இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எபேசியர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,எபே 4:32 லேவி 11:45 மத் 5:45 மத் 5:48 லூக் 6:35 லூக் 6:36 1பேது 1:15 1பேது 1:16 1யோவா 4:11
2கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.எபே 3:17 எபே 4:2 எபே 4:15 யோவா 13:34 ரோம 14:16 1கொரி 16:14 கொலோ 3:14 1தெச 4:9 1தீமோ 4:12 1பேது 4:8 1யோவா 3:11 1யோவா 3:12 1யோவா 3:23 1யோவா 4:20 1யோவா 4:21
3மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.எபே 5:5 எபே 4:19 எபே 4:20 எண் 25:1 உபா 23:17 உபா 23:18 மத் 15:19 மாற் 7:21 அப் 15:20 ரோம 1:29 ரோம 6:13 1கொரி 5:10 1கொரி 5:11 1கொரி 6:9 1கொரி 6:13 1கொரி 6:18 1கொரி 10:8 2கொரி 12:21 கலா 5:19-21 கொலோ 3:5 1தெச 4:3 1தெச 4:7 எபிரெ 12:16 எபிரெ 13:4 2பேது 2:10 வெளிப் 2:14 வெளிப் 2:21 வெளிப் 9:21 வெளிப் 21:8 வெளிப் 22:15
4அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.எபே 4:29 நீதி 12:23 நீதி 15:2 பிரச 10:13 மத் 12:34-37 மாற் 7:22 கொலோ 3:8 யாக் 3:4-8 2பேது 2:7 2பேது 2:18 யூதா 1:10 யூதா 1:13
5விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19 கலா 5:21
6இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;எரே 29:8 எரே 29:9 எரே 29:31 எசே 13:10-16 மீகா 3:5 மத் 24:4 மத் 24:24 மாற் 13:5 மாற் 13:22 கலா 6:7 கலா 6:8 கொலோ 2:4 கொலோ 2:8 கொலோ 2:18 2தெச 2:3 2தெச 2:10-12 1யோவா 4:1
7அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.எபே 5:11 எண் 16:26 சங் 50:18 நீதி 1:10-17 நீதி 9:6 நீதி 13:20 1தீமோ 5:22 வெளிப் 18:4
8முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.எபே 2:11 எபே 2:12 எபே 4:18 எபே 6:12 சங் 74:20 ஏசா 9:2 ஏசா 42:16 ஏசா 60:2 எரே 13:16 மத் 4:16 லூக் 1:79 அப் 17:30 அப் 26:18 ரோம 1:21 ரோம 2:19 2கொரி 6:14 கொலோ 1:13 தீத் 3:3 1பேது 2:9 1யோவா 2:8
9ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.கலா 5:22 கலா 5:23
10கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.1சாமு 17:39 ரோம 12:1 ரோம 12:2 பிலிப் 1:10 1தெச 5:21
11கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.எபே 5:7 ஆதி 49:5-7 சங் 1:1 சங் 1:2 சங் 26:4 சங் 26:5 சங் 94:20 சங் 94:21 நீதி 4:14 நீதி 4:15 நீதி 9:6 எரே 15:17 ரோம 16:17 1கொரி 5:9-11 1கொரி 10:20 1கொரி 10:21 2கொரி 6:14-18 2தெச 3:6 2தெச 3:14 1தீமோ 6:5 2தீமோ 3:5 2யோவா 1:10 2யோவா 1:11 வெளிப் 18:4
12அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.எபே 5:3 ரோம 1:24-27 1பேது 4:3
13அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.புலம் 2:14 ஓசி 2:10 ஓசி 7:1
14ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.ஏசா 51:17 ஏசா 52:1 ஏசா 60:1 ரோம 13:11 ரோம 13:12 1கொரி 15:34 1தெச 5:6 2தீமோ 2:26
15ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,எபே 5:33 மத் 8:4 மத் 27:4 மத் 27:24 1தெச 5:15 எபிரெ 12:25 1பேது 1:22 வெளிப் 19:10
16நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.பிரச 9:10 ரோம 13:11 கலா 6:10 கொலோ 4:5
17ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.எபே 5:15 கொலோ 4:5
18துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;ஆதி 9:21 ஆதி 19:32-35 உபா 21:20 சங் 69:12 நீதி 20:1 நீதி 23:20 நீதி 23:21 நீதி 23:29-35 ஏசா 5:11-13 ஏசா 5:22-13 மத் 24:49 லூக் 12:45 லூக் 21:34 ரோம 13:13 1கொரி 5:11 1கொரி 6:10 1கொரி 11:21 கலா 5:21 1தெச 5:7
19சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,அப் 16:25 1கொரி 14:26 கொலோ 3:16 யாக் 5:13
20நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,எபே 5:4 யோபு 1:21 சங் 34:1 ஏசா 63:7 அப் 5:41 1கொரி 1:4 பிலிப் 1:3 பிலிப் 4:6 கொலோ 1:11 கொலோ 1:12 கொலோ 3:17 1தெச 3:9 1தெச 5:18 2தெச 1:3 2தெச 2:13
21தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.எபே 5:22 எபே 5:24 ஆதி 16:9 1நாளா 29:24 ரோம 13:1-5 1கொரி 16:16 பிலிப் 2:3 1தீமோ 2:11 1தீமோ 3:4 எபிரெ 13:17 1பேது 2:13 1பேது 5:5
22மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள்.எபே 5:24 ஆதி 3:16 எஸ்தர் 1:16-18 எஸ்தர் 1:20-18 1கொரி 14:34 கொலோ 3:18-25 1தீமோ 2:11 1தீமோ 2:12 தீத் 2:5 1பேது 3:1-6
23கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.1கொரி 11:3-10
24ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.எபே 5:33 யாத் 23:13 யாத் 29:35 கொலோ 3:20 கொலோ 3:22 தீத் 2:7 தீத் 2:9
25புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,எபே 5:28 ஆதி 2:24 ஆதி 24:67 2சாமு 12:3 நீதி 5:18 நீதி 5:19 கொலோ 3:19 1பேது 3:7
26தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,யோவா 17:17-19 அப் 26:18 1கொரி 6:11 தீத் 2:14 எபிரெ 9:14 எபிரெ 10:10 1பேது 1:2 யூதா 1:1
27கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.2கொரி 4:14 2கொரி 11:2 கொலோ 1:22 கொலோ 1:28 யூதா 1:24
28அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.எபே 5:31 எபே 5:33 ஆதி 2:21-24 மத் 19:5
29தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.எபே 5:31 நீதி 11:17 பிரச 4:5 ரோம 1:31
30நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.எபே 1:23 ஆதி 2:23 ரோம 12:5 1கொரி 6:15 1கொரி 12:12-27 கொலோ 2:19
31இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.ஆதி 2:24 மத் 19:5 மாற் 10:7 மாற் 10:8 1கொரி 6:16
32இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.எபே 6:19 கொலோ 2:2 1தீமோ 3:8 1தீமோ 3:16
33எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.எபே 5:25 எபே 5:28 எபே 5:29 கொலோ 3:19 1பேது 3:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.