| 1 | பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள். | யாத் 12:15 லேவி 23:7 லேவி 23:10 லேவி 23:11 லேவி 23:15 உபா 16:9 |
| 2 | பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். | லூக் 6:7-9 லூக் 5:33 மத் 12:2 மத் 15:2 மத் 23:23 மத் 23:24 மாற் 2:24 யோவா 5:9-11 யோவா 5:16-11 யோவா 9:14-16 |
| 3 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் மாத்திரமேதவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி, | மத் 12:3 மத் 12:5 மத் 19:4 மத் 21:16 மத் 21:42 மத் 22:31 மாற் 2:25 மாற் 12:10 மாற் 12:26 |
| 4 | தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார். | லேவி 24:5-9 |
| 5 | மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். | மத் 11:5-8 மாற் 2:27 மாற் 9:7 வெளிப் 1:10 |
| 6 | வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். | மத் 12:9-14 மாற் 3:1-6 |
| 7 | அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். | லூக் 13:14 லூக் 14:1-6 சங் 37:32 சங் 37:33 சங் 38:12 ஏசா 29:21 எரே 20:10 மாற் 3:2 யோவா 5:10-16 யோவா 9:16 யோவா 9:26-29 |
| 8 | அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான். | லூக் 5:22 1நாளா 28:9 1நாளா 29:17 யோபு 42:2 சங் 44:21 யோவா 2:25 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 9 | அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு, | லூக் 14:3 மத் 12:12 மத் 12:13 மாற் 3:4 யோவா 7:19-23 |
| 10 | அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. | மாற் 3:5 |
| 11 | அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள். | லூக் 4:28 சங் 2:1 சங் 2:2 பிரச 9:3 அப் 5:33 அப் 7:54 அப் 26:11 |
| 12 | அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். | சங் 55:15-17 சங் 109:3 சங் 109:4 தானி 6:10 மத் 6:6 மாற் 1:35 மாற் 14:34-36 எபிரெ 5:7 |
| 13 | பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். | லூக் 9:1 லூக் 9:2 மத் 9:36-38 மத் 10:1-4 மாற் 3:13-19 மாற் 6:7 |
| 14 | அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, | லூக் 5:8 யோவா 1:40-42 யோவா 21:15-20 அப் 1:13 2பேது 1:1 |
| 15 | மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், | லூக் 5:27 |
| 16 | யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. | மத் 10:3 |
| 17 | பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். | மத் 4:23-25 மத் 12:15 மாற் 3:7-12 |
| 18 | அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். | மத் 15:22 மத் 17:15 அப் 5:16 |
| 19 | அவரிடத்திலிருந்து வல்லமைபுறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள். | எண் 21:8 எண் 21:9 2இரா 13:21 மத் 9:20 மத் 9:21 மத் 14:36 மாற் 3:10 மாற் 6:56 மாற் 8:22 யோவா 3:14 யோவா 3:15 அப் 5:15 அப் 5:16 அப் 19:12 |
| 20 | அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. | மத் 5:2-12 மத் 12:49 மத் 12:50 மாற் 3:34 மாற் 3:35 |
| 21 | இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். | லூக் 6:25 லூக் 1:53 சங் 42:1 சங் 42:2 சங் 143:6 ஏசா 55:1 ஏசா 55:2 1கொரி 4:11 2கொரி 11:27 2கொரி 12:10 |
| 22 | மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். | மத் 5:10-12 மத் 10:22 மாற் 13:9-13 யோவா 7:7 யோவா 15:18-20 யோவா 17:14 2கொரி 11:23-26 பிலிப் 1:28-30 1தெச 2:14 1தெச 2:15 2தீமோ 3:11 2தீமோ 3:12 1பேது 2:19 1பேது 2:20 1பேது 3:14 1பேது 4:12-16 |
| 23 | அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். | அப் 5:41 ரோம 5:3 2கொரி 12:10 கொலோ 1:24 யாக் 1:2 |
| 24 | ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது. | லூக் 12:15-21 லூக் 18:23-25 யோபு 21:7-15 சங் 49:6 சங் 49:7 சங் 49:16-19 சங் 73:3-12 நீதி 1:32 எரே 5:4-6 ஆமோ 4:1-3 ஆமோ 6:1-6 ஆகா 2:9 1தீமோ 6:17 யாக் 2:6 யாக் 5:1-6 வெளிப் 18:6-8 |
| 25 | திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள். | உபா 6:11 உபா 6:12 1சாமு 2:5 நீதி 30:9 ஏசா 28:7 ஏசா 65:13 பிலிப் 4:12 பிலிப் 4:13 வெளிப் 3:17 |
| 26 | எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். | மீகா 2:11 யோவா 7:7 யோவா 15:19 ரோம 16:18 2தெச 2:8-12 யாக் 4:4 2பேது 2:18 2பேது 2:19 1யோவா 4:5 1யோவா 4:6 வெளிப் 13:3 வெளிப் 13:4 |
| 27 | எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். | லூக் 8:8 லூக் 8:15 லூக் 8:18 மாற் 4:24 |
| 28 | உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். | லூக் 23:34 அப் 7:60 ரோம 12:14 1கொரி 4:12 யாக் 3:10 1பேது 3:9 |
| 29 | உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. | மத் 5:39 |
| 30 | உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. | லூக் 6:38 லூக் 11:41 லூக் 12:33 லூக் 18:22 உபா 15:7-10 சங் 41:1 சங் 112:9 நீதி 3:27 நீதி 3:28 நீதி 11:24 நீதி 11:25 நீதி 19:17 நீதி 21:26 நீதி 22:9 எசே 11:1 எசே 11:2 ஏசா 58:7-10 பிரச 8:16 மத் 5:42-48 அப் 20:35 2கொரி 8:9 2கொரி 9:6-14 எபே 4:28 |
| 31 | மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். | மத் 7:12 மத் 22:39 கலா 5:14 யாக் 2:8-16 |
| 32 | உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. | மத் 5:46 மத் 5:47 |
| 33 | உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. |
| 34 | திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. | லூக் 6:35 லூக் 14:12-14 உபா 15:8-11 மத் 5:42 |
| 35 | உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. | லூக் 6:27-31 லேவி 25:35-37 சங் 37:26 சங் 112:5 நீதி 19:17 நீதி 22:9 ரோம 5:8-10 2கொரி 8:9 |
| 36 | ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். | மத் 5:48 எபே 4:31 எபே 5:1 எபே 5:2 1பேது 1:15 1பேது 1:16 |
| 37 | மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். | ஏசா 65:5 மத் 7:1 ரோம 2:1 ரோம 2:2 ரோம 14:3 ரோம 14:4 ரோம 14:10-16 1கொரி 4:3-5 யாக் 4:11 யாக் 4:12 |
| 38 | கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். | லூக் 6:30 உபா 15:10 எஸ்றா 7:27 எஸ்றா 7:28 யோபு 31:16-20 யோபு 42:11 நீதி 3:9 நீதி 3:10 நீதி 10:22 நீதி 19:17 நீதி 22:9 பிரச 11:1 பிரச 11:2 மத் 10:42 2கொரி 8:14 2கொரி 8:15 2கொரி 9:6-8 பிலிப் 4:17-19 |
| 39 | பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? | ஏசா 9:16 ஏசா 56:10 மத் 15:14 மத் 23:16-26 ரோம 2:19 1தீமோ 6:3-5 2தீமோ 3:13 |
| 40 | சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான். | மத் 10:24 மத் 10:25 யோவா 13:16 யோவா 15:20 |
| 41 | நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? | மத் 7:3-5 ரோம 2:1 ரோம 2:21-24 |
| 42 | அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். | லூக் 13:15 மத் 23:13-15 அப் 8:21 அப் 13:10 |
| 43 | நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. | சங் 92:12-14 ஏசா 5:4 ஏசா 61:3 எரே 2:21 மத் 3:10 மத் 7:16-20 மத் 12:33 |
| 44 | அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. | கலா 5:19-23 தீத் 2:11-13 யாக் 3:12 யூதா 1:12 |
| 45 | நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். | சங் 37:30 சங் 37:31 சங் 40:8-10 சங் 71:15-18 நீதி 10:20 நீதி 10:21 நீதி 12:18 நீதி 15:23 நீதி 22:17 நீதி 22:18 மத் 12:35 யோவா 7:38 எபே 4:29 எபே 5:3 எபே 5:4 எபே 5:19 கொலோ 4:6 |
| 46 | என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? | லூக் 13:25-27 மல்கி 1:6 மத் 7:21-23 மத் 25:11 மத் 25:24 மத் 25:44 யோவா 13:13-17 கலா 6:7 |
| 47 | என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். | லூக் 14:26 ஏசா 55:3 மத் 11:28 யோவா 5:40 யோவா 6:35 யோவா 6:37 யோவா 6:44 யோவா 6:45 1பேது 2:4 |
| 48 | ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. | நீதி 10:25 ஏசா 28:16 மத் 7:25 மத் 7:26 1கொரி 3:10-12 எபே 2:20 2தீமோ 2:19 |
| 49 | என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். | லூக் 6:46 லூக் 8:5-7 லூக் 19:14 லூக் 19:27 எரே 44:16 எரே 44:17 எசே 33:31 மத் 21:29 மத் 21:30 மத் 23:3 யோவா 15:2 யாக் 1:22-26 யாக் 2:17-26 2பேது 1:5-9 1யோவா 2:3 1யோவா 2:4 |