இணை வசன வேதாகமம்

Click to Subscribe

லூக்கா 3

                   
புத்தகங்களைக் காட்டு
1திபேரியுராயன் ராஜ்யபாரம்பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,லூக் 2:1
2அன்னாவும் காய்பாவும் பிரதானஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.யோவா 11:49-51 யோவா 18:13 யோவா 18:14 யோவா 18:24 அப் 4:6
3அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,மத் 3:5 மாற் 1:4 மாற் 1:5 யோவா 1:28 யோவா 3:26
4பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,ஏசா 40:3-5 மத் 3:3 மாற் 1:3 யோவா 1:23
5மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,லூக் 1:51-53 ஏசா 2:11-17 ஏசா 35:6-8 ஏசா 40:4 ஏசா 49:11 ஏசா 61:1-3 எசே 17:24 யாக் 1:9
6அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.லூக் 2:10 லூக் 2:11 லூக் 2:30-32 சங் 98:2 சங் 98:3 ஏசா 40:5 ஏசா 49:6 ஏசா 52:10 மாற் 16:15 ரோம 10:12 ரோம 10:18
7அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?ஆதி 3:15 சங் 58:4 சங் 58:5 ஏசா 59:5 மத் 3:7-10 மத் 23:33 யோவா 8:44 அப் 13:10 1யோவா 3:8
8மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஏசா 1:16-18 எசே 18:27-31 அப் 26:20 2கொரி 7:10 2கொரி 7:11 கலா 5:22-24 பிலிப் 1:11 எபிரெ 6:7 எபிரெ 6:8
9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.லூக் 13:7 லூக் 13:9 லூக் 23:29-31 ஏசா 10:33 ஏசா 10:34 எசே 15:2-4 எசே 31:18 தானி 4:14 தானி 4:23 மத் 3:10 மத் 7:19 யோவா 15:6 எபிரெ 10:28 எபிரெ 12:29
10அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.லூக் 3:8 அப் 2:37 அப் 9:6 அப் 16:30
11அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.லூக் 11:41 லூக் 18:22 லூக் 19:8 ஏசா 58:7-11 தானி 4:27 மத் 25:40 மாற் 14:5-8 யோவா 13:29 அப் 10:2 அப் 10:4 அப் 10:31 2கொரி 8:3-14 1தீமோ 6:18 எபிரெ 6:10 யாக் 1:27 யாக் 2:15-26 1யோவா 3:17 1யோவா 4:20
12ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.லூக் 7:29 லூக் 15:1 லூக் 15:2 லூக் 18:13 மத் 21:31 மத் 21:32
13அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.லூக் 19:8 சங் 18:23 நீதி 28:13 ஏசா 1:16 ஏசா 1:17 ஏசா 55:6 ஏசா 55:7 எசே 18:21 எசே 18:22 எசே 18:27 எசே 18:28 மீகா 6:8 மத் 7:12 1கொரி 6:10 எபே 4:28 தீத் 2:11 தீத் 2:12 எபிரெ 12:1
14போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.மத் 8:5 அப் 10:7
15யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,யோவா 10:24
16யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுப்பார்.மத் 3:11 மாற் 1:7 மாற் 1:8 யோவா 1:26 யோவா 1:33 அப் 1:5 அப் 11:16 அப் 13:24 அப் 13:25 அப் 19:4 அப் 19:5
17தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.எரே 15:7 மத் 3:12
18வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.யோவா 1:15 யோவா 1:29 யோவா 1:34 யோவா 3:29-36 அப் 2:40
19காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,நீதி 9:7 நீதி 9:8 நீதி 15:12 மத் 11:2 மத் 14:3 மத் 14:4 மாற் 6:17 மாற் 6:18
20தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.லூக் 13:31-34 2இரா 21:16 2இரா 24:4 2நாளா 24:17-22 2நாளா 36:16 நெகே 9:26 எரே 2:30 மத் 21:35-41 மத் 22:6 மத் 22:7 மத் 23:31-33 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 16:6
21ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;மத் 3:13-15 மாற் 1:9 யோவா 1:32-34
22பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.லூக் 9:34 லூக் 9:35 சங் 2:7 ஏசா 42:1 மத் 12:18 மத் 17:5 மத் 27:43 கொலோ 1:13 1பேது 2:4 2பேது 1:17 2பேது 1:18
23அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;ஆதி 41:46 எண் 4:3 எண் 4:35 எண் 4:39 எண் 4:43 எண் 4:47
24ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
25யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
26நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
27யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
29யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
30லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.
31எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.2சாமு 5:14 1நாளா 3:5 1நாளா 14:4 சகரி 12:12
32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.ரூத் 4:18-22 1சாமு 17:58 1சாமு 20:31 1இரா 12:16 1நாளா 2:10-15 சங் 72:20 ஏசா 11:1 ஏசா 11:2 மத் 1:3-6 அப் 13:22 அப் 13:23
33நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.ரூத் 4:19 ரூத் 4:20 1நாளா 2:9 1நாளா 2:10
34யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.ஆதி 21:3 ஆதி 25:26 1நாளா 1:34 மத் 1:2 அப் 7:8
35நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.ஆதி 11:18-21
36சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.ஆதி 5:32 ஆதி 7:13 ஆதி 9:18 ஆதி 9:26 ஆதி 9:27 ஆதி 10:21 ஆதி 10:22 ஆதி 11:10-26 1நாளா 1:17
37லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.ஆதி 5:6-28 1நாளா 1:1-3
38ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.ஆதி 4:25 ஆதி 4:26 ஆதி 5:3
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.