இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோவான் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1இயேசு ஒலிவமலைக்குப் போனார்.மத் 21:1 மாற் 11:1 மாற் 13:3 லூக் 19:37
2மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.யோவா 4:34 பிரச 9:10 எரே 25:3 எரே 44:4 லூக் 21:37
3அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.லேவி 20:10 உபா 22:21-24 எசே 16:38-40 எசே 23:47
6அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.எண் 14:22 மத் 19:3 லூக் 10:25 லூக் 11:53 லூக் 11:54 லூக் 20:20-23 1கொரி 10:9
7அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,யோவா 7:46 நீதி 12:18 நீதி 26:4 நீதி 26:5 எரே 23:29 1கொரி 14:24 1கொரி 14:25 கொலோ 4:6 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 1:16 வெளிப் 2:16 வெளிப் 19:15
8அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
9அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.ஆதி 42:21 ஆதி 42:22 1இரா 2:44 1இரா 17:18 சங் 50:21 பிரச 7:22 மாற் 6:14-16 லூக் 12:1-3 ரோம 2:15 ரோம 2:22 1யோவா 3:20
10இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையும் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.ஏசா 41:11 ஏசா 41:12
11அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.யோவா 8:15 யோவா 3:17 யோவா 18:36 உபா 16:18 உபா 17:9 லூக் 9:56 லூக் 12:13 லூக் 12:14 ரோம 13:3 ரோம 13:4 1கொரி 5:12
12மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.யோவா 1:4-9 யோவா 3:19 யோவா 9:5 யோவா 12:35 ஏசா 9:2 ஏசா 42:6 ஏசா 42:7 ஏசா 49:6 ஏசா 60:1-3 ஓசி 6:3 மல்கி 4:2 மத் 4:14-16 லூக் 1:78 லூக் 1:79 லூக் 2:32 அப் 13:47 அப் 26:23
13அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.யோவா 5:31-47
14இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறெனென்றும் அறியீர்கள்.எண் 12:3 நெகே 5:14-19 2கொரி 11:31 2கொரி 12:11 2கொரி 12:19
15நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;யோவா 7:24 1சாமு 16:7 சங் 58:1 சங் 58:2 சங் 94:20 சங் 94:21 ஆமோ 5:7 ஆமோ 6:12 ஆபகூ 1:4 ரோம 2:1 1கொரி 2:15 1கொரி 4:3-5 யாக் 2:4
16நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.யோவா 5:22-30 1சாமு 16:7 சங் 45:6 சங் 45:7 சங் 72:1 சங் 72:2 சங் 98:9 சங் 99:4 ஏசா 9:7 ஏசா 11:2-5 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 23:5 எரே 23:6 சகரி 9:9 அப் 17:31 வெளிப் 19:11
17இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.யோவா 10:34 யோவா 15:25 கலா 3:24 கலா 4:21
18நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.யோவா 8:12 யோவா 8:25 யோவா 8:38 யோவா 8:51 யோவா 8:58 யோவா 10:9 யோவா 10:11 யோவா 10:14 யோவா 10:30 யோவா 11:25 யோவா 14:6 வெளிப் 1:17 வெளிப் 1:18
19அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.யோவா 8:54 யோவா 8:55 யோவா 1:10 யோவா 7:28 யோவா 10:14 யோவா 10:15 யோவா 15:21 யோவா 16:3 எரே 22:16 எரே 24:7 1கொரி 15:34 கலா 4:9 கொலோ 1:10 1யோவா 5:20
20தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.1நாளா 9:26 மத் 27:6 மாற் 12:41 மாற் 12:43
21இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.யோவா 7:34 யோவா 12:33 யோவா 12:35 1இரா 18:10 2இரா 2:16 2இரா 2:17 மத் 23:39 மத் 24:23 மத் 24:24
22அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலை செய்துகொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.யோவா 8:48 யோவா 8:52 யோவா 7:20 யோவா 10:20 சங் 22:6 சங் 31:18 சங் 123:4 எபிரெ 12:3 எபிரெ 13:13
23அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.யோவா 1:14 யோவா 3:13 யோவா 3:31 சங் 17:4 ரோம 8:7 ரோம 8:8 1கொரி 15:47 1கொரி 15:48 பிலிப் 3:19-21 யாக் 3:15-17 1யோவா 2:15 1யோவா 2:16
24ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.யோவா 3:18 யோவா 3:36 நீதி 8:36 மாற் 16:16 அப் 4:12 எபிரெ 2:3 எபிரெ 10:26-29 எபிரெ 12:25
25அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.யோவா 1:19 யோவா 1:22 யோவா 10:24 யோவா 19:9 லூக் 22:67
26உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.யோவா 16:12 எபிரெ 5:11 எபிரெ 5:12
27பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.யோவா 8:43 யோவா 8:47 ஏசா 6:9 ஏசா 42:18-20 ஏசா 59:10 ரோம 11:7-10 2கொரி 4:3 2கொரி 4:4
28ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.யோவா 3:14 யோவா 12:32-34 யோவா 19:18
29என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்.யோவா 8:16 யோவா 14:10 யோவா 14:11 யோவா 16:32 ஏசா 42:1 ஏசா 42:6 ஏசா 49:4-8 ஏசா 50:4-9 2தீமோ 4:17 2தீமோ 4:22
30இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.யோவா 2:23 யோவா 6:14 யோவா 7:31 யோவா 10:42 யோவா 11:45
31இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;யோவா 6:66-71 யோவா 15:4-9 1சாமு 12:14 மத் 24:13 அப் 13:43 அப் 14:22 அப் 26:22 ரோம 2:7 ரோம 11:22 கொலோ 1:23 1தீமோ 2:15 1தீமோ 4:16 2தீமோ 3:14 எபிரெ 3:14 எபிரெ 8:9 எபிரெ 10:38 எபிரெ 10:39 யாக் 1:25 1யோவா 2:19 1யோவா 2:24
32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.யோவா 6:45 யோவா 7:17 யோவா 14:6 யோவா 16:13 சங் 25:5 சங் 25:8 சங் 25:9 நீதி 1:23 நீதி 1:29 நீதி 2:1-7 நீதி 4:18 உன்ன 1:7 உன்ன 1:8 ஏசா 2:3 ஏசா 30:21 ஏசா 35:8 ஏசா 54:13 எரே 6:16 எரே 31:33 எரே 31:34 ஓசி 6:3 மல்கி 4:2 மத் 11:29 மத் 13:11 மத் 13:12 2தீமோ 3:7
33அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.யோவா 8:39 லேவி 25:42 மத் 3:9 லூக் 16:24-26
34இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.யோவா 3:3 மத் 5:18
35அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.ஆதி 21:10 எசே 46:17 மத் 21:41-43 கலா 4:30 கலா 4:31
36ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.யோவா 8:31 யோவா 8:32 சங் 19:13 சங் 119:32 சங் 119:133 ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 61:1 சகரி 9:11 சகரி 9:12 லூக் 4:18 ரோம 8:2 2கொரி 3:17 கலா 5:1
37நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.யோவா 8:33 அப் 13:26 ரோம 9:7
38நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.யோவா 8:26 யோவா 3:32 யோவா 5:19 யோவா 5:30 யோவா 12:49 யோவா 12:50 யோவா 14:10 யோவா 14:24 யோவா 17:8
39அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.யோவா 8:37 மத் 3:9 மத் 5:45 ரோம 2:28 ரோம 2:29 ரோம 4:12 ரோம 4:16 ரோம 9:7 கலா 3:7 கலா 3:29 யாக் 2:22-24
40தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.யோவா 8:37 சங் 37:12 சங் 37:32 கலா 4:16 கலா 4:29 1யோவா 3:12-15 வெளிப் 12:4 வெளிப் 12:12 வெளிப் 12:13 வெளிப் 12:17
41நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.யோவா 8:38 யோவா 8:44
42இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.யோவா 5:23 யோவா 15:23 யோவா 15:24 மல்கி 1:6 1கொரி 16:22 1யோவா 5:1 1யோவா 5:2
43என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?யோவா 8:27 யோவா 5:43 யோவா 7:17 யோவா 12:39 யோவா 12:40 நீதி 28:5 ஏசா 44:18 ஓசி 14:9 மீகா 4:12 ரோம 3:11
44நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.யோவா 8:38 யோவா 8:41 யோவா 6:70 ஆதி 3:15 மத் 13:38 அப் 13:10 1யோவா 3:8-10 1யோவா 3:12-10
45நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.யோவா 3:19 யோவா 3:20 யோவா 7:7 கலா 4:16 2தெச 2:10 2தீமோ 4:3 2தீமோ 4:4
46என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.யோவா 8:7 யோவா 14:30 யோவா 15:10 யோவா 16:8 2கொரி 5:21 எபிரெ 4:15 எபிரெ 7:26 1பேது 2:22
47தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.யோவா 8:37 யோவா 8:43 யோவா 8:45 யோவா 1:12 யோவா 1:13 யோவா 6:45 யோவா 6:46 யோவா 6:65 யோவா 10:26 யோவா 10:27 யோவா 17:6-8 1யோவா 3:10 1யோவா 4:1-6 1யோவா 5:1 2யோவா 1:9 3யோவா 1:11
48அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.யோவா 8:52 யோவா 13:13 மத் 15:7 யாக் 2:19
49அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம்பண்ணுகிறீர்கள்.நீதி 26:4 நீதி 26:5 1பேது 2:23
50நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.யோவா 5:41 யோவா 7:18
51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.யோவா 3:15 யோவா 3:16 யோவா 5:24 யோவா 6:50 யோவா 11:25 யோவா 11:26
52அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.யோவா 8:48 யோவா 9:24
53எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.யோவா 8:58 யோவா 4:12 யோவா 10:29 யோவா 10:30 யோவா 12:34 ஏசா 9:6 மத் 12:6 மத் 12:41 மத் 12:42 ரோம 9:5 எபிரெ 3:2 எபிரெ 3:3 எபிரெ 7:1-7
54இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.யோவா 8:50 யோவா 2:11 யோவா 5:31 யோவா 5:32 யோவா 7:18 நீதி 25:27 2கொரி 10:18 எபிரெ 5:4 எபிரெ 5:5
55ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.யோவா 8:19 யோவா 7:28 யோவா 7:29 யோவா 15:21 யோவா 16:3 யோவா 17:25 எரே 4:22 எரே 9:3 ஓசி 5:4 அப் 17:23 2கொரி 4:6
56உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.ஆதி 22:18 லூக் 2:28-30 லூக் 10:24 கலா 3:7-9 எபிரெ 11:13 எபிரெ 11:39 1பேது 1:10-12
57அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
58அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.யோவா 8:34 யோவா 8:51
59அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.யோவா 8:5 யோவா 8:6 யோவா 10:30-33 யோவா 11:8 யோவா 18:31 லேவி 24:16 லூக் 4:29 அப் 7:57
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.