இணை வசன வேதாகமம்

Click to Subscribe

கலாத்தியர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.கலா 3:3 உபா 32:6 1சாமு 13:13 மத் 7:26 லூக் 24:25 எபே 5:15 1தீமோ 6:4
2ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?கலா 3:5 கலா 3:14 அப் 2:38 அப் 8:15 அப் 10:44-47 அப் 11:15-18 அப் 15:8 அப் 19:2-6 1கொரி 12:7-13 2கொரி 11:4 எபே 1:13 எபே 1:14 எபிரெ 2:4 எபிரெ 6:4 1பேது 1:12
3ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?கலா 4:7-10 கலா 5:4-8 கலா 6:12-14 எபிரெ 7:16-19 எபிரெ 9:2 எபிரெ 9:9 எபிரெ 9:10
4இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.எசே 18:24 எபிரெ 6:4-6 எபிரெ 10:32-39 2பேது 2:20-22 2யோவா 1:8
5அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?கலா 3:2 2கொரி 3:8
6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.கலா 3:9 ஆதி 15:6 ரோம 4:3-6 ரோம 4:9-6 ரோம 4:10-6 ரோம 4:21-6 ரோம 4:22-6 ரோம 9:32 ரோம 9:33 யாக் 2:23
7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.சங் 100:3 லூக் 21:31 எபிரெ 13:23
8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.கலா 3:22 கலா 4:30 யோவா 7:38 யோவா 7:42 யோவா 19:37 ரோம 9:17 2தீமோ 3:15-17
9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.கலா 3:7 கலா 3:8 கலா 3:14 கலா 3:29 கலா 4:28 ரோம 4:11 ரோம 4:16 ரோம 4:24
10நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.கலா 2:16 லூக் 18:9-13 ரோம 4:15 ரோம 7:9-13 ரோம 8:7
11நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.கலா 2:16 1இரா 8:46 யோபு 9:3 யோபு 40:4 யோபு 42:6 சங் 19:12 சங் 130:3 சங் 130:4 சங் 143:2 பிரச 7:20 ஏசா 6:5 ஏசா 53:6 ஏசா 64:6 யாக் 3:2 1யோவா 1:8-10 வெளிப் 5:9 வெளிப் 7:14 வெளிப் 7:15
12நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.ரோம 4:4 ரோம 4:5 ரோம 4:14 ரோம 4:16 ரோம 9:30-32 ரோம 10:5 ரோம 10:6 ரோம 11:6
13மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.கலா 3:10 கலா 4:5 ஏசா 55:5-7 ஏசா 55:10-12 தானி 9:24 தானி 9:26 சகரி 13:7 மத் 26:28 ரோம 3:24-26 ரோம 4:25 ரோம 8:3 ரோம 8:4 2கொரி 5:21 எபே 5:2 தீத் 2:14 எபிரெ 7:26 எபிரெ 7:27 எபிரெ 9:12 எபிரெ 9:15 எபிரெ 9:26 எபிரெ 9:28 எபிரெ 10:4-10 1பேது 1:18-21 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:1 1யோவா 2:2 1யோவா 4:10 வெளிப் 1:5 வெளிப் 5:9 வெளிப் 13:8
14ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.கலா 3:6-9 கலா 3:29-9 ஆதி 12:2 ஆதி 12:3 ஏசா 41:8 ஏசா 51:2 ஏசா 51:3 ரோம 4:3-17
15சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை.ரோம 6:19 1கொரி 15:32
16ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.கலா 3:8 ஆதி 12:3 ஆதி 12:7 ஆதி 13:15 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 21:12 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 28:13 ஆதி 28:14 ஆதி 49:10
17ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.கலா 5:16 1கொரி 1:12 1கொரி 7:29 1கொரி 10:19 2கொரி 9:6 எபே 4:17 கொலோ 2:4
18அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.கலா 3:10 கலா 3:12 கலா 3:26 கலா 3:29 கலா 2:21 ரோம 4:13-16 ரோம 8:17
19அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.ரோம 3:1 ரோம 3:2 ரோம 7:7-13
20மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.யோபு 9:33 அப் 12:20 1தீமோ 2:5
21அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.மத் 5:17-20 ரோம 3:31 ரோம 7:7-13
22அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.கலா 3:8-10 கலா 3:23-10 சங் 143:2 ரோம 3:9-20 ரோம 3:23-20 ரோம 5:12 ரோம 5:20 ரோம 11:32
23ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.கலா 3:19 கலா 3:24 கலா 3:25 கலா 4:1-4 எபிரெ 12:2
24இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.கலா 3:25 கலா 2:19 கலா 4:2 கலா 4:3 மத் 5:17 மத் 5:18 அப் 13:38 அப் 13:39 ரோம 3:20-22 ரோம 7:7-9 ரோம 7:24-9 ரோம 7:25-9 ரோம 10:4 கொலோ 2:17 எபிரெ 7:18 எபிரெ 7:19 எபிரெ 9:8-16 எபிரெ 10:1-14
25விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.கலா 4:1-6 ரோம 6:14 ரோம 7:4 எபிரெ 7:11-19 எபிரெ 8:3-13 எபிரெ 10:15-18
26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.கலா 4:5 கலா 4:6 யோவா 1:12 யோவா 1:13 யோவா 20:17 ரோம 8:14-17 2கொரி 6:18 எபே 1:5 எபே 5:1 பிலிப் 2:15 எபிரெ 2:10-15 1யோவா 3:1 1யோவா 3:2 வெளிப் 21:7
27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.மத் 28:19 மத் 28:20 மாற் 16:15 மாற் 16:16 அப் 2:38 அப் 8:36-38 அப் 9:18 அப் 16:15 அப் 16:31-33 ரோம 6:3 ரோம 6:4 1கொரி 12:13 கொலோ 2:10-12 1பேது 3:21
28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.கலா 5:6 ரோம 1:16 ரோம 2:9 ரோம 2:10 ரோம 3:29 ரோம 3:30 ரோம 4:11 ரோம 4:12 ரோம 9:24 ரோம 10:12-15 1கொரி 7:19 1கொரி 12:13 எபே 3:5-10 கொலோ 3:11
29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.கலா 5:24 1கொரி 3:23 1கொரி 15:23 2கொரி 10:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.