| 1 | அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். | மாற் 7:11-13 மாற் 12:41-44 |
| 2 | ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: | மாற் 12:42 |
| 3 | இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 4:25 லூக் 9:27 லூக் 12:44 அப் 4:27 அப் 10:34 |
| 4 | அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். | லூக் 8:43 லூக் 15:12 அப் 2:44 அப் 2:45 அப் 4:34 |
| 5 | பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது, | மத் 24:1 மத் 24:2 மாற் 13:1 மாற் 13:2 யோவா 2:20 |
| 6 | அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார். | லூக் 19:44-48 1இரா 9:7-9 2நாளா 7:20-22 ஏசா 64:10 ஏசா 64:11 எரே 7:11-14 எரே 26:6 எரே 26:9 எரே 26:18 புலம் 2:6-8 புலம் 4:1 புலம் 5:18 எசே 7:20-22 தானி 9:26 தானி 9:27 மீகா 3:12 சகரி 11:1 சகரி 14:2 மத் 24:2 மாற் 13:2 அப் 6:13 அப் 6:14 |
| 7 | அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள். | லூக் 21:32 தானி 12:6 தானி 12:8 மத் 24:3 மாற் 13:3 மாற் 13:4 யோவா 21:21 யோவா 21:22 அப் 1:6 அப் 1:7 |
| 8 | அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். | எரே 29:8 மத் 24:4 மத் 24:5 மத் 24:11 மத் 24:23-25 மாற் 13:5 மாற் 13:6 மாற் 13:21-23 2கொரி 11:13-15 எபே 5:6 2தெச 2:3 2தெச 2:9-11 2தீமோ 3:13 1யோவா 4:1 2யோவா 1:7 வெளிப் 12:9 |
| 9 | யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். | லூக் 21:18 லூக் 21:19 சங் 27:1-3 சங் 46:1 சங் 46:2 சங் 112:7 நீதி 3:25 நீதி 3:26 ஏசா 8:12 ஏசா 51:12 ஏசா 51:13 எரே 4:19 எரே 4:20 மத் 24:6-8 மாற் 13:7 மாற் 13:8 |
| 10 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். | 2நாளா 15:5 2நாளா 15:6 ஆகா 2:21 ஆகா 2:22 சகரி 14:2 சகரி 14:3 சகரி 14:13 மாற் 13:8 அப் 2:19 அப் 2:20 அப் 11:28 எபிரெ 12:27 வெளிப் 6:2-12 |
| 11 | பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். | லூக் 21:25-27 மத் 24:29 மத் 24:30 |
| 12 | இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். | லூக் 11:49-51 மத் 10:16-25 மத் 22:6 மத் 23:34-36 மத் 24:9 மத் 24:10 மாற் 13:9-13 யோவா 15:20 யோவா 16:2 யோவா 16:3 அப் 4:3-7 அப் 5:17-19 அப் 5:40-19 அப் 6:12-15 அப் 7:57-60 அப் 8:3 அப் 9:4 அப் 12:1-4 அப் 16:22-26 அப் 21:30 அப் 21:31 அப் 22:30 அப் 24:1-9 அப் 25:1 அப் 25:2 அப் 25:11 அப் 25:12 அப் 25:22-25 அப் 26:2-11 1தெச 2:15 1தெச 2:16 1பேது 4:12-14 வெளிப் 2:10 |
| 13 | ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். | பிலிப் 1:28 1தெச 3:3 1தெச 3:4 2தெச 1:5 |
| 14 | ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். | லூக் 12:11 லூக் 12:12 மத் 10:19 மத் 10:20 மாற் 13:11 |
| 15 | உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். | லூக் 24:45 யாத் 4:11 யாத் 4:12 நீதி 2:6 எரே 1:9 அப் 2:4 அப் 4:8-13 அப் 4:31-33 எபே 6:19 கொலோ 4:3 கொலோ 4:4 யாக் 1:5 |
| 16 | பெற்றோராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். | எரே 9:4 எரே 12:6 மீகா 7:5 மீகா 7:6 மத் 10:21 மாற் 13:12 |
| 17 | என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். | மத் 10:22 மத் 24:9 மாற் 13:13 யோவா 7:7 யோவா 15:19 யோவா 17:14 |
| 18 | ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. | லூக் 12:7 1சாமு 14:45 1சாமு 25:29 2சாமு 14:11 மத் 10:30 அப் 27:34 |
| 19 | உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். | லூக் 8:15 சங் 27:13 சங் 27:14 சங் 37:7 சங் 40:1 ரோம 2:7 ரோம 5:3 ரோம 8:25 ரோம 15:4 1தெச 1:3 2தெச 3:5 எபிரெ 6:11 எபிரெ 6:15 எபிரெ 10:36 யாக் 1:3 யாக் 5:7-11 வெளிப் 1:9 வெளிப் 2:2 வெளிப் 2:3 வெளிப் 3:10 வெளிப் 13:10 வெளிப் 14:12 |
| 20 | எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். | லூக் 21:7 லூக் 19:43 தானி 9:27 மத் 24:15 மாற் 13:14 |
| 21 | அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும்கடவர்கள். | லூக் 17:31-33 ஆதி 19:17 ஆதி 19:26 யாத் 9:20 யாத் 9:21 நீதி 22:3 மத் 24:16 மாற் 13:15 |
| 22 | எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. | ஏசா 34:8 ஏசா 61:2 எரே 51:6 ரோம 2:5 2பேது 2:9 2பேது 3:7 |
| 23 | அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். | லூக் 23:29 உபா 28:56 உபா 28:57 புலம் 4:10 எபிரெ 9:12-17 எபிரெ 13:16 மத் 24:19 மாற் 13:17 |
| 24 | பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். | உபா 28:64-68 |
| 25 | சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். | ஏசா 13:10 ஏசா 13:13 ஏசா 13:14 ஏசா 24:23 எரே 4:23 எசே 32:7 எசே 32:8 யோவே 2:30 யோவே 2:31 ஆமோ 8:9 ஆமோ 8:10 மத் 24:29 மத் 27:45 மாற் 13:24 மாற் 13:26 மாற் 15:33 அப் 2:19 2பேது 3:10-12 வெளிப் 6:12-14 வெளிப் 20:11 |
| 26 | வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகும். | லேவி 26:36 உபா 28:32-34 உபா 28:65-67 எபிரெ 10:26 எபிரெ 10:27 |
| 27 | அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். | தானி 7:13 மத் 24:30 மத் 26:64 மாற் 13:26 அப் 1:9-11 வெளிப் 1:7 வெளிப் 14:14 |
| 28 | இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். | சங் 98:5-9 ஏசா 12:1-3 ஏசா 25:8 ஏசா 25:9 ஏசா 60:1 ஏசா 60:2 |
| 29 | அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். | மத் 24:32-35 மாற் 13:28-30 |
| 30 | அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். |
| 31 | அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். | லூக் 12:51-57 மத் 16:1-4 |
| 32 | இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 11:50 லூக் 11:51 மத் 16:28 மத் 23:36 மத் 24:34 மாற் 13:30 |
| 33 | வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. | சங் 102:26 ஏசா 40:8 ஏசா 51:6 மத் 5:18 மத் 24:35 மாற் 13:31 1பேது 1:25 2பேது 3:7-14 வெளிப் 20:11 |
| 34 | உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். | லூக் 21:8 லூக் 17:3 மாற் 13:9 எபிரெ 12:15 |
| 35 | பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். | சங் 11:6 பிரச 9:12 ஏசா 24:17 ஏசா 24:18 எரே 48:43 எரே 48:44 வெளிப் 16:15 |
| 36 | ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். | லூக் 12:37-40 மத் 24:42 மத் 25:13 மத் 26:41 மாற் 13:33 மாற் 13:37 1கொரி 16:13 2தீமோ 4:5 1பேது 4:7 1பேது 5:8 |
| 37 | அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார். | லூக் 22:39 மத் 21:17 மாற் 11:12 யோவா 12:1 |
| 38 | ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள். | யோவா 8:1 யோவா 8:2 |