| 1 | வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள். | யோவா 20:19 யோவா 20:26 அப் 20:7 1கொரி 16:2 வெளிப் 1:10 |
| 2 | உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். | யோவா 13:23 யோவா 19:26 யோவா 21:7 யோவா 21:20 யோவா 21:24 |
| 3 | அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். | லூக் 24:12 |
| 4 | பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, | 2சாமு 18:23 லேவி 13:30 1கொரி 9:24 2கொரி 8:12 |
| 5 | அதற்குள்ளே குனிந்து பார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. | யோவா 11:44 யோவா 19:40 |
| 6 | சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, | யோவா 6:67-69 யோவா 18:17 யோவா 18:25-27 யோவா 21:7 யோவா 21:15-17 மத் 16:15 மத் 16:16 லூக் 22:31 லூக் 22:32 |
| 7 | சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். | யோவா 11:44 |
| 8 | முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான். | யோவா 20:25 யோவா 20:29 யோவா 1:50 |
| 9 | அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள். | மத் 16:21 மத் 16:22 மாற் 8:31-33 மாற் 9:9 மாற் 9:10 மாற் 9:31 மாற் 9:32 லூக் 9:45 லூக் 18:33 லூக் 18:34 லூக் 24:26 லூக் 24:44-46 |
| 10 | பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். | யோவா 7:53 யோவா 16:32 |
| 11 | மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, |
| 12 | இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். | மத் 28:3-5 மாற் 16:5 மாற் 16:6 லூக் 24:3-7 லூக் 24:22-7 லூக் 24:23-7 |
| 13 | அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். | யோவா 2:4 யோவா 19:26 |
| 14 | இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். | உன்ன 3:3 உன்ன 3:4 மத் 28:9 மாற் 16:9 |
| 15 | இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். | யோவா 1:38 யோவா 18:4 யோவா 18:7 உன்ன 3:2 உன்ன 6:1 மத் 28:5 மாற் 16:6 லூக் 24:5 |
| 16 | இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். | யோவா 10:3 ஆதி 22:1 ஆதி 22:11 யாத் 3:4 யாத் 33:17 1சாமு 3:6 1சாமு 3:10 ஏசா 43:1 லூக் 10:41 அப் 9:4 அப் 10:3 |
| 17 | இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். | யோவா 20:27 2இரா 4:29 2இரா 7:9 மத் 28:7 மத் 28:9 லூக் 10:4 |
| 18 | மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள். | மத் 28:10 மாற் 16:10-13 லூக் 24:10 |
| 19 | வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். | மாற் 16:14 லூக் 24:36-49 1கொரி 15:5 |
| 20 | அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். | யோவா 20:27 லூக் 24:39 லூக் 24:40 1யோவா 1:1 |
| 21 | இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, | யோவா 14:27 |
| 22 | அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; | ஆதி 2:7 யோபு 33:4 சங் 33:6 எசே 37:9 |
| 23 | எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். | மத் 16:19 மத் 18:18 மாற் 2:5-10 அப் 2:38 அப் 10:43 அப் 13:38 அப் 13:39 1கொரி 5:4 2கொரி 2:6-10 எபே 2:20 1தீமோ 1:20 |
| 24 | இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. | யோவா 11:16 யோவா 14:5 யோவா 21:2 மத் 10:3 |
| 25 | மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். | யோவா 20:14-20 யோவா 1:41 யோவா 21:7 மாற் 16:11 லூக் 24:34-40 அப் 5:30-32 அப் 10:40 அப் 10:41 1கொரி 15:5-8 |
| 26 | மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். | யோவா 20:19 மத் 17:1 லூக் 9:28 |
| 27 | பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். | யோவா 20:25 சங் 78:38 சங் 103:13 சங் 103:14 ரோம 5:20 1தீமோ 1:14-16 1யோவா 1:1 1யோவா 1:2 |
| 28 | தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். | யோவா 20:16 யோவா 20:31 யோவா 5:23 யோவா 9:35-38 சங் 45:6 சங் 45:11 சங் 102:24-28 சங் 118:24-28 ஏசா 7:14 ஏசா 9:6 ஏசா 25:9 ஏசா 40:9-11 எரே 23:5 எரே 23:6 மல்கி 3:1 மத் 14:33 லூக் 24:52 அப் 7:59 அப் 7:60 1தீமோ 3:16 வெளிப் 5:9-14 |
| 29 | அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். | யோவா 20:8 யோவா 4:48 லூக் 1:45 2கொரி 5:7 எபிரெ 11:1 எபிரெ 11:27 எபிரெ 11:39 1பேது 1:8 |
| 30 | இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். | யோவா 21:25 லூக் 1:3 லூக் 1:4 ரோம 15:4 1கொரி 10:11 2தீமோ 3:15-17 2பேது 3:1 2பேது 3:2 1யோவா 1:3 1யோவா 1:4 1யோவா 5:13 |
| 31 | இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. | யோவா 20:28 யோவா 1:49 யோவா 6:69 யோவா 6:70 யோவா 9:35-38 சங் 2:7 சங் 2:12 மத் 16:16 மத் 27:54 லூக் 1:4 அப் 8:37 அப் 9:20 ரோம 1:3 ரோம 1:4 1யோவா 4:15 1யோவா 5:1 1யோவா 5:10 1யோவா 5:20 2யோவா 1:9 வெளிப் 2:18 |