இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோவான் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.யோவா 11:55
2அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.உன்ன 4:16 உன்ன 5:1 லூக் 5:29 லூக் 14:12 வெளிப் 3:20
3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.யோவா 11:2 யோவா 11:28 யோவா 11:32 மத் 26:6 மத் 26:7-13 மாற் 14:3-9 லூக் 10:38 லூக் 10:39
4அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:1சாமு 17:28 1சாமு 17:29 பிரச 4:4
5இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.யாத் 5:8 யாத் 5:17 ஆமோ 8:5 மல்கி 1:10-13 மத் 26:8 மாற் 14:4 லூக் 6:41
6அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.யோவா 10:13 சங் 14:1 நீதி 29:7 எசே 33:31 கலா 2:10 யாக் 2:2 யாக் 2:6
7அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.சங் 109:31 சகரி 3:2 மத் 26:10 மாற் 14:6
8தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.உபா 15:11 மத் 26:11 மாற் 14:7
9அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.யோவா 11:43-45 அப் 3:10 அப் 3:11 அப் 4:14
10லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால்,யோவா 11:47-53 யோவா 11:57-53 ஆதி 4:4-10 யாத் 10:3 யோபு 15:25 யோபு 15:26 யோபு 40:8 யோபு 40:9 பிரச 9:3 தானி 5:21-23 மத் 2:3-8 மத் 2:16-8 லூக் 16:31
11பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.யோவா 12:18 யோவா 11:45 யோவா 11:48 யோவா 15:18-25 அப் 13:45 யாக் 3:14-16
12மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,மத் 21:8
13குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.லேவி 23:40 வெளிப் 7:9
14அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,மத் 21:1-7 மாற் 11:1-7 லூக் 19:29-35
15இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.ஏசா 35:4 ஏசா 35:5 ஏசா 40:9 ஏசா 40:10 ஏசா 41:14 ஏசா 62:11 மீகா 4:8 செப் 3:16 செப் 3:17 சகரி 2:9-11 மத் 2:2-6
16இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.லூக் 9:45 லூக் 18:34 லூக் 24:25 லூக் 24:45
17அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.யோவா 12:9 யோவா 11:31 யோவா 11:45 யோவா 11:46 சங் 145:6 சங் 145:7
18அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள்.
19அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.யோவா 11:47-50 மத் 21:15 லூக் 19:47 லூக் 19:48 அப் 4:16 அப் 4:17 அப் 5:27 அப் 5:28
20பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.யோவா 7:35 மாற் 7:26 அப் 14:1 அப் 16:1 அப் 17:4 அப் 20:21 அப் 21:28 ரோம 1:16 ரோம 10:12 கலா 2:3 கலா 3:28 கொலோ 3:11
21அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.யோவா 1:43-47 யோவா 6:5-7 யோவா 14:8 யோவா 14:9
22பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.யோவா 1:40 யோவா 1:41 யோவா 6:8
23அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.யோவா 13:31 யோவா 13:32 யோவா 17:1-5 யோவா 17:9-5 யோவா 17:10-5 ஏசா 49:5 ஏசா 49:6 ஏசா 53:10-12 ஏசா 55:5 ஏசா 60:9 மத் 25:31 1பேது 2:9 1பேது 2:10
24மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.சங் 72:16 1கொரி 15:36-38
25தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.மத் 10:39 மத் 16:25 மத் 19:29 மாற் 8:35 லூக் 9:23 லூக் 9:24 லூக் 17:33 அப் 20:24 அப் 21:13 எபிரெ 11:35 வெளிப் 12:11
26ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.யோவா 13:16 யோவா 14:15 யோவா 15:20 லூக் 6:46 ரோம 1:1 ரோம 14:18 2கொரி 4:5 கலா 1:10 கொலோ 3:24 கொலோ 4:12 2பேது 1:1 1யோவா 5:3 யூதா 1:1
27இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.யோவா 11:33-35 யோவா 13:21 சங் 69:1-3 சங் 88:3 ஏசா 53:3 மத் 26:38 மத் 26:39 மத் 26:42 மாற் 14:33-36 லூக் 22:44 லூக் 22:53 எபிரெ 5:7
28பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.யோவா 18:11 மத் 26:42 மாற் 14:36
29அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.யாத் 19:16 யாத் 20:18 யோபு 37:2-5 யோபு 40:9 எசே 10:5 வெளிப் 6:1 வெளிப் 8:5 வெளிப் 11:19 வெளிப் 14:2
30இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.யோவா 5:34 யோவா 11:15 யோவா 11:42 2கொரி 8:9
31இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.யோவா 5:22-27 யோவா 16:8-10
32நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.யோவா 3:14 யோவா 8:28 யோவா 19:17 உபா 21:22 உபா 21:23 2சாமு 18:9 சங் 22:16-18 கலா 3:13 1பேது 2:24 1பேது 3:18
33தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.யோவா 18:32 யோவா 21:19
34ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.யோவா 10:34 யோவா 15:25 ரோம 3:19 ரோம 5:18
35அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.யோவா 7:33 யோவா 9:4 யோவா 16:16 எபிரெ 3:7 எபிரெ 3:8
36ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.யோவா 1:7 யோவா 3:21 ஏசா 60:1 அப் 13:47 அப் 13:48
37அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.யோவா 1:11 யோவா 11:42 யோவா 15:24 மத் 11:20 லூக் 16:31
38கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.யோவா 15:25 யோவா 17:12 யோவா 19:24 யோவா 19:36 யோவா 19:37 மத் 27:35 அப் 13:27-29
39ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:யோவா 5:44 யோவா 6:44 யோவா 10:38 ஏசா 44:18-20 2பேது 2:14
40அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.யோவா 9:39 1இரா 22:20 ஏசா 29:10 எசே 14:9 மத் 13:13-15 மத் 15:14 மாற் 4:12 லூக் 8:10 அப் 28:26 ரோம 11:8-11
41ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.ஏசா 6:1-5 ஏசா 6:9-5 ஏசா 6:10-5
42ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.யோவா 3:2 யோவா 7:48-51 யோவா 11:45 யோவா 19:38
43அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.யோவா 5:41 யோவா 5:44 மத் 6:2 மத் 23:5-7 லூக் 16:15 சங் 22:29 1தெச 2:6
44அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.யோவா 7:28 யோவா 11:43 நீதி 1:20 நீதி 8:1 ஏசா 55:1-3
45என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.யோவா 12:41 யோவா 14:9 யோவா 14:10 யோவா 15:24 2கொரி 4:6 கொலோ 1:15 எபிரெ 1:3 1யோவா 5:20
46என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.யோவா 12:35 யோவா 12:36 யோவா 1:4 யோவா 1:5 யோவா 3:19 யோவா 8:12 யோவா 9:5 யோவா 9:39 சங் 36:9 ஏசா 40:1 மல்கி 4:2 மத் 4:16 லூக் 1:76-79 லூக் 2:32 அப் 26:18 1யோவா 1:1-3 1யோவா 2:8 1யோவா 2:9
47ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.யோவா 12:48 யோவா 5:45 யோவா 8:15 யோவா 8:16 யோவா 8:26
48என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.உபா 18:19 1சாமு 8:7 1சாமு 10:19 ஏசா 53:3 மத் 21:42 மாற் 8:31 மாற் 12:10 லூக் 7:30 லூக் 9:22 லூக் 9:26 லூக் 10:16 லூக் 17:25 லூக் 20:17 அப் 3:23 எபிரெ 2:3 எபிரெ 10:29-31 எபிரெ 12:25
49நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.யோவா 3:11 யோவா 3:32 யோவா 5:30 யோவா 6:38-40 யோவா 8:26 யோவா 8:42 யோவா 14:10 யோவா 15:15 யோவா 17:8 உபா 18:18 வெளிப் 1:1
50அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.யோவா 6:63 யோவா 6:68 யோவா 17:3 யோவா 20:31 1தீமோ 1:16 1யோவா 2:25 1யோவா 3:23 1யோவா 3:24 1யோவா 5:11-13 1யோவா 5:20-13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.