இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோவான் 11

                   
புத்தகங்களைக் காட்டு
1மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.யோவா 11:3 யோவா 11:6 ஆதி 48:1 2இரா 20:1-12 அப் 9:37
2கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான்.யோவா 12:3 மத் 26:6 மத் 26:7 மாற் 14:3
3அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.யோவா 11:1 யோவா 11:5 யோவா 13:23 ஆதி 22:2 சங் 16:3 பிலிப் 2:26 பிலிப் 2:27 2தீமோ 4:20 எபிரெ 12:6 எபிரெ 12:7 யாக் 5:14 யாக் 5:15 வெளிப் 3:19
4இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.யோவா 9:3 மாற் 5:39-42 ரோம 11:11
5இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.யோவா 11:8 யோவா 11:36 யோவா 15:9-13 யோவா 16:27 யோவா 17:26
6அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்.ஆதி 22:14 ஆதி 42:24 ஆதி 43:29-31 ஆதி 44:1-5 ஆதி 45:1-5 ஏசா 30:18 ஏசா 55:8 ஏசா 55:9 மத் 15:22-28
7அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.யோவா 10:40-42 லூக் 9:51 அப் 15:36 அப் 20:22-24
8அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள்.யோவா 10:31 யோவா 10:39 சங் 11:1-3 மத் 16:21-23 அப் 21:12 அப் 21:13
9இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.யோவா 9:4 லூக் 13:31-33
10ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.சங் 27:2 நீதி 4:18 நீதி 4:19 பிரச 2:14 எரே 13:16 எரே 20:11 1யோவா 2:10 1யோவா 2:11
11இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.யோவா 3:29 யோவா 15:13-15 யாத் 33:11 2நாளா 20:7 ஏசா 41:8 யாக் 2:23
12அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
13இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
14அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;யோவா 10:24 யோவா 16:25 யோவா 16:29
15நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.யோவா 11:35 யோவா 11:36
16அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.யோவா 20:24-29 யோவா 21:2 மத் 10:3 மாற் 3:18 லூக் 6:15
17இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.யோவா 11:39 யோவா 2:19 ஓசி 6:2 அப் 2:27-31
18பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது.யோவா 6:19 லூக் 24:13 வெளிப் 14:20 வெளிப் 21:16
19யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.ஆதி 37:35 2சாமு 10:2 1நாளா 7:21 1நாளா 7:22 யோபு 2:11 யோபு 42:11 பிரச 7:2 ஏசா 51:19 எரே 16:5-7 புலம் 1:2 புலம் 1:9 புலம் 1:16 புலம் 1:21 புலம் 2:13 ரோம 12:15 2கொரி 1:4 1தெச 4:18 1தெச 5:11
20இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.யோவா 11:30 மத் 25:1 மத் 25:6 அப் 10:25 அப் 28:15 1தெச 4:17
21மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.யோவா 11:32 யோவா 11:37 யோவா 4:47-49 1இரா 17:18 சங் 78:19 சங் 78:41 மத் 9:18 லூக் 7:6-10 லூக் 7:13-15 லூக் 8:49-55
22இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.யோவா 11:41 யோவா 11:42 யோவா 9:31 மாற் 9:23 எபிரெ 11:17-19
23இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.யோவா 11:43 யோவா 11:44
24அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.யோவா 5:28 யோவா 5:29 சங் 17:15 சங் 49:14 சங் 49:15 ஏசா 25:8 ஏசா 26:19 எசே 37:1-10 தானி 12:2 தானி 12:3 ஓசி 6:2 ஓசி 13:14 மத் 22:23-32 லூக் 14:14 அப் 17:31 அப் 17:32 அப் 23:6-9 அப் 24:15 எபிரெ 11:35
25இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;யோவா 5:21 யோவா 6:39 யோவா 6:40 யோவா 6:44 ரோம 5:17-19 ரோம 8:11 1கொரி 15:20-26 1கொரி 15:43-57 2கொரி 4:14 பிலிப் 3:10 பிலிப் 3:20 பிலிப் 3:21 1தெச 4:14 வெளிப் 20:5 வெளிப் 20:10-15 வெளிப் 21:4
26உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.யோவா 3:15-18 யோவா 4:14 யோவா 5:24 யோவா 6:50 யோவா 6:54-58 யோவா 8:52 யோவா 8:53 யோவா 10:28 ரோம 8:13 1யோவா 5:10-12
27அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.யோவா 1:49 யோவா 4:42 யோவா 6:69 யோவா 9:36-38 யோவா 20:28-31 மத் 16:16 அப் 8:37 1யோவா 5:1
28இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.யோவா 11:20 யோவா 1:41 யோவா 1:45 யோவா 21:7 சகரி 3:10 லூக் 10:38-42 1தெச 4:17 1தெச 4:18 1தெச 5:11 எபிரெ 12:12
29அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.சங் 27:8 சங் 119:59 சங் 119:60 நீதி 15:23 நீதி 27:17 உன்ன 3:1-4
30இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
31அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.ஆதி 37:35 2சாமு 12:16-18 1கொரி 2:15
32இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.லூக் 5:8 லூக் 8:41 லூக் 17:16 வெளிப் 5:8 வெளிப் 5:14 வெளிப் 22:8
33அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:ரோம 12:15
34அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.யோவா 1:39 யோவா 20:2 மத் 28:6 மாற் 15:47 மாற் 16:6
35இயேசு கண்ணீர் விட்டார்.யோவா 11:33 ஆதி 43:30 யோபு 30:25 சங் 35:13-15 சங் 119:136 ஏசா 53:3 ஏசா 63:9 எரே 9:1 எரே 13:17 எரே 14:17 புலம் 1:16 லூக் 19:11 லூக் 19:41 ரோம 9:2 ரோம 9:3 எபிரெ 2:16 எபிரெ 2:17 எபிரெ 4:15
36அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!யோவா 14:21-23 யோவா 21:15-17 2கொரி 8:8 2கொரி 8:9 எபே 5:2 எபே 5:25 1யோவா 3:1 1யோவா 4:9 1யோவா 4:10 வெளிப் 1:5
37அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.யோவா 9:6 சங் 78:19 சங் 78:20 மத் 27:40-42 மாற் 15:32 லூக் 23:35 லூக் 23:39
38அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.யோவா 11:33 எசே 9:4 எசே 21:6 மாற் 8:12
39இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.மாற் 16:3
40இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.யோவா 11:23-26 2நாளா 20:20 ரோம 4:17-25
41அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.யோவா 12:28-30 யோவா 17:1 சங் 123:1 லூக் 18:13
42நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.யோவா 11:22 யோவா 8:29 யோவா 12:27 யோவா 12:28 மத் 26:53 எபிரெ 5:7 எபிரெ 7:25
43இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.1இரா 17:21 1இரா 17:22 2இரா 4:33-36 மாற் 4:41 லூக் 7:14 லூக் 7:15 அப் 3:6 அப் 3:12 அப் 9:34 அப் 9:40
44அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.யோவா 11:25 யோவா 11:26 யோவா 5:21 யோவா 5:25 யோவா 10:30 ஆதி 1:3 1சாமு 2:6 சங் 33:9 எசே 37:3-10 ஓசி 13:14 அப் 20:9-12 பிலிப் 3:21 வெளிப் 1:18
45அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.யோவா 11:19 யோவா 11:31 யோவா 2:23 யோவா 10:41 யோவா 12:9-11 யோவா 12:17-19 யோவா 12:42-19
46அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.யோவா 5:15 யோவா 5:16 யோவா 9:13 யோவா 12:37 லூக் 16:30 லூக் 16:31 அப் 5:25
47அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.சங் 2:2-4 மத் 26:3 மத் 27:1 மத் 27:2 மாற் 14:1 லூக் 22:2 அப் 4:5 அப் 4:6 அப் 4:27 அப் 4:28 அப் 5:21
48நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.அப் 5:28 அப் 5:38-40
49அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது;யோவா 18:13 யோவா 18:14 லூக் 3:2 அப் 4:6
50ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.யோவா 11:48 யோவா 18:14 யோவா 19:12 லூக் 24:46 ரோம 3:8
51இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,யாத் 28:30 நியா 20:27 நியா 20:28 1சாமு 23:9 1சாமு 28:6
52அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.யோவா 1:29 யோவா 12:32 சங் 22:15 சங் 22:27 சங் 72:19 ஏசா 49:6 லூக் 2:32 ரோம 3:29 1யோவா 2:2 வெளிப் 5:9 வெளிப் 7:9 வெளிப் 7:10
53அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.நெகே 4:16 நெகே 13:21 சங் 113:2 மத் 16:21 மத் 22:46
54ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.யோவா 4:1-3 யோவா 7:1 யோவா 10:40 யோவா 18:20
55யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.யோவா 2:13 யோவா 5:1 யோவா 6:4 யாத் 12:11-14
56அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.யோவா 11:8 யோவா 7:11 யோவா 11:7
57பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.யோவா 5:16-18 யோவா 8:59 யோவா 9:22 யோவா 10:39 சங் 109:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.