| 1 | பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். | யோவா 6:4 மத் 26:2-5 மாற் 14:1 மாற் 14:2 லூக் 22:1 லூக் 22:2 |
| 2 | சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்; | யோவா 13:4 யோவா 13:26 |
| 3 | தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; | யோவா 3:35 யோவா 5:22-27 யோவா 17:2 மத் 11:27 மத் 28:18 லூக் 10:22 அப் 2:36 1கொரி 15:27 எபே 1:21 எபே 1:22 பிலிப் 2:9-11 எபிரெ 1:2 எபிரெ 2:8 எபிரெ 2:9 |
| 4 | போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, | லூக் 12:37 லூக் 17:7 லூக் 22:27 2கொரி 8:9 பிலிப் 2:6-8 |
| 5 | பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். | யோவா 19:34 2இரா 3:11 எசே 36:25 சகரி 13:1 எபே 5:26 1யோவா 5:6 |
| 6 | அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். | யோவா 1:27 மத் 3:11-14 லூக் 5:8 |
| 7 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். | யோவா 13:10-12 யோவா 12:16 யோவா 14:26 எரே 32:24 எரே 32:25 எரே 32:43 தானி 12:8 தானி 12:12 ஆபகூ 2:1-3 யாக் 5:7-11 |
| 8 | பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். | ஆதி 42:38 மத் 16:22 மத் 21:29 மத் 26:33 மத் 26:35 கொலோ 2:18 கொலோ 2:23 |
| 9 | அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். | சங் 26:6 சங் 51:2 சங் 51:7 எரே 4:14 மத் 27:24 எபிரெ 10:22 1பேது 3:21 |
| 10 | இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். | லேவி 16:26 லேவி 16:28 லேவி 17:15 லேவி 17:16 எண் 19:7 எண் 19:8 எண் 19:12 எண் 19:13 எண் 19:19-21 எபிரெ 9:10 |
| 11 | தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். | யோவா 13:18 யோவா 13:21 யோவா 13:26 யோவா 2:25 யோவா 6:64-71 யோவா 17:12 மத் 26:24 மத் 26:25 |
| 12 | அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு. தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? | யோவா 13:7 எசே 24:19 எசே 24:24 மத் 13:51 மாற் 4:13 |
| 13 | நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். | யோவா 11:28 மத் 7:21 மத் 7:22 மத் 23:8-10 லூக் 6:46 ரோம 14:8 ரோம 14:9 1கொரி 8:6 1கொரி 12:3 பிலிப் 2:11 பிலிப் 3:8 2பேது 1:14-16 |
| 14 | ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். | மத் 20:26-28 மாற் 10:43-45 லூக் 22:26 லூக் 22:27 2கொரி 8:9 பிலிப் 2:5-8 எபிரெ 5:8 எபிரெ 5:9 எபிரெ 12:2 |
| 15 | நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். | மத் 11:29 ரோம 15:5 எபே 5:2 1பேது 2:21 1பேது 3:17 1பேது 3:18 1யோவா 2:6 |
| 16 | மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. | யோவா 3:3 யோவா 3:5 |
| 17 | நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். | யோவா 15:14 ஆதி 6:22 யாத் 40:16 சங் 19:11 சங் 119:1-5 எசே 36:27 மத் 7:24 மத் 7:25 மத் 12:50 மத் 22:38-41 லூக் 12:47 லூக் 12:48 2கொரி 5:14 2கொரி 5:15 கலா 5:6 எபிரெ 11:7 எபிரெ 11:8 யாக் 1:25 யாக் 2:20-24 யாக் 4:17 வெளிப் 22:14 |
| 18 | உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். | யோவா 13:11 யோவா 17:12 யோவா 21:17 2கொரி 4:5 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 19 | அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். | யோவா 14:29 யோவா 16:4 ஏசா 41:23 ஏசா 48:5 மத் 24:25 லூக் 21:13 |
| 20 | நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | யோவா 12:44-48 மத் 10:40-42 மத் 25:40 மாற் 9:37 லூக் 9:48 லூக் 10:16 கலா 4:14 கொலோ 2:6 1தெச 4:8 |
| 21 | இயேசு இவைகளைச் சொன்னபின்பு. ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். | யோவா 11:33 யோவா 11:35 யோவா 11:38 யோவா 12:27 மத் 26:38 மாற் 3:5 அப் 17:16 ரோம 9:2 ரோம 9:3 2கொரி 2:12 2கொரி 2:13 |
| 22 | அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். | ஆதி 42:1 மத் 26:22 மாற் 14:19 லூக் 22:23 |
| 23 | அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். | யோவா 13:25 யோவா 1:18 யோவா 21:20 2சாமு 12:3 |
| 24 | யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். | லூக் 1:22 லூக் 5:7 அப் 12:17 அப் 13:16 அப் 21:40 |
| 25 | அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். | ஆதி 44:4-12 எஸ்தர் 7:5 |
| 26 | இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். | யோவா 13:30 மத் 26:23 மாற் 14:19 மாற் 14:20 லூக் 22:21 |
| 27 | அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். | யோவா 13:2 சங் 109:6 மத் 12:45 லூக் 8:32 லூக் 8:33 லூக் 22:3 அப் 5:3 |
| 28 | அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. |
| 29 | யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். | யோவா 12:5 அப் 20:34 அப் 20:35 கலா 2:10 எபே 4:28 |
| 30 | அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது. | நீதி 4:16 ஏசா 59:7 ரோம 3:15 |
| 31 | அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். | யோவா 7:39 யோவா 11:4 யோவா 12:23 யோவா 16:14 லூக் 12:50 அப் 2:36 அப் 3:13 கொலோ 2:14 கொலோ 2:15 எபிரெ 5:5-9 |
| 32 | தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார். | யோவா 17:4-6 யோவா 17:21-24 ஏசா 53:10-12 எபிரெ 1:2 எபிரெ 1:3 1பேது 3:22 வெளிப் 3:21 வெளிப் 21:22 வெளிப் 21:23 வெளிப் 22:1 வெளிப் 22:3 வெளிப் 22:13 |
| 33 | பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். | கலா 4:19 1யோவா 2:1 1யோவா 4:4 1யோவா 5:21 |
| 34 | நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். | கலா 6:2 1யோவா 2:8-10 1யோவா 3:14-18 1யோவா 3:23-18 2யோவா 1:5 |
| 35 | நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். | யோவா 17:21 ஆதி 13:7 ஆதி 13:8 அப் 4:32-35 அப் 5:12-14 1யோவா 2:5 1யோவா 2:10 1யோவா 3:10-14 1யோவா 4:20 1யோவா 4:21 |
| 36 | சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். | யோவா 13:33 யோவா 14:4 யோவா 14:5 யோவா 16:17 யோவா 21:21 |
| 37 | பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். | யோவா 21:15 மத் 26:31-35 மாற் 14:27-31 லூக் 22:31-34 அப் 20:24 அப் 21:13 |
| 38 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | நீதி 16:18 நீதி 28:26 நீதி 29:23 1கொரி 10:12 |