இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எபேசியர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,எபே 3:1
2மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,எண் 12:3 சங் 45:4 சங் 138:6 நீதி 3:34 நீதி 16:19 ஏசா 57:15 ஏசா 61:1-3 செப் 2:3 சகரி 9:9 மத் 5:3-5 மத் 11:29 அப் 20:19 1கொரி 13:4 1கொரி 13:5 கலா 5:22 கலா 5:23 கொலோ 3:12 கொலோ 3:13 1தீமோ 6:11 2தீமோ 2:25 யாக் 1:21 யாக் 3:15-18 1பேது 3:15
3சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.எபே 4:4 யோவா 13:34 யோவா 17:21-23 ரோம 14:17-19 1கொரி 1:10 1கொரி 12:12 1கொரி 12:13 2கொரி 13:11 கொலோ 3:13-15 1தெச 5:13 எபிரெ 12:14 யாக் 3:17 யாக் 3:18
4உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;எபே 2:16 எபே 5:30 ரோம 12:4 ரோம 12:5 1கொரி 10:17 1கொரி 12:12 1கொரி 12:13 1கொரி 12:20 கொலோ 3:15
5ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,அப் 2:36 அப் 10:36 ரோம 14:8 ரோம 14:9 1கொரி 1:2 1கொரி 1:13 1கொரி 8:6 1கொரி 12:5 பிலிப் 2:11 பிலிப் 3:8
6எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.எபே 6:23 எண் 16:22 ஏசா 63:16 மல்கி 2:10 மத் 6:9 யோவா 20:17 1கொரி 8:6 1கொரி 12:6 கலா 3:26-28 கலா 4:3-7 1யோவா 3:1-3
7கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.எபே 4:8-14 மத் 25:15 ரோம 12:6-8 1கொரி 12:8-11 1கொரி 12:28-30
8ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.சங் 68:18
9ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?நீதி 30:4 யோவா 3:13 யோவா 6:33 யோவா 6:62 யோவா 20:17 அப் 2:34-36
10இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.எபே 1:20-23 அப் 1:9 அப் 1:11 1தீமோ 3:16 எபிரெ 4:14 எபிரெ 7:26 எபிரெ 8:1 எபிரெ 9:23 எபிரெ 9:24
11மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,எபே 4:8 எபே 2:20 எபே 3:5 ரோம 10:14 ரோம 10:15 1கொரி 12:28 யூதா 1:17 வெளிப் 18:20 வெளிப் 21:14
12பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,லூக் 22:32 யோவா 21:15-17 அப் 9:31 அப் 11:23 அப் 14:22 அப் 14:23 அப் 20:28 ரோம 15:14 ரோம 15:29 1கொரி 12:7 2கொரி 7:1 பிலிப் 1:25 பிலிப் 1:26 பிலிப் 3:12-18 கொலோ 1:28 1தெச 5:11-14 எபிரெ 6:1 எபிரெ 13:17
13அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.எபே 4:3 எபே 4:5 எரே 32:38 எரே 32:39 எசே 37:21 எசே 37:22 செப் 3:9 சகரி 14:9 யோவா 17:21 அப் 4:32 1கொரி 1:10 பிலிப் 2:1-3
14நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,ஏசா 28:9 மத் 18:3 மத் 18:4 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 14:20 எபிரெ 5:12-14
15அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.எபே 4:25 சகரி 8:16 2கொரி 4:2 2கொரி 8:8
16அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.எபே 4:12 யோவா 15:5
17ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.1கொரி 1:12 1கொரி 15:50 2கொரி 9:6 கலா 3:17 கொலோ 2:4
18அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;சங் 74:20 சங் 115:4-8 ஏசா 44:18-20 ஏசா 46:5-8 அப் 17:30 அப் 26:17 அப் 26:18 ரோம 1:21-23 ரோம 1:28-23 1கொரி 1:21 2கொரி 4:4 கலா 4:8 1தெச 4:5
19உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.1தீமோ 4:2
20நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.லூக் 24:47 யோவா 6:45 ரோம 6:1 ரோம 6:2 2கொரி 5:14 2கொரி 5:15 தீத் 2:11-14 1யோவா 2:27
21இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.மத் 17:5 லூக் 10:16 யோவா 10:27 அப் 3:22 அப் 3:23 எபிரெ 3:7 எபிரெ 3:8
22அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,எபே 4:25 1சாமு 1:14 யோபு 22:23 எசே 18:30-32 கொலோ 2:11 கொலோ 3:8 கொலோ 3:9 எபிரெ 12:1 யாக் 1:21 1பேது 2:1 1பேது 2:2
23உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,எபே 2:10 சங் 51:10 எசே 11:19 எசே 18:31 எசே 36:26 ரோம 12:2 கொலோ 3:10 தீத் 3:5
24மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.எபே 6:11 யோபு 29:14 ஏசா 52:1 ஏசா 59:17 ரோம 13:12 ரோம 13:14 1கொரி 15:53 கலா 3:27 கொலோ 3:10-14
25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.லேவி 19:11 1இரா 13:18 சங் 52:3 சங் 119:29 நீதி 6:17 நீதி 12:19 நீதி 12:22 நீதி 21:6 ஏசா 9:15 ஏசா 59:3 ஏசா 59:4 ஏசா 63:8 எரே 9:3-5 ஓசி 4:2 யோவா 8:44 அப் 5:3 அப் 5:4 கொலோ 3:9 1தீமோ 1:10 1தீமோ 4:2 தீத் 1:2 தீத் 1:12 வெளிப் 21:8 வெளிப் 22:15
26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;எபே 4:31 எபே 4:32 யாத் 11:8 யாத் 32:21 யாத் 32:22 எண் 20:10-13 எண் 20:24-13 எண் 25:7-11 நெகே 5:6-13 சங் 4:4 சங் 37:8 சங் 106:30-33 நீதி 14:29 நீதி 19:11 நீதி 25:23 பிரச 7:9 மத் 5:22 மாற் 3:5 மாற் 10:14 ரோம 12:19-21 யாக் 1:19
27பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.எபே 6:11 எபே 6:16 அப் 5:3 2கொரி 2:10 2கொரி 2:11 யாக் 4:7 1பேது 5:8
28திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.யாத் 20:15 யாத் 20:17 யாத் 21:16 நீதி 30:9 எரே 7:9 ஓசி 4:2 சகரி 5:3 யோவா 12:6 1கொரி 6:10 1கொரி 6:11
29கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.எபே 5:3 எபே 5:4 சங் 5:9 சங் 52:2 சங் 73:7-9 மத் 12:34-37 ரோம 3:13 ரோம 3:14 1கொரி 15:32 1கொரி 15:33 கொலோ 3:8 கொலோ 3:9 கொலோ 4:6 யாக் 3:2-8 2பேது 2:18 யூதா 1:13-16 வெளிப் 13:5 வெளிப் 13:6
30அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.ஆதி 6:3 ஆதி 6:6 நியா 10:16 சங் 78:40 சங் 95:10 ஏசா 7:13 ஏசா 43:24 ஏசா 63:10 எசே 16:43 மாற் 3:5 அப் 7:51 1தெச 5:19 எபிரெ 3:10 எபிரெ 3:17
31சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.சங் 64:3 ரோம 3:14 கொலோ 3:8 கொலோ 3:19 யாக் 3:14 யாக் 3:15
32ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.ரூத் 2:20 சங் 112:4 சங் 112:5 சங் 112:9 நீதி 19:22 ஏசா 57:1 லூக் 6:35 அப் 28:2 ரோம 12:10 1கொரி 13:4 2கொரி 2:10 2கொரி 6:6 கொலோ 3:12 கொலோ 3:13 2பேது 1:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.