| 1 | நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், | ரோம 1:1 1கொரி 1:1 |
| 2 | விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. | அப் 16:1-3 1தெச 3:2 |
| 3 | வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, | அப் 19:1-10 |
| 4 | நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக. | 1தீமோ 4:7 1தீமோ 6:4 1தீமோ 6:20 2தீமோ 2:14 2தீமோ 2:16-18 2தீமோ 4:4 தீத் 1:14 2பேது 1:16 |
| 5 | கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. | ரோம 10:4 ரோம 13:8-10 கலா 5:13 கலா 5:14 கலா 5:22 1யோவா 4:7-14 |
| 6 | இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள். | 1தீமோ 6:21 2தீமோ 2:18 2தீமோ 4:10 |
| 7 | தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். | அப் 15:1 ரோம 2:19-21 கலா 3:2 கலா 3:5 கலா 4:21 கலா 5:3 கலா 5:4 தீத் 1:10 தீத் 1:11 |
| 8 | ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். | உபா 4:6-8 நெகே 9:13 சங் 19:7-10 சங் 119:96-105 சங் 119:127-105 சங் 119:128-105 ரோம 7:12 ரோம 7:13 ரோம 7:16 ரோம 7:18 ரோம 7:22 ரோம 12:2 கலா 3:21 |
| 9 | எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், | ரோம 4:13 ரோம 5:20 ரோம 6:14 கலா 3:10-14 கலா 3:19-14 கலா 5:23 |
| 10 | வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், | மாற் 7:21 மாற் 7:22 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19-21 எபே 5:3-6 எபிரெ 13:4 |
| 11 | நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. | ரோம 2:16 |
| 12 | என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். | யோவா 5:23 பிலிப் 2:11 வெளிப் 5:9-14 வெளிப் 7:10-12 |
| 13 | முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். | அப் 8:3 அப் 9:1 அப் 9:5 அப் 9:13 அப் 22:4 அப் 26:9-11 1கொரி 15:9 கலா 1:13 பிலிப் 3:6 |
| 14 | நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. | அப் 15:11 ரோம 16:20 2கொரி 8:9 2கொரி 13:14 வெளிப் 22:21 |
| 15 | பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். | 1தீமோ 1:19 1தீமோ 3:1 1தீமோ 4:9 2தீமோ 2:11 தீத் 3:8 வெளிப் 21:5 வெளிப் 22:6 |
| 16 | அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன். | எண் 23:3 சங் 25:11 ஏசா 1:18 ஏசா 43:25 எபே 1:6 எபே 1:12 எபே 2:7 2தெச 1:10 |
| 17 | நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். | 1தீமோ 6:15 1தீமோ 6:16 சங் 10:16 சங் 45:1 சங் 45:6 சங் 47:6-8 சங் 90:2 சங் 145:13 எரே 10:10 தானி 2:44 தானி 7:14 மீகா 5:2 மல்கி 1:14 மத் 6:13 மத் 25:34 ரோம 1:23 எபிரெ 1:8-13 வெளிப் 17:14 வெளிப் 19:16 |
| 18 | குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. | 1தீமோ 1:11 1தீமோ 1:12 1தீமோ 4:14 1தீமோ 6:13 1தீமோ 6:14 1தீமோ 6:20 2தீமோ 2:2 2தீமோ 4:1-3 |
| 19 | இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். | 1தீமோ 1:5 1தீமோ 3:9 தீத் 1:9 எபிரெ 3:14 1பேது 3:15 1பேது 3:16 வெளிப் 3:3 வெளிப் 3:8 வெளிப் 3:10 |
| 20 | இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன். | 2தீமோ 2:17 |