| 1 | இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். | யோவா 13:31-35 யோவா 14:1-17 |
| 2 | இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். | மாற் 11:11 மாற் 11:12 லூக் 21:37 லூக் 22:39 |
| 3 | யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான். | யோவா 13:2 யோவா 13:27-30 மத் 26:47 மத் 26:55 மாற் 14:43 மாற் 14:44 மாற் 14:48 லூக் 22:47-53 அப் 1:16 |
| 4 | இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். | யோவா 10:17 யோவா 10:18 யோவா 13:1 யோவா 19:28 மத் 16:21 மத் 17:22 மத் 17:23 மத் 20:18 மத் 20:19 மத் 26:2 மத் 26:21 மத் 26:31 மாற் 10:33 மாற் 10:34 லூக் 18:31-33 லூக் 24:6 லூக் 24:7 லூக் 24:44 அப் 2:28 அப் 4:24-28 அப் 20:22-23 |
| 5 | அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். | யோவா 1:46 யோவா 19:19 மத் 2:23 மத் 21:11 |
| 6 | நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். | 2இரா 1:9-15 சங் 27:2 சங் 40:14 சங் 70:2 சங் 70:3 சங் 129:5 லூக் 9:54-56 அப் 4:29 அப் 4:30 |
| 7 | அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். |
| 8 | இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். | ஏசா 53:6 எபே 5:25 |
| 9 | நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. | யோவா 17:12 |
| 10 | அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பேர். | யோவா 18:26 மத் 26:51-54 மாற் 14:30 மாற் 14:47 லூக் 22:33 லூக் 22:49-51 |
| 11 | அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். | யோவா 18:36 2கொரி 6:7 2கொரி 10:4 எபே 6:11-17 |
| 12 | அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, | யோவா 18:3 மத் 26:57 மாற் 14:53 லூக் 22:54 |
| 13 | முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். | மத் 26:57 |
| 14 | ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. | யோவா 11:49-52 |
| 15 | சீமோன் பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். | மத் 26:58-68 மாற் 14:54 லூக் 22:54 |
| 16 | பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். |
| 17 | அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான். | யோவா 18:16 மத் 26:69 மத் 26:70 மாற் 14:66-68 லூக் 22:54 லூக் 22:56 லூக் 22:57 |
| 18 | குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான். | யோவா 18:25 மாற் 14:54 லூக் 22:55 லூக் 22:56 |
| 19 | பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். | லூக் 11:53 லூக் 11:54 லூக் 20:20 |
| 20 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. | யோவா 7:14 யோவா 7:26 யோவா 7:28 யோவா 8:2 யோவா 10:23-39 சங் 22:22 சங் 40:9 மத் 4:23 மத் 9:35 மத் 21:23-27 மத் 26:65 லூக் 4:15 லூக் 19:45-47 லூக் 20:1-8 லூக் 21:37 |
| 21 | நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். | மத் 26:59 மத் 26:60 மாற் 14:55-59 லூக் 22:67 அப் 24:12 அப் 24:13 அப் 24:18-20 |
| 22 | இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். | யோபு 16:10 யோபு 30:10-12 ஏசா 50:5-7 எரே 20:2 மீகா 5:1 மத் 26:67 மத் 26:68 மாற் 14:65 லூக் 22:63 லூக் 22:64 அப் 23:2 அப் 23:3 |
| 23 | இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார். | 2கொரி 10:1 1பேது 2:20-23 |
| 24 | பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான். | யோவா 18:13 மத் 26:57 |
| 25 | சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான். | யோவா 18:18 மாற் 14:37 மாற் 14:38 மாற் 14:67 லூக் 22:56 |
| 26 | பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான். | நீதி 12:19 மத் 26:73 மாற் 14:70 மாற் 14:71 லூக் 22:59 லூக் 22:60 |
| 27 | அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று. | யோவா 13:38 மத் 26:34 மத் 26:74 மத் 26:75 மாற் 14:30 மாற் 14:68 மாற் 14:71 மாற் 14:72 லூக் 22:34 லூக் 22:60-62 |
| 28 | அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். | மத் 27:1 மத் 27:2-10 மாற் 15:1-5 லூக் 23:1-5 அப் 3:13 |
| 29 | ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான். | மத் 27:23 அப் 23:28-30 அப் 25:16 |
| 30 | அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். | யோவா 19:12 மாற் 15:3 லூக் 20:19-26 லூக் 23:2-5 |
| 31 | அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். | யோவா 19:6 யோவா 19:7 அப் 25:18-20 |
| 32 | தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். | யோவா 3:14 யோவா 10:31 யோவா 10:33 யோவா 12:32 யோவா 12:33 மத் 20:19 மத் 26:2 லூக் 18:32 லூக் 18:33 லூக் 24:7 லூக் 24:8 அப் 7:59 |
| 33 | அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். | யோவா 18:37 மத் 27:11 மாற் 15:2 லூக் 23:3 லூக் 23:4 1தீமோ 6:13 |
| 34 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். |
| 35 | பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். | எஸ்றா 4:12 நெகே 4:2 அப் 18:14-16 அப் 23:29 அப் 25:19 அப் 25:20 ரோம 3:1 ரோம 3:2 |
| 36 | இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். | 1தீமோ 6:13 |
| 37 | அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். | மத் 26:64 மத் 27:11 மாற் 14:62 மாற் 15:2 லூக் 23:3 1தீமோ 6:13 |
| 38 | அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். | அப் 17:19 அப் 17:20 அப் 17:32 அப் 24:25 அப் 24:26 |
| 39 | பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான். | மத் 27:15-18 மாற் 15:6 மாற் 15:8 லூக் 23:17 லூக் 23:20 |
| 40 | அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். | மத் 27:16 மத் 27:26 மாற் 15:7 மாற் 15:15 லூக் 23:18 லூக் 23:19 லூக் 23:25 அப் 3:13 அப் 3:14 |