இணை வசன வேதாகமம்

Click to Subscribe

லூக்கா 5

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.லூக் 8:45 லூக் 12:1 மத் 4:18-22 மத் 11:12 மாற் 1:16-20 மாற் 3:9 மாற் 5:24
2அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.மத் 4:21 மாற் 1:19
3அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.மத் 4:18 யோவா 1:41 யோவா 1:42
4அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.மத் 17:27 யோவா 21:6
5அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.சங் 127:1 சங் 127:2 எசே 37:11 எசே 37:12 யோவா 21:3
6அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.2இரா 4:3-7 பிரச 11:6 யோவா 21:6-11 அப் 2:41 அப் 4:4 1கொரி 15:58 கலா 6:9
7அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.யாத் 23:5 நீதி 18:24 அப் 11:25 ரோம 16:2-4 கலா 6:2 பிலிப் 4:3
8சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.மத் 2:11 யோவா 11:32 அப் 10:25 அப் 10:26 வெளிப் 1:17 வெளிப் 22:8 வெளிப் 22:9
9அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.லூக் 4:32 லூக் 4:36 சங் 8:6 சங் 8:8 மாற் 9:6
10சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.லூக் 6:14 மத் 4:21 மத் 20:20
11அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.லூக் 18:28-30 மத் 4:20 மத் 10:37 மத் 19:27 மாற் 1:18-25 மாற் 10:21 மாற் 10:29 மாற் 10:30 பிலிப் 3:7 பிலிப் 3:8
12பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.மத் 8:2-4 மாற் 1:40-45
13அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.ஆதி 1:3 ஆதி 1:9 சங் 33:9 2இரா 5:10 2இரா 5:14 எசே 36:25-27 எசே 36:29-27 ஓசி 14:4 மத் 9:29 மத் 9:30
14அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.மத் 8:4 மத் 9:30 மத் 12:16
15அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.நீதி 15:33 1தீமோ 5:25
16அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.லூக் 6:12 மத் 14:23 மாற் 1:35 மாற் 1:36 மாற் 6:46 யோவா 6:15
17பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.லூக் 5:21 லூக் 5:30 லூக் 7:30 லூக் 11:52-54 லூக் 15:2 யோவா 3:21
18அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.மத் 9:2-8 மாற் 2:3-12 யோவா 5:5 யோவா 5:6 அப் 9:33
19ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.மாற் 2:4
20அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.ஆதி 22:12 யோவா 2:25 அப் 11:23 அப் 14:9 யாக் 2:18
21அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.லூக் 5:17 லூக் 7:49 மாற் 2:6 மாற் 2:7
22இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?1நாளா 28:9 சங் 139:2 நீதி 15:26 ஏசா 66:18 எசே 38:10 மத் 9:4 மத் 12:25 எபிரெ 4:12 வெளிப் 2:23
23உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?மத் 9:5 மாற் 2:9
24பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.தானி 7:13 மத் 16:13 மத் 25:31 மத் 26:64 யோவா 3:13 யோவா 5:27 வெளிப் 1:13
25உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.லூக் 5:13 ஆதி 1:3 சங் 33:9
26அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.லூக் 7:16 மத் 9:8 மத் 12:23 மாற் 2:12 அப் 4:21 கலா 1:24
27இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.மத் 9:9-13 மத் 10:3
28அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.லூக் 5:11 லூக் 9:59-62 1இரா 19:19-21 மத் 19:22-27
29அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.யோவா 12:2
30வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.லூக் 5:17 லூக் 5:21 லூக் 7:29 லூக் 7:30 லூக் 7:34 லூக் 7:39 லூக் 15:1 லூக் 15:2 லூக் 18:11 லூக் 19:7 ஏசா 65:5 மத் 21:28-32 மாற் 7:3
31இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.எரே 8:22 மத் 9:12 மத் 9:13 மாற் 2:17
32நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.லூக் 4:18 லூக் 4:19 லூக் 15:7 லூக் 15:10 லூக் 18:10-14 லூக் 19:10 லூக் 24:47 ஏசா 55:6 ஏசா 55:7 ஏசா 57:15 மத் 18:11 மாற் 15:7 மாற் 15:10 அப் 2:38 அப் 3:19 அப் 3:26 அப் 5:31 அப் 17:30 அப் 20:21 அப் 26:18-20 1கொரி 6:9-11 1தீமோ 1:15 1தீமோ 1:16 2தீமோ 2:25 2தீமோ 2:26 2பேது 3:9
33பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.லூக் 18:12 ஏசா 58:3-6 சகரி 7:6 மத் 9:14-17 மாற் 2:18-22
34அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?நியா 14:10 நியா 14:11 சங் 45:14 உன்ன 2:6 உன்ன 2:7 உன்ன 3:10 உன்ன 3:11 உன்ன 5:8 உன்ன 6:1 மத் 25:1-10 வெளிப் 19:7-9
35மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.லூக் 24:17-21 தானி 9:26 சகரி 13:7 யோவா 12:8 யோவா 13:33 யோவா 14:3 யோவா 14:4 யோவா 16:4-7 யோவா 16:16-22 யோவா 16:28 யோவா 17:11-13 அப் 1:9 அப் 3:21
36அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.மத் 9:16 மத் 9:17 மாற் 2:21 மாற் 2:22
37ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்.யோசு 9:4 யோசு 9:13 சங் 119:83
38புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.எசே 36:26 2கொரி 5:17 கலா 2:4 கலா 2:12-14 கலா 4:9-11 கலா 5:1-6 கலா 6:13 கலா 6:14 பிலிப் 3:5-7 கொலோ 2:19-23 1தீமோ 4:8 எபிரெ 8:8-13 எபிரெ 13:9 எபிரெ 13:10 வெளிப் 21:5
39அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.எரே 6:16 மாற் 7:7-13 ரோம 4:11 ரோம 4:12 எபிரெ 11:1 எபிரெ 11:2 எபிரெ 11:39
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.