இணை வசன வேதாகமம்

Click to Subscribe

லூக்கா 7

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.மத் 7:28 மத் 7:29
2அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.லூக் 23:47 மத் 27:54 அப் 10:1 அப் 22:26 அப் 23:17 அப் 27:1 அப் 27:3 அப் 27:43
3அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.லூக் 8:41 லூக் 9:38 மத் 8:5 யோவா 4:47 பிலேமோ 1:10
4அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.லூக் 7:6 லூக் 7:7 லூக் 20:35 மத் 10:11 மத் 10:13 மத் 10:37 மத் 10:38 வெளிப் 3:4
5அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.1இரா 5:1 2நாளா 2:11 2நாளா 2:12 கலா 5:6 1யோவா 3:14 1யோவா 5:1-3
6அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;மத் 20:28 மாற் 5:24 அப் 10:38
7நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.லூக் 4:36 லூக் 5:13 யாத் 15:26 உபா 32:39 1சாமு 2:6 சங் 33:9 சங் 107:20 மாற் 1:27
8நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.அப் 22:25 அப் 22:26 அப் 23:17 அப் 23:23 அப் 23:26 அப் 24:23 அப் 25:26
9இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.மத் 8:10 மத் 15:28
10அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.மத் 8:13 மத் 15:28 மாற் 9:23 யோவா 4:50-53
11மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.அப் 10:38
12அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.லூக் 8:42 ஆதி 22:2 ஆதி 22:12 2சாமு 14:7 1இரா 17:9 1இரா 17:12 1இரா 17:18 1இரா 17:23 2இரா 4:16 2இரா 4:20 சகரி 12:10
13கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,நியா 10:16 சங் 86:5 சங் 86:15 சங் 103:13 ஏசா 63:9 எரே 31:20 புலம் 3:32 புலம் 3:33 மாற் 8:2 யோவா 11:33-35 எபிரெ 2:17 எபிரெ 4:15
14கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.லூக் 8:54 லூக் 8:55 1இரா 17:21 யோபு 14:12 யோபு 14:14 சங் 33:9 ஏசா 26:19 எசே 37:3-10 யோவா 5:21 யோவா 5:25 யோவா 5:28 யோவா 5:29 யோவா 11:25 யோவா 11:43 யோவா 11:44 அப் 9:40 அப் 9:41 ரோம 4:17 எபே 5:12
15மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.1இரா 17:23 1இரா 17:24 2இரா 4:32-37 2இரா 13:21
16எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.லூக் 1:65 லூக் 5:8 லூக் 5:26 லூக் 8:37 எரே 33:9 மத் 28:8 அப் 5:5 அப் 5:11-13
17இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.லூக் 7:14 மத் 4:24 மத் 9:31 மாற் 1:28 மாற் 6:14
18இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,மத் 11:2-6 யோவா 3:26
19நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.லூக் 10:1 யோசு 2:1 மாற் 6:7 அப் 10:7 அப் 10:8 வெளிப் 11:3
20அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
21அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங்குருடருக்குப் பார்வையளித்தார்.1இரா 8:37 சங் 90:7-9 மாற் 3:10 மாற் 5:29 மாற் 5:34 1கொரி 11:30-32 எபிரெ 12:6 யாக் 5:14 யாக் 5:15
22இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.யோவா 1:46
23என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.லூக் 2:34 ஏசா 8:14 ஏசா 8:15 மத் 11:6 மத் 13:57 மத் 13:58 யோவா 6:60-66 ரோம 9:32 ரோம 9:33 1கொரி 1:21-28 1கொரி 2:14 1பேது 2:7 1பேது 2:8
24யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?மத் 11:7 மத் 11:8
25அல்லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.2இரா 1:8 ஏசா 59:17 மத் 3:4 1பேது 3:3 1பேது 3:4
26அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.லூக் 1:76 லூக் 20:6
27இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.லூக் 1:15-17 லூக் 1:76-17 ஏசா 40:3 மல்கி 3:1 மல்கி 4:5 மல்கி 4:6 யோவா 1:23
28ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.லூக் 1:14 லூக் 1:15 லூக் 3:16
29யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.லூக் 7:35 நியா 1:7 சங் 51:4 ரோம 3:4-6 ரோம 10:3 வெளிப் 15:3 வெளிப் 16:5
30பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.லூக் 13:34 எரே 8:8 ரோம 10:21 2கொரி 6:1 கலா 2:21
31பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?புலம் 2:13 மத் 11:16-19 மாற் 4:30
32சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.நீதி 17:16 ஏசா 28:9-13 ஏசா 29:11 ஏசா 29:12 எரே 5:3-5 மத் 11:16-19
33எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.லூக் 1:15 எரே 16:8-10 மத் 3:4 மாற் 1:6
34மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.லூக் 7:36 லூக் 5:29 லூக் 11:37 லூக் 14:1 யோவா 2:2 யோவா 12:2
35ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.லூக் 7:29 நீதி 8:32-36 நீதி 17:16 ஓசி 14:9 மத் 11:19 1கொரி 2:14 1கொரி 2:15
36பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.மத் 26:6-5 மாற் 14:3-9 யோவா 11:2-16
37அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,லூக் 7:34 லூக் 7:39 லூக் 5:30 லூக் 5:32 லூக் 18:13 லூக் 19:7 மத் 21:31 யோவா 9:24 யோவா 9:31 ரோம 5:8 1தீமோ 1:9 1தீமோ 1:15 1பேது 4:18
38அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.லூக் 6:21 லூக் 22:62 நியா 2:4 நியா 2:5 எஸ்றா 10:1 சங் 6:6-8 சங் 38:18 சங் 51:17 சங் 126:5 சங் 126:6 ஏசா 61:3 எரே 31:9 எரே 31:18-20 யோவே 2:12 சகரி 12:10 மத் 5:4 2கொரி 7:10 2கொரி 7:11 யாக் 4:9
39அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.லூக் 3:8 லூக் 12:17 லூக் 16:3 லூக் 18:4 2இரா 5:20 நீதி 23:7 மாற் 2:6 மாற் 2:7 மாற் 7:21
40இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.லூக் 5:22 லூக் 5:31 லூக் 6:8 யோவா 16:19 யோவா 16:30
41அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.லூக் 11:4 லூக் 13:4 ஏசா 50:1 மத் 6:12 மத் 18:23-25
42கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.சங் 49:7 சங் 49:8 மத் 18:25 மத் 18:26 மத் 18:34 ரோம 5:6 கலா 3:10
43சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,லூக் 7:47 1கொரி 15:9 1கொரி 15:10 2கொரி 5:14 2கொரி 5:15 1தீமோ 1:13-16
44ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.ஆதி 19:2 நியா 19:21 1சாமு 25:41 1தீமோ 5:10 யாக் 2:6
45நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.ஆதி 29:11 ஆதி 33:4 2சாமு 15:5 2சாமு 19:39 மத் 26:48 ரோம 16:16 1கொரி 16:20 1தெச 5:26
46நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.ரூத் 3:3 2சாமு 14:2 சங் 23:5 சங் 104:15 பிரச 9:8 தானி 10:3 ஆமோ 6:6 மீகா 6:15 மத் 6:17
47ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;லூக் 7:42 லூக் 5:20 லூக் 5:21 யாத் 34:6 யாத் 34:7
48அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.மத் 9:2 மாற் 2:5
49அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.லூக் 5:20 லூக் 5:21 மத் 9:3 மாற் 2:7
50அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.லூக் 8:18 லூக் 8:42 லூக் 8:48 லூக் 18:42 ஆபகூ 2:4 மத் 9:22 மாற் 5:34 மாற் 10:52 எபே 2:8-10 யாக் 2:14-26
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.