இணை வசன வேதாகமம்

Click to Subscribe

அப்போஸ்தலர் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.அப் 8:40 அப் 21:8 அப் 23:23 அப் 23:33 அப் 25:1 அப் 25:13
2அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.அப் 10:7 அப் 10:22 அப் 2:5 அப் 8:2 அப் 13:50 அப் 16:14 அப் 22:12 லூக் 2:25
3பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,யோபு 4:15 யோபு 4:16 தானி 9:20 தானி 9:21
4அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.தானி 10:11 லூக் 1:12 லூக் 1:29 லூக் 24:5
5இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி.அப் 10:32 அப் 9:38 அப் 15:7 அப் 16:9
6அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.அப் 9:43
7கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,அப் 10:2 ஆதி 24:1-10 ஆதி 24:52-10 நியா 7:10 1சாமு 14:6 1சாமு 14:7 1தீமோ 6:2 பிலேமோ 1:16
8எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.அப் 10:33 அப் 26:19 சங் 119:59 சங் 119:60 பிரச 9:10 கலா 1:16
9மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்துவருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.அப் 10:8 அப் 11:5-10 1சாமு 9:25 செப் 1:5 மத் 6:6 மாற் 1:35 மாற் 6:46 1தீமோ 2:8
10அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,மத் 4:2 மத் 12:1-3 மத் 21:18
11வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,அப் 7:56 எசே 1:1 லூக் 3:21 யோவா 1:51 வெளிப் 4:1 வெளிப் 11:19 வெளிப் 19:11
12அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.ஆதி 7:8 ஆதி 7:9 ஏசா 11:6-9 ஏசா 65:25 யோவா 7:37 1கொரி 6:9-11
13அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.அப் 10:10 எரே 35:2-5 யோவா 4:31-34
14அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.ஆதி 19:18 யாத் 10:11 மத் 16:22 மத் 25:9 லூக் 1:60
15அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.அப் 10:28 அப் 11:9 அப் 15:9 அப் 15:20 அப் 15:29 மத் 15:11 வெளிப் 14:14-17 வெளிப் 14:20-17 1கொரி 10:25 கலா 2:12 கலா 2:13 1தீமோ 4:3-5 தீத் 1:15 எபிரெ 9:9 எபிரெ 9:10
16மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.ஆதி 41:32 யோவா 21:17 2கொரி 13:1
17அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:அப் 10:19 அப் 2:12 அப் 5:24 அப் 25:20 யோவா 13:12 1பேது 1:11
18பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.அப் 10:5 அப் 10:6 அப் 11:11
19பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.அப் 8:29 அப் 11:12 அப் 13:2 அப் 16:6 அப் 16:7 அப் 21:4 யோவா 16:13 1கொரி 12:11 1தீமோ 4:1
20நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்கும் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.அப் 8:26 அப் 9:15 அப் 15:7 மாற் 16:15
21அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.யோவா 1:38 யோவா 1:39 யோவா 18:4-8
22அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைப்பெற்றார் என்றார்கள்.அப் 24:15 ஓசி 14:9 ஆபகூ 2:4 மத் 1:19 மாற் 6:20 லூக் 2:25 லூக் 23:50 ரோம 1:17 எபிரெ 10:38 எபிரெ 12:23
23அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள்.ஆதி 19:2 ஆதி 19:3 ஆதி 24:31 ஆதி 24:32 நியா 19:19-21 எபிரெ 13:2 1பேது 4:9
24மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.ஏசா 2:3 மீகா 4:2 சகரி 3:10 சகரி 8:20-23 மத் 9:9 மத் 9:10 மாற் 5:19 மாற் 5:20 லூக் 5:29 யோவா 1:41-49 யோவா 4:28 யோவா 4:29 யோவா 1:1-3
25பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.அப் 14:11-13 தானி 2:30 தானி 2:46 மத் 8:2 மத் 14:33 வெளிப் 19:10 வெளிப் 22:8 வெளிப் 22:9
26பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.அப் 14:14 அப் 14:15 ஏசா 42:8 ஏசா 48:13 மத் 4:10 2தெச 2:3 2தெச 2:4 வெளிப் 13:8 வெளிப் 19:10 வெளிப் 22:9
27அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,அப் 10:24 அப் 14:27 யோவா 4:35 1கொரி 16:9 2கொரி 2:12 கொலோ 4:3
28அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.அப் 11:2 அப் 11:3 அப் 22:21 அப் 22:22 யோவா 4:9 யோவா 4:27 யோவா 18:28 கலா 2:12-14
29ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.அப் 10:19 அப் 10:20 சங் 119:60 1பேது 3:15
30அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:அப் 10:7-9 அப் 10:23-9 அப் 10:24-9
31கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.ஏசா 38:5 தானி 9:23 தானி 10:12 லூக் 1:13
32யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
33அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.அப் 17:11 அப் 17:12 அப் 28:28 உபா 5:25-29 2நாளா 30:12 நீதி 1:5 நீதி 9:9 நீதி 9:10 நீதி 18:15 நீதி 25:12 மத் 18:4 மத் 19:30 மாற் 10:15 1கொரி 3:18 கலா 4:14 1தெச 2:13 யாக் 1:19 யாக் 1:21 1பேது 2:1 1பேது 2:2
34அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,அப் 8:35 மத் 5:2 எபே 6:19 எபே 6:20
35எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.அப் 15:9 ஏசா 56:3-8 ரோம 2:13 ரோம 2:25-29 ரோம 3:22 ரோம 3:29 ரோம 3:30 ரோம 10:12 ரோம 10:13 1கொரி 12:13 கலா 3:28 எபே 2:13-18 எபே 3:6-8 பிலிப் 3:3 கொலோ 1:6 கொலோ 1:23-27 கொலோ 3:11
36எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.அப் 2:38 அப் 2:39 அப் 3:25 அப் 3:26 அப் 11:19 அப் 13:46 மத் 10:6 லூக் 24:47
37யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.அப் 2:22 அப் 26:26 அப் 28:22
38நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.அப் 2:22 அப் 4:27 சங் 2:2 சங் 2:6 சங் 45:7 ஏசா 11:2 ஏசா 42:1 ஏசா 61:1-3 மத் 12:28 லூக் 3:22 லூக் 4:18 யோவா 3:34 யோவா 6:27 யோவா 10:36-38 எபிரெ 1:9
39யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.அப் 10:41 அப் 1:8 அப் 1:22 அப் 2:32 அப் 3:15 அப் 5:30-32 அப் 13:31 லூக் 1:2 லூக் 24:48 யோவா 15:27
40மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.அப் 13:30 அப் 13:31 அப் 17:31 மத் 28:1 மத் 28:2 ரோம 1:4 ரோம 4:24 ரோம 4:25 ரோம 6:4-11 ரோம 8:11 ரோம 14:9 1கொரி 15:3 1கொரி 15:4 1கொரி 15:12-20 2கொரி 4:14 எபிரெ 13:20 1பேது 1:21
41ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.அப் 10:39 அப் 1:2 அப் 1:3 அப் 1:22 அப் 13:31 யோவா 14:17 யோவா 14:22 யோவா 20:1-21
42அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.அப் 1:8 அப் 4:19 அப் 4:20 அப் 5:20 அப் 5:29-32 மத் 28:19 மத் 28:20 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:47 லூக் 24:48 யோவா 21:21 யோவா 21:22
43அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.அப் 26:22 ஏசா 53:11 எரே 31:34 தானி 9:24 மீகா 7:18 சகரி 13:1 மல்கி 4:2 லூக் 24:25-27 லூக் 24:44-46 யோவா 1:45 யோவா 5:39 யோவா 5:40 1பேது 1:11 வெளிப் 19:10
44இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.அப் 2:2-4 அப் 4:31 அப் 8:15-17 அப் 11:15 அப் 19:6
45அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,அப் 10:23 அப் 11:3 அப் 11:15-18 கலா 3:13 கலா 3:14
46பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.அப் 2:4 அப் 2:11 அப் 19:6 1கொரி 14:20-25
47அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,அப் 8:12 அப் 8:36 அப் 11:15-17 அப் 15:8 அப் 15:9 ஆதி 17:24-26 ரோம 4:11 ரோம 10:12
48கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.யோவா 4:2 1கொரி 1:13-17 கலா 3:27
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.