| 1 | அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். | மத் 27:26-31 மாற் 15:15-20 லூக் 23:16 லூக் 23:23 |
| 2 | போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: | யோவா 19:5 சங் 22:6 ஏசா 49:7 ஏசா 53:3 மத் 27:27-31 மாற் 15:17-20 லூக் 23:11 |
| 3 | யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். | மத் 26:49 மத் 27:29 லூக் 1:28 |
| 4 | பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான். | யோவா 19:6 யோவா 18:38 மத் 27:4 மத் 27:19 மத் 27:24 மத் 27:54 லூக் 23:41 லூக் 23:47 2கொரி 5:21 எபிரெ 7:26 1பேது 1:19 1பேது 2:22 1பேது 3:18 1யோவா 3:5 |
| 5 | இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். | யோவா 1:29 ஏசா 7:14 ஏசா 40:9 ஏசா 43:1 புலம் 1:12 எபிரெ 12:2 |
| 6 | பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான். | யோவா 19:15 மத் 27:22 மாற் 15:12-15 லூக் 22:21-23 அப் 2:23 அப் 3:13-15 அப் 7:52 அப் 13:27-29 |
| 7 | யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள். | லேவி 24:16 உபா 18:20 |
| 8 | பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து, | யோவா 19:13 அப் 14:11-19 |
| 9 | மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. | யோவா 8:14 யோவா 9:29 யோவா 9:30 நியா 13:6 |
| 10 | அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். | யோவா 18:39 தானி 3:14 தானி 3:15 தானி 5:19 |
| 11 | இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். | யோவா 3:27 யோவா 7:30 ஆதி 45:7 ஆதி 45:8 யாத் 9:14-16 1நாளா 29:11 சங் 39:9 சங் 62:11 எரே 27:5-8 புலம் 3:37 தானி 4:17 தானி 4:25 தானி 4:32 தானி 4:35 தானி 5:21 மத் 6:13 லூக் 22:53 அப் 2:23 அப் 4:28 ரோம 11:36 ரோம 13:1 யாக் 1:17 |
| 12 | அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். | மாற் 6:16-26 அப் 24:24-27 |
| 13 | பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான். | யோவா 19:8 நீதி 29:25 ஏசா 51:12 ஏசா 51:13 ஏசா 57:11 லூக் 12:5 அப் 4:19 |
| 14 | அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். | யோவா 19:31 யோவா 19:32 யோவா 19:42 மத் 27:62 மாற் 15:42 லூக் 23:54 |
| 15 | அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். | யோவா 19:6 லூக் 23:18 அப் 21:36 அப் 22:22 |
| 16 | அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். | மத் 27:26-31 மாற் 15:15-20 லூக் 23:24 |
| 17 | அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். | மத் 10:38 மத் 16:24 மத் 27:31-33 மாற் 8:34 மாற் 10:21 மாற் 15:21 மாற் 15:22 லூக் 9:23 லூக் 14:27 லூக் 23:26 லூக் 23:33 |
| 18 | அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். | யோவா 18:32 சங் 22:16 ஏசா 53:12 மத் 27:35-38 மத் 27:44-38 மாற் 15:24-28 லூக் 23:32-34 கலா 3:13 எபிரெ 12:2 |
| 19 | பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. | மத் 27:37 மாற் 15:26 லூக் 23:38 |
| 20 | இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. | யோவா 19:13 யோவா 5:2 அப் 21:40 அப் 22:2 அப் 26:14 வெளிப் 16:16 |
| 21 | அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். |
| 22 | பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான். | யோவா 19:12 சங் 65:7 சங் 76:10 நீதி 8:29 |
| 23 | போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. | மத் 27:35 மாற் 15:24 லூக் 23:34 |
| 24 | அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். | யோவா 19:28 யோவா 19:36 யோவா 19:37 யோவா 10:35 யோவா 12:38 யோவா 12:39 |
| 25 | இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள். | லூக் 2:35 |
| 26 | அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். | யோவா 13:23 யோவா 20:2 யோவா 21:7 யோவா 21:20 யோவா 21:24 |
| 27 | பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். | ஆதி 45:8 ஆதி 47:12 மத் 12:48-50 மத் 25:40 மாற் 3:34 1தீமோ 5:2-4 |
| 28 | அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். | யோவா 19:30 யோவா 13:1 யோவா 18:4 லூக் 9:31 லூக் 12:50 லூக் 18:31 லூக் 22:37 அப் 13:29 |
| 29 | காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். | மத் 27:34 மத் 27:48 மாற் 15:36 லூக் 23:36 |
| 30 | இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். | யோவா 19:28 யோவா 4:34 யோவா 17:4 ஆதி 3:15 சங் 22:15 ஏசா 53:10 ஏசா 53:12 தானி 9:24 தானி 9:26 சகரி 13:7 மத் 3:15 ரோம 3:25 ரோம 10:4 1கொரி 5:7 கொலோ 2:14-17 எபிரெ 9:11-14 எபிரெ 9:22-28 எபிரெ 10:1-14 எபிரெ 12:2 |
| 31 | அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். | யோவா 19:14 யோவா 19:42 மத் 27:62 மாற் 15:42 |
| 32 | அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். | யோவா 19:18 லூக் 23:39-43 |
| 33 | அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. |
| 34 | ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. | யோவா 13:8-10 சங் 51:7 எசே 36:25 சகரி 13:1 மத் 27:62 அப் 22:16 1கொரி 1:30 1கொரி 6:11 எபே 5:26 தீத் 2:14 தீத் 3:5-7 எபிரெ 9:13 எபிரெ 9:22 எபிரெ 10:19-22 1பேது 3:21 1யோவா 1:6-9 1யோவா 5:6 1யோவா 5:8 வெளிப் 1:5 வெளிப் 7:14 |
| 35 | அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். | யோவா 19:26 யோவா 21:24 அப் 10:39 எபிரெ 2:3 எபிரெ 2:4 1பேது 5:1 1யோவா 1:1-3 |
| 36 | அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. | யாத் 12:46 எண் 9:12 சங் 22:14 சங் 34:20 சங் 35:10 |
| 37 | அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. | சங் 22:16 சங் 22:17 சகரி 12:10 வெளிப் 1:7 |
| 38 | இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். | மத் 27:57-60 மாற் 15:42-46 லூக் 23:50 |
| 39 | ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். | யோவா 3:1-21 யோவா 7:50-52 மத் 12:20 மத் 19:30 |
| 40 | அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். | யோவா 11:44 யோவா 20:5-7 அப் 5:6 |
| 41 | அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. | யோவா 20:15 2இரா 23:30 ஏசா 22:16 மத் 27:60 மத் 27:64-66 லூக் 23:53 |
| 42 | யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள். | சங் 22:15 ஏசா 53:9 மத் 12:40 அப் 13:29 1கொரி 15:4 கொலோ 2:12 |