| 1 | நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். | 1கொரி 4:16 1கொரி 10:33 பிலிப் 3:17 1தெச 1:6 2தெச 3:9 எபிரெ 6:12 |
| 2 | சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன். | 1கொரி 11:17 1கொரி 11:22 நீதி 31:28-31 |
| 3 | ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். | எபே 1:22 எபே 1:23 எபே 4:15 எபே 5:23 பிலிப் 2:10 பிலிப் 2:11 கொலோ 1:18 கொலோ 2:10 கொலோ 2:19 |
| 4 | ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். | 1கொரி 12:10 1கொரி 12:28 1கொரி 14:1-25 |
| 5 | ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. | லூக் 2:36 அப் 2:17 அப் 21:9 |
| 6 | ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். | எண் 5:18 உபா 22:5 |
| 7 | புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். | ஆதி 1:26 ஆதி 1:27 ஆதி 5:1 ஆதி 9:6 சங் 8:6 யாக் 3:9 |
| 8 | புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். | ஆதி 2:21 ஆதி 2:22 1தீமோ 2:13 |
| 9 | புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். | ஆதி 2:18 ஆதி 2:20 ஆதி 2:23 ஆதி 2:24 |
| 10 | ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். | ஆதி 20:16 ஆதி 24:64 ஆதி 24:65 |
| 11 | ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. | 1கொரி 7:10-14 1கொரி 12:12-22 கலா 3:28 |
| 12 | ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது. | 1கொரி 8:6 நீதி 16:4 ரோம 11:36 எபிரெ 1:2 எபிரெ 1:3 |
| 13 | ஸ்திரீயானவள் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள். | 1கொரி 10:15 லூக் 12:57 யோவா 7:24 |
| 14 | புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும், | 2சாமு 14:26 |
| 15 | ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. |
| 16 | ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன். | 1தீமோ 6:3 1தீமோ 6:4 |
| 17 | உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே. | 1கொரி 11:2 1கொரி 11:22 லேவி 19:17 நீதி 27:5 ரோம 13:3 1பேது 2:14 |
| 18 | முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். | 1கொரி 1:10-12 1கொரி 3:3 1கொரி 5:1 1கொரி 6:1 |
| 19 | உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. | மத் 18:7 லூக் 17:1 அப் 20:30 1தீமோ 4:1 1தீமோ 4:2 2பேது 2:1 2பேது 2:2 |
| 20 | நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான். |
| 21 | இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே. | 1கொரி 11:23-25 1கொரி 10:16-18 |
| 22 | புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன். | 1கொரி 10:32 1கொரி 15:9 அப் 20:28 1தீமோ 3:5 1தீமோ 3:15 |
| 23 | நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, | 1கொரி 15:3 உபா 4:5 மத் 28:20 கலா 1:1 கலா 1:11 கலா 1:12 1தெச 4:2 |
| 24 | ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். | 1கொரி 5:7 1கொரி 5:8 சங் 22:26 சங் 22:29 நீதி 9:5 உன்ன 5:1 ஏசா 25:6 ஏசா 55:1-3 யோவா 6:53-58 |
| 25 | போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். | 1கொரி 11:27 1கொரி 11:28 |
| 26 | ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். | 1கொரி 4:5 1கொரி 15:23 யோவா 14:3 யோவா 21:22 அப் 1:11 1தெச 4:16 2தெச 1:10 2தெச 2:2 2தெச 2:3 எபிரெ 9:28 2பேது 3:10 1யோவா 2:28 யூதா 1:14 வெளிப் 1:7 வெளிப் 20:11 வெளிப் 20:12 வெளிப் 22:20 |
| 27 | இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். | 1கொரி 10:21 லேவி 10:1-3 எண் 9:10 எண் 9:13 2நாளா 30:18-20 மத் 22:11 யோவா 6:51 யோவா 6:63 யோவா 6:64 யோவா 13:18-27 |
| 28 | எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். | 1கொரி 11:31 சங் 26:2-7 புலம் 3:40 ஆகா 1:5 ஆகா 1:7 சகரி 7:5-7 2கொரி 13:5 கலா 6:4 1யோவா 3:20 1யோவா 3:21 |
| 29 | என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். | 1கொரி 11:30 1கொரி 11:32-34 ரோம 13:2 யாக் 3:1 யாக் 5:12 |
| 30 | இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். | 1கொரி 11:32 யாத் 15:26 எண் 20:12 எண் 20:24 எண் 21:6-9 2சாமு 12:14-18 1இரா 13:21-24 சங் 38:1-8 சங் 78:30 சங் 78:31 சங் 89:31-34 ஆமோ 3:2 எபிரெ 12:5-11 வெளிப் 3:19 |
| 31 | நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். | 1கொரி 11:28 சங் 32:3-5 எரே 31:18-20 லூக் 15:18-20 1யோவா 1:9 வெளிப் 2:5 வெளிப் 3:2 வெளிப் 3:3 |
| 32 | நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். | 1கொரி 11:30 உபா 8:5 யோபு 5:17 யோபு 5:18 யோபு 33:18-30 யோபு 34:31 யோபு 34:32 சங் 94:12 சங் 94:13 சங் 118:18 நீதி 3:11 நீதி 3:12 ஏசா 1:5 எரே 7:28 செப் 3:2 எபிரெ 12:5-11 |
| 33 | ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். |
| 34 | நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன். | 1கொரி 11:21 1கொரி 11:22 |