| 1 | கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. | 1தீமோ 1:15 1தீமோ 4:9 2தீமோ 2:11 தீத் 3:8 |
| 2 | ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். | தீத் 1:6-9 |
| 3 | அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, | 1தீமோ 3:8 லேவி 10:9 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 28:1 ஏசா 28:7 ஏசா 56:12 எசே 44:21 மீகா 2:11 மத் 24:45-51 லூக் 12:42-46 லூக் 21:34-36 எபே 5:18 தீத் 1:7 தீத் 2:3 |
| 4 | தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். | 1தீமோ 3:12 ஆதி 18:19 யோசு 24:15 சங் 101:2-8 அப் 10:2 தீத் 1:6 |
| 5 | ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? | 1சாமு 2:29 1சாமு 2:30 1சாமு 3:13 |
| 6 | அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. | 1கொரி 3:1 எபிரெ 5:12 எபிரெ 5:13 1பேது 2:2 |
| 7 | அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். | 1தீமோ 5:24 1தீமோ 5:25 1சாமு 2:24 அப் 6:3 அப் 10:22 அப் 22:12 3யோவா 1:12 |
| 8 | அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும், | அப் 6:3-6 பிலிப் 1:1 |
| 9 | விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். | 1தீமோ 1:5 1தீமோ 1:19 |
| 10 | மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம். | 1தீமோ 3:6 1தீமோ 5:22 1யோவா 4:1 |
| 11 | அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும். | லேவி 21:7 லேவி 21:13-15 எசே 44:22 லூக் 1:5-6 தீத் 2:3 |
| 12 | மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். | 1தீமோ 3:2 1தீமோ 3:4 1தீமோ 3:5 |
| 13 | இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். | மத் 25:21 லூக் 16:10-12 லூக் 19:17 |
| 14 | நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். | 1தீமோ 4:13 1கொரி 11:34 1கொரி 16:5-7 2கொரி 1:15-17 1தெச 2:18 பிலேமோ 1:22 எபிரெ 13:23 2யோவா 1:12 3யோவா 1:14 |
| 15 | தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. | 1தீமோ 3:2 உபா 31:23 1இரா 2:2 1இரா 2:4 1நாளா 22:13 1நாளா 28:9-21 அப் 1:2 |
| 16 | அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். | எபிரெ 7:7 |