| 1 | அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, | லூக் 6:13-16 மத் 10:2-5 மாற் 3:13-19 மாற் 6:7-13 |
| 2 | தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். | லூக் 10:1 லூக் 10:9 லூக் 10:11 லூக் 16:16 மத் 3:2 மத் 10:7 மத் 10:8 மத் 13:19 மத் 24:14 மாற் 1:14 மாற் 1:15 மாற் 6:12 மாற் 16:15 எபிரெ 2:3 எபிரெ 2:4 |
| 3 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும்வேண்டாம். | லூக் 10:4-12 லூக் 12:22 லூக் 22:35 சங் 37:3 மத் 10:9 மத் 10:10 மாற் 6:8 மாற் 6:9 2தீமோ 2:4 |
| 4 | எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள். | லூக் 10:5-8 மத் 10:11 மாற் 6:10 அப் 16:15 |
| 5 | உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்ததூசியை உதறிப்போடுங்கள் என்றார். | லூக் 9:48 லூக் 10:10-12 லூக் 10:16-12 மத் 10:14 மத் 10:15 மாற் 6:11 மாற் 9:37 அப் 13:51 அப் 18:6 |
| 6 | அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள். | லூக் 9:1 லூக் 9:2 மாற் 6:12 மாற் 6:13 மாற் 16:20 அப் 4:30 அப் 5:15 |
| 7 | அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும், | யோபு 18:11 யோபு 18:12 சங் 73:19 மத் 14:1-12 மாற் 6:14-28 |
| 8 | சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து: | லூக் 9:19 மத் 17:10 மாற் 6:15 மாற் 8:28 யோவா 1:21 |
| 9 | யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்கவிரும்பினான். | லூக் 13:31 லூக் 13:32 லூக் 23:8 |
| 10 | அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். | லூக் 10:17 சகரி 1:10 மாற் 6:30 எபிரெ 13:17 |
| 11 | ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார். | மத் 14:14 மாற் 6:33 மாற் 6:34 ரோம 10:14 ரோம 10:17 |
| 12 | சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். | மத் 14:15-21 மாற் 6:35 மாற் 6:36-44 யோவா 6:1 யோவா 6:5-15 |
| 13 | அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள். | 2இரா 4:42 2இரா 4:43 மத் 14:16 மத் 14:17 மாற் 6:37 மாற் 6:38 யோவா 6:5-9 |
| 14 | ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். | மாற் 6:39 மாற் 6:40 மாற் 8:6 1கொரி 14:40 |
| 15 | அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள். |
| 16 | அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார். | சங் 121:1 சங் 121:2 மத் 14:19 மாற் 7:34 |
| 17 | எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டது. | சங் 37:16 நீதி 13:25 மத் 14:20 மத் 14:21 மத் 15:37 மத் 15:38 மாற் 6:42-44 மாற் 8:8 மாற் 8:9 |
| 18 | பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். | லூக் 11:1 லூக் 22:39-41 மத் 26:36 |
| 19 | அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். | லூக் 9:7 லூக் 9:8 மல்கி 4:5 மத் 14:2 யோவா 1:21 யோவா 1:25 |
| 20 | அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். | மத் 5:47 மத் 16:15 மத் 22:42 |
| 21 | அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். | மத் 16:20 மத் 17:9 மாற் 8:31 |
| 22 | மேலும் மனுஷகுமாரன் பலபாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். | லூக் 9:44 லூக் 18:31-34 லூக் 24:7 லூக் 24:26 ஆதி 3:15 சங் 22:1-31 சங் 69:1-36 ஏசா 53:1-12 தானி 9:26 சகரி 13:7 மத் 16:21 மத் 17:12 மத் 17:22 மாற் 8:31 மாற் 9:31 மாற் 10:33 மாற் 10:34 அப் 4:25-28 அப் 13:27-29 1கொரி 15:4 1பேது 1:11 |
| 23 | பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். | லூக் 14:26 லூக் 14:27 மத் 10:38 மத் 10:39 மத் 16:22-25 மாற் 8:34-38 யோவா 12:25 யோவா 12:26 ரோம 8:13 கொலோ 3:5 2தீமோ 3:12 |
| 24 | தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். | லூக் 17:33 அப் 20:23 அப் 20:24 எபிரெ 11:35 வெளிப் 2:10 வெளிப் 12:11 |
| 25 | மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? | லூக் 4:5-7 லூக் 12:19-21 லூக் 16:24 லூக் 16:25 சங் 49:6-8 மத் 16:26 மாற் 8:36 மாற் 9:43-48 அப் 1:18 அப் 1:25 2பேது 2:15-17 வெளிப் 18:7 வெளிப் 18:8 |
| 26 | என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். | லூக் 12:8 லூக் 12:9 சங் 22:6-8 ஏசா 53:3 மத் 10:32 மத் 10:33 மாற் 8:38 யோவா 5:44 யோவா 12:43 ரோம 1:16 2கொரி 12:10 கலா 6:14 2தீமோ 1:12 2தீமோ 2:12 எபிரெ 11:26 எபிரெ 13:13 1பேது 4:14-16 வெளிப் 3:5 |
| 27 | இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 16:28 மாற் 9:1 யோவா 14:2 யோவா 16:7 |
| 28 | இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். | மத் 17:1-13 மாற் 9:2-13 |
| 29 | அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. | யாத் 34:29-35 ஏசா 33:17 ஏசா 53:2 மத் 17:2 மாற் 9:2 மாற் 9:3 யோவா 1:14 அப் 6:15 பிலிப் 3:7 பிலிப் 3:8 2பேது 1:16-18 வெளிப் 1:13-16 வெளிப் 20:11 |
| 30 | அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, | லூக் 24:27 லூக் 24:44 மத் 17:3 மத் 17:4 மாற் 9:4-6 யோவா 1:17 ரோம 3:21-23 2கொரி 3:7-11 எபிரெ 3:3-6 |
| 31 | அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். | 2கொரி 3:18 பிலிப் 3:21 கொலோ 3:4 1பேது 5:10 |
| 32 | பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள். | லூக் 22:45 லூக் 22:46 தானி 8:18 தானி 10:9 மத் 26:40-43 |
| 33 | அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். | சங் 4:6 சங் 4:7 சங் 27:4 சங் 63:2-5 சங் 73:28 யோவா 14:8 2கொரி 4:6 |
| 34 | இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். | யாத் 14:19 யாத் 14:20 யாத் 40:34-38 சங் 18:9-11 ஏசா 19:1 மத் 17:5-7 மாற் 9:7 மாற் 9:8 |
| 35 | அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. | லூக் 3:22 மத் 3:17 யோவா 3:16 யோவா 3:35 யோவா 3:36 2பேது 1:17 2பேது 1:18 |
| 36 | அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள். | பிரச 3:7 மத் 17:9 மாற் 9:6 மாற் 9:10 |
| 37 | மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். | மத் 17:14-21 மாற் 9:14-29 |
| 38 | அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். | லூக் 7:12 லூக் 8:41 லூக் 8:42 மத் 15:22 யோவா 4:47 |
| 39 | ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. | லூக் 4:35 லூக் 8:29 மாற் 5:4 மாற் 5:5 மாற் 9:20 மாற் 9:26 யோவா 8:44 1பேது 5:8 வெளிப் 9:11 |
| 40 | அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். | லூக் 9:1 லூக் 10:17-19 2இரா 4:31 மத் 17:20 மத் 17:21 அப் 19:13-16 |
| 41 | இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். | லூக் 8:25 மாற் 9:19 யோவா 20:27 எபிரெ 3:19 எபிரெ 4:2 எபிரெ 4:11 |
| 42 | அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். | லூக் 9:39 மாற் 1:26 மாற் 1:27 மாற் 9:20 மாற் 9:26 மாற் 9:27 வெளிப் 12:12 |
| 43 | அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: | லூக் 4:36 லூக் 5:9 லூக் 5:26 லூக் 8:25 சங் 139:14 சகரி 8:6 மாற் 6:51 அப் 3:10-13 |
| 44 | நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். | லூக் 1:66 லூக் 2:19 லூக் 2:51 ஏசா 32:9 ஏசா 32:10 யோவா 16:4 1தெச 3:3 1தெச 3:4 எபிரெ 2:1 எபிரெ 12:2-5 |
| 45 | அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள். | லூக் 9:46 லூக் 2:50 லூக் 18:34 மத் 16:22 மாற் 8:16-18 மாற் 8:32-18 மாற் 8:33-18 மாற் 9:10 மாற் 9:32 யோவா 12:16 யோவா 12:34 யோவா 14:5 யோவா 16:17 யோவா 16:18 2கொரி 3:14-16 |
| 46 | பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று. | லூக் 14:7-11 லூக் 22:24-27 மத் 18:1-5 மத் 20:20-22 மத் 23:6 மத் 23:7 மாற் 9:33-37 ரோம 12:3 ரோம 12:10 கலா 5:20 கலா 5:21 கலா 5:25 கலா 5:26 பிலிப் 2:3 பிலிப் 2:14 3யோவா 1:9 |
| 47 | இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, | லூக் 5:22 லூக் 7:39 லூக் 7:40 சங் 139:2 சங் 139:23 எரே 17:10 யோவா 2:25 யோவா 16:30 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 48 | அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். | லூக் 10:16 மத் 10:40-42 மத் 18:5 மத் 18:6 மத் 18:10 மத் 18:14 மத் 25:40 மத் 25:45 மாற் 9:37 யோவா 12:44 யோவா 12:45 யோவா 13:20 யோவா 14:21 1தெச 4:8 |
| 49 | அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். | எண் 11:27-29 மாற் 9:38-40 மாற் 10:13 மாற் 10:14 அப் 4:18 அப் 4:19 அப் 5:28 1தெச 2:16 3யோவா 1:9 3யோவா 1:10 |
| 50 | அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார். | யோசு 9:14 நீதி 3:5 நீதி 3:6 மத் 13:28-30 மத் 17:24 மத் 17:26 பிலிப் 1:15-18 |
| 51 | பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, | லூக் 24:51 2இரா 2:1-3 2இரா 2:11-3 மாற் 16:19 யோவா 6:62 யோவா 13:1 யோவா 16:5 யோவா 16:28 யோவா 17:11 அப் 1:2 அப் 1:9 எபே 1:20 எபே 4:8-11 1தீமோ 3:16 எபிரெ 6:20 எபிரெ 12:2 1பேது 3:22 |
| 52 | தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். | லூக் 7:27 லூக் 10:1 மல்கி 3:1 |
| 53 | அவர் எருசலேமுக்குப்போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. | லூக் 9:48 யோவா 4:9 யோவா 4:40-42 |
| 54 | அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். | 2சாமு 21:2 2இரா 10:16 2இரா 10:31 யாக் 1:19 யாக் 1:20 யாக் 3:14-18 |
| 55 | அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, | 1சாமு 24:4-7 1சாமு 26:8-11 2சாமு 19:22 யோபு 31:29-31 நீதி 9:8 மத் 16:23 வெளிப் 3:19 |
| 56 | மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள். | லூக் 19:10 மத் 18:11 மத் 20:28 யோவா 3:17 யோவா 10:10 யோவா 12:47 1தீமோ 1:15 |
| 57 | அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். | யாத் 19:8 மத் 8:19 மத் 8:20 யோவா 13:37 |
| 58 | அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். | லூக் 14:26-33 லூக் 18:22 லூக் 18:23 யோசு 24:19-22 யோவா 6:60-66 |
| 59 | வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். | மத் 4:19-22 மத் 9:9 மத் 16:24 |
| 60 | அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார். | லூக் 15:32 எபே 2:1 எபே 2:5 1தீமோ 5:6 வெளிப் 3:1 |
| 61 | பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். | லூக் 14:18-20 லூக் 14:26-20 உபா 33:9 1இரா 19:20 பிரச 9:10 மத் 10:37 மத் 10:38 |
| 62 | அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். | லூக் 17:31 லூக் 17:32 சங் 78:8 சங் 78:9 அப் 15:37 அப் 15:38 2தீமோ 4:10 எபிரெ 10:38 யாக் 1:6-8 2பேது 2:20-22 |