| 1 | நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்; | 2கொரி 8:6 எபே 3:13 எபிரெ 6:11 |
| 2 | நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். | எஸ்றா 6:10 நெகே 1:11 சங் 20:1-4 சங் 72:1 எரே 29:7 |
| 3 | நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. | 1தீமோ 5:4 ரோம 12:1 ரோம 12:2 ரோம 14:18 எபே 5:9 எபே 5:10 பிலிப் 1:11 பிலிப் 4:18 கொலோ 1:10 1தெச 4:1 எபிரெ 13:16 1பேது 2:5 1பேது 2:20 |
| 4 | எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். | ஏசா 45:22 ஏசா 49:6 ஏசா 55:1 எசே 18:23 எசே 18:32 எசே 33:11 லூக் 14:23 யோவா 3:15-17 யோவா 6:37 ரோம 3:29 ரோம 3:30 2கொரி 5:17-19 1தெச 2:15 1தெச 2:16 தீத் 2:11 2பேது 3:9 |
| 5 | தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. | உபா 6:4 ஏசா 44:6 மாற் 12:29-33 யோவா 17:3 ரோம 3:29 ரோம 3:30 ரோம 10:12 1கொரி 8:6 கலா 3:20 எபே 4:6 |
| 6 | எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. | யோபு 33:24 ஏசா 53:6 மத் 20:28 மாற் 10:45 யோவா 6:51 யோவா 10:15 2கொரி 5:14 2கொரி 5:15 2கொரி 5:21 எபே 1:7 எபே 1:17 எபே 5:2 தீத் 2:14 எபிரெ 9:12 1பேது 1:18 1பேது 1:19 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:1 1யோவா 2:2 1யோவா 4:10 வெளிப் 1:5 வெளிப் 5:9 |
| 7 | இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிறபோதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன். | 1தீமோ 1:11 1தீமோ 1:12 |
| 8 | அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன். | 1தீமோ 5:14 1கொரி 7:7 தீத் 3:8 |
| 9 | ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், | 1பேது 3:3-5 |
| 10 | தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். | 1பேது 3:3-5 2பேது 3:11 |
| 11 | ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். | ஆதி 3:16 எஸ்தர் 1:20 1கொரி 11:3 1கொரி 14:34 1கொரி 14:35 எபே 5:22-24 கொலோ 3:18 1பேது 3:1 1பேது 3:5 1பேது 3:6 |
| 12 | உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். |
| 13 | என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். | ஆதி 1:27 ஆதி 2:7 ஆதி 2:18 ஆதி 2:22 1கொரி 11:8 1கொரி 11:9 |
| 14 | மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். | ஆதி 3:6 ஆதி 3:12 2கொரி 11:3 |
| 15 | அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். | ஆதி 3:15 ஏசா 7:14 ஏசா 9:6 எரே 31:22 மத் 1:21-25 லூக் 2:7 லூக் 2:10 லூக் 2:11 கலா 4:4 கலா 4:5 |