இணை வசன வேதாகமம்

Click to Subscribe

அப்போஸ்தலர் 16

                   
புத்தகங்களைக் காட்டு
1அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.அப் 14:6 அப் 14:21 2தீமோ 3:11
2அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.அப் 6:3 1தீமோ 3:7 1தீமோ 5:10 1தீமோ 5:25 2தீமோ 3:15 எபிரெ 11:2
3அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள்நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.அப் 15:37 அப் 15:40
4அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.அப் 15:6 அப் 15:28 அப் 15:29
5அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.அப் 15:41 2நாளா 20:20 ஏசா 7:9 ரோம 16:25 1கொரி 15:58 கலா 5:1 எபே 4:13-16 கொலோ 2:6 1தெச 3:2 1தெச 3:13 2தெச 2:16 எபிரெ 13:9 எபிரெ 13:20 எபிரெ 13:21 1பேது 5:10
6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,அப் 2:10 அப் 18:23
7மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.1பேது 1:1
8அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.அப் 16:11 அப் 20:5 2கொரி 2:12 2தீமோ 4:13
9அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.அப் 2:17 அப் 2:18 அப் 9:10-12 அப் 10:3 அப் 10:10-17 அப் 10:30-17 அப் 11:5-12 அப் 18:9 அப் 18:10 அப் 22:17-21 அப் 27:23 அப் 27:24 2கொரி 12:1-4 2கொரி 12:7-4
10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,அப் 10:29 அப் 26:13 சங் 119:60 நீதி 3:27 நீதி 3:28 2கொரி 2:12 2கொரி 2:13
11துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
12அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.அப் 20:6 பிலிப் 1:1 1தெச 2:2
13ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.அப் 13:14 அப் 13:42 அப் 17:2 அப் 18:4 அப் 20:7
14அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.வெளிப் 1:11 வெளிப் 2:18-24
15அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.அப் 16:33 அப் 8:12 அப் 8:38 அப் 11:14 அப் 18:8 1கொரி 1:13-16
16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.அப் 16:18 அப் 8:9-11 யாத் 7:11 யாத் 7:12 உபா 13:1-3 உபா 18:9-11 1சாமு 28:7 1நாளா 10:13 ஏசா 8:19 கலா 5:20 2தீமோ 3:8
17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.அப் 19:13 மத் 8:29 மாற் 1:24 லூக் 4:34 லூக் 4:41
18இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.அப் 14:13-15 மாற் 1:25 மாற் 1:26 மாற் 1:34
19அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.அப் 19:24-27 1தீமோ 6:10
20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,அப் 18:2 அப் 19:34 எஸ்றா 4:12-15 எஸ்தர் 3:8 எஸ்தர் 3:9
21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.அப் 26:3 எரே 10:3
22அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;அப் 17:5 அப் 18:12 அப் 19:28-41 அப் 21:30 அப் 21:31 அப் 22:22 அப் 22:23
23அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.அப் 5:18 அப் 8:3 அப் 9:2 அப் 12:4 லூக் 21:12 எபே 3:1 எபே 4:1 2தீமோ 2:9 பிலேமோ 1:9 வெளிப் 1:9 வெளிப் 2:10
24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.1இரா 22:27 எரே 37:15 எரே 37:16 எரே 38:26 புலம் 3:53-55
25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.யோபு 35:10 சங் 22:2 சங் 42:8 சங் 77:6 சங் 119:55 சங் 119:62 ஏசா 30:29
26சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.அப் 4:31 அப் 5:19 அப் 12:7 அப் 12:10 மத் 28:2 வெளிப் 6:12 வெளிப் 11:13
27சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.அப் 16:23 அப் 16:24
28பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.லேவி 19:18 சங் 7:4 சங் 35:14 நீதி 24:11 நீதி 24:12 மத் 5:44 லூக் 6:27 லூக் 6:28 லூக் 10:32-37 லூக் 22:51 லூக் 23:34 1தெச 5:15
29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,அப் 9:5 அப் 9:6 அப் 24:25 சங் 99:1 சங் 119:120 ஏசா 66:2 ஏசா 66:5 எரே 5:22 எரே 10:10 தானி 6:26
30அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.அப் 16:24 யோபு 34:32 ஏசா 1:16 ஏசா 1:17 ஏசா 58:6 ஏசா 58:9 மத் 3:8 மத் 5:7 யாக் 2:13
31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,அப் 2:38 அப் 2:39 அப் 4:12 அப் 8:37 அப் 11:13 அப் 11:14 அப் 13:38 அப் 13:39 அப் 15:11 ஏசா 45:22 ஆபகூ 2:4 மாற் 16:16 யோவா 1:12 யோவா 3:15 யோவா 3:16 யோவா 3:36 யோவா 6:40 யோவா 6:47 யோவா 7:37 யோவா 7:38 யோவா 11:25 யோவா 11:26 யோவா 20:31 ரோம 5:1 ரோம 5:2 ரோம 10:9 ரோம 10:10 கலா 3:22 கலா 3:26 எபே 2:7 எபே 2:8 1யோவா 5:10-13
32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.அப் 10:33-43 மாற் 16:15 எபே 3:8 கொலோ 1:27 கொலோ 1:28 1தெச 2:8 1தீமோ 1:13-16
33மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.அப் 16:23 நீதி 16:7 ஏசா 11:6-9 மத் 25:35-40 லூக் 10:33 லூக் 10:34 கலா 5:6 கலா 5:13
34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.லூக் 5:29 லூக் 19:6 பிலிப் 4:17 1தெச 4:9 1தெச 4:10 பிலேமோ 1:7 யாக் 2:14-17 1யோவா 3:18
35பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.அப் 4:21 அப் 5:40 சங் 76:10 எரே 5:22
36சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.அப் 15:33 யாத் 4:18 நியா 18:6 1சாமு 1:17 1சாமு 20:42 1சாமு 25:35 1சாமு 29:7 2இரா 5:19 மாற் 5:34 யோவா 14:27
37அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம்விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.அப் 16:20-24 அப் 22:25-28 சங் 58:1 சங் 58:2 சங் 82:1 சங் 82:2 சங் 94:20 நீதி 28:1
38சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,அப் 22:29 மத் 14:5 மத் 21:46
39அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.யாத் 11:8 ஏசா 45:14 ஏசா 49:23 ஏசா 60:14 மீகா 7:9 மீகா 7:10 வெளிப் 3:9
40அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.அப் 16:14 அப் 4:23 அப் 12:12-17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.