரெ 7:8 1நாளா 6:3-14 நெகே 12:10 நெகே 12:11 |
| 24 | இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். | எபிரெ 7:8-25 எபிரெ 7:28-25 எபிரெ 13:8 ஏசா 9:6 ஏசா 9:7 யோவா 12:34 ரோம 6:9 வெளிப் 1:18 |
| 25 | மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். | எபிரெ 2:18 எபிரெ 5:7 ஏசா 45:22 ஏசா 63:1 தானி 3:15 தானி 3:17 தானி 3:29 தானி 6:20 யோவா 5:37-40 யோவா 10:29 யோவா 10:30 எபே 3:20 பிலிப் 3:21 2தீமோ 1:12 யூதா 1:24 |
| 26 | பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். | எபிரெ 7:11 எபிரெ 8:1 எபிரெ 9:23-26 எபிரெ 10:11-22 |
| 27 | அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். | எபிரெ 10:11 யாத் 29:36-42 எண் 28:2-10 |
| 28 | நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது. | எபிரெ 5:1 எபிரெ 5:2 யாத் 32:21 யாத் 32:22 லேவி 4:3 |