| 1 | இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; | கொலோ 1:22 கொலோ 3:12 1தெச 5:27 2தீமோ 1:9 1பேது 2:9 1பேது 3:5 2பேது 1:3-10 வெளிப் 18:20 |
| 2 | மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். | எபிரெ 2:17 யோவா 6:38-40 யோவா 7:18 யோவா 8:29 யோவா 15:10 யோவா 17:4 |
| 3 | வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார். | எபிரெ 3:6 எபிரெ 1:2-4 எபிரெ 2:9 கொலோ 1:18 |
| 4 | ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். | எபிரெ 3:3 எபிரெ 1:2 எஸ்தர் 2:10 எஸ்தர் 3:9 |
| 5 | சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். | எபிரெ 3:2 எண் 12:7 மத் 24:45 மத் 25:21 லூக் 12:42 லூக் 16:10-12 1கொரி 4:2 1தீமோ 1:12 |
| 6 | கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம். | எபிரெ 1:2 எபிரெ 4:14 சங் 2:6 சங் 2:7 சங் 2:12 ஏசா 9:6 ஏசா 9:7 யோவா 3:35 யோவா 3:36 வெளிப் 2:18 |
| 7 | ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், | எபிரெ 9:8 2சாமு 23:2 மத் 22:43 மாற் 12:36 அப் 1:16 அப் 28:25 2பேது 1:21 |
| 8 | வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். | எபிரெ 3:12 எபிரெ 3:13 யாத் 8:15 1சாமு 6:6 2இரா 17:14 2நாளா 30:8 2நாளா 36:13 நெகே 9:16 யோபு 9:4 நீதி 28:14 நீதி 29:1 எரே 7:26 எசே 3:7-9 தானி 5:20 சகரி 7:11 சகரி 7:12 மத் 13:15 அப் 19:9 ரோம 2:5 ரோம 2:6 |
| 9 | அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். | யாத் 19:4 யாத் 20:22 உபா 4:3 உபா 4:9 உபா 11:7 உபா 29:2 யோசு 23:3 யோசு 24:7 லூக் 7:22 |
| 10 | ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; | ஆதி 6:6 நியா 10:16 சங் 78:40 ஏசா 63:10 மாற் 3:5 எபே 4:30 |
| 11 | என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். | எபிரெ 3:18 எபிரெ 3:19 எபிரெ 4:3 எண் 14:20-23 எண் 14:25-23 எண் 14:27-30 எண் 14:35-30 எண் 32:10-13 உபா 1:34 உபா 1:35 உபா 2:14 |
| 12 | சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். | எபிரெ 2:1-3 எபிரெ 12:15 மத் 24:4 மாற் 13:9 மாற் 13:23 மாற் 13:33 லூக் 21:8 ரோம 11:21 1கொரி 10:12 |
| 13 | உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். | எபிரெ 10:24 எபிரெ 10:25 அப் 11:23 1தெச 2:11 1தெச 4:18 1தெச 5:11 2தீமோ 4:2 |
| 14 | நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். | எபிரெ 3:1 எபிரெ 6:4 எபிரெ 12:10 ரோம 11:17 1கொரி 1:30 1கொரி 9:23 1கொரி 10:17 எபே 3:6 1தீமோ 6:2 1பேது 4:13 1பேது 5:1 1யோவா 1:3 |
| 15 | இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. | எபிரெ 3:7 எபிரெ 3:8 எபிரெ 10:38 எபிரெ 10:29 |
| 16 | கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? | எபிரெ 3:9 எபிரெ 3:10 எண் 14:2 எண் 14:4 எண் 26:65 சங் 78:17 |
| 17 | மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. | எண் 26:64 எண் 26:65 1கொரி 10:1-13 |
| 18 | பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? | எபிரெ 3:11 எண் 14:30 உபா 1:34 உபா 1:35 |
| 19 | ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம். | மாற் 16:16 யோவா 3:18 யோவா 3:36 2தெச 2:12 1யோவா 5:10 யூதா 1:5 |