| 1 | அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து: | லூக் 19:47 லூக் 19:48 மாற் 11:27 யோவா 18:20 |
| 2 | நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். | லூக் 19:35-40 லூக் 19:45-40 லூக் 19:46-40 மத் 21:23-27 மாற் 11:28-33 |
| 3 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள். | லூக் 22:68 மத் 15:2 மத் 15:3 கொலோ 4:6 |
| 4 | யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார். | லூக் 7:28-35 மத் 11:7-19 மத் 17:11 மத் 17:12 மத் 21:25-32 யோவா 1:6 யோவா 1:19-28 |
| 5 | அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார். | யோவா 1:15-18 யோவா 1:30-18 யோவா 1:34-18 யோவா 3:26 யோவா 3:36 யோவா 3:26 யோவா 3:36 யோவா 5:33-35 அப் 13:25 |
| 6 | மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி: | மத் 21:26 மத் 21:46 மத் 26:5 மாற் 12:12 அப் 5:26 |
| 7 | அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். | ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 26:11 ஏசா 29:9-12 ஏசா 29:14-12 ஏசா 41:28 ஏசா 42:19 ஏசா 42:20 ஏசா 44:18 எரே 8:7-9 சகரி 11:15 சகரி 11:17 மல்கி 2:7-9 யோவா 3:19 யோவா 3:20 யோவா 9:39 2தெச 2:10-12 2தீமோ 3:8 2தீமோ 3:9 2பேது 3:3 |
| 8 | அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். | லூக் 22:68 யோபு 5:12 யோபு 5:13 நீதி 26:4 நீதி 26:5 மத் 15:14 மத் 16:4 மத் 21:27 மாற் 11:33 |
| 9 | பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான். | மத் 21:33-46 மாற் 12:1-12 |
| 10 | அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். | சங் 1:3 எரே 5:24 மத் 21:34-36 மாற் 12:2-5 |
| 11 | பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். | மத் 23:30-37 அப் 7:52 1தெச 2:2 எபிரெ 11:36 எபிரெ 11:37 |
| 12 | அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். |
| 13 | அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான். | ஏசா 5:4 ஓசி 6:4 ஓசி 11:8 |
| 14 | தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, | லூக் 20:5 மத் 16:7 மத் 21:25 |
| 15 | அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்? | எபிரெ 13:12 |
| 16 | அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். | லூக் 19:27 சங் 2:8 சங் 2:9 சங் 21:8-10 மத் 21:41 மத் 22:7 அப் 13:46 |
| 17 | அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன? | லூக் 19:41 லூக் 22:61 மாற் 3:5 மாற் 10:23 |
| 18 | அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார். | ஏசா 8:14 ஏசா 8:15 தானி 2:34 தானி 2:35 தானி 2:44 தானி 2:45 சகரி 12:3 மத் 21:34 1தெச 2:16 |
| 19 | பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள். | லூக் 20:14 லூக் 19:47 லூக் 19:48 மத் 21:45 மத் 21:46 மத் 26:3 மத் 26:4 மாற் 12:12 |
| 20 | அவர்கள் சமயம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள். | சங் 37:32 சங் 37:33 சங் 38:12 ஏசா 29:20 ஏசா 29:21 எரே 11:19 எரே 18:18 எரே 20:10 மத் 22:15 மத் 22:18 மாற் 12:13 மாற் 12:15 |
| 21 | அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம். | சங் 12:2 சங் 55:21 எரே 42:2 எரே 42:3 மத் 22:16 மத் 26:49 மத் 26:50 மாற் 12:14 யோவா 3:2 |
| 22 | இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். | உபா 17:15 எஸ்றா 4:13 எஸ்றா 4:19-22 எஸ்றா 9:7 நெகே 5:4 நெகே 9:37 மத் 22:17-21 மாற் 12:14-17 அப் 5:37 |
| 23 | அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? | லூக் 5:22 லூக் 6:8 லூக் 11:17 யோவா 2:24 யோவா 2:25 1கொரி 3:19 எபிரெ 4:13 |
| 24 | ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். | மத் 18:28 மத் 20:2 |
| 25 | அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். | நீதி 24:21 மத் 17:27 மத் 22:21 மாற் 12:17 ரோம 13:6 ரோம 13:7 1பேது 2:13-17 |
| 26 | அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள். | லூக் 20:20 லூக் 20:39 லூக் 20:40 யோபு 5:12 யோபு 5:13 நீதி 26:4 நீதி 26:5 2தீமோ 3:8 2தீமோ 3:9 |
| 27 | உ.யிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து: | மத் 16:1 மத் 16:6 மத் 16:12 மத் 22:23-33 மாற் 12:18-27 அப் 4:1 அப் 4:2 அப் 5:17 அப் 23:6-8 1கொரி 15:12 2தீமோ 2:17 2தீமோ 2:18 |
| 28 | போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. | ஆதி 38:8 ஆதி 38:11 ஆதி 38:26 உபா 25:5-10 ரூத் 1:11 ரூத் 1:12 |
| 29 | சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான். | லேவி 20:20 எரே 22:30 |
| 30 | பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான். |
| 31 | மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள். |
| 32 | எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். | நியா 2:10 பிரச 1:4 பிரச 9:5 எபிரெ 9:27 |
| 33 | இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள். | மத் 22:24-28 மாற் 12:19-23 |
| 34 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். | லூக் 16:8 |
| 35 | மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. | லூக் 21:36 அப் 5:41 2தெச 1:5 வெளிப் 3:4 |
| 36 | அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள். | ஏசா 25:8 ஓசி 13:14 1கொரி 15:26 1கொரி 15:42 1கொரி 15:53 1கொரி 15:54 பிலிப் 3:21 1தெச 4:13-17 வெளிப் 20:6 வெளிப் 21:4 வெளிப் 22:2-5 |
| 37 | அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். | யாத் 3:2-6 உபா 33:16 அப் 7:30-32 |
| 38 | அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார். | சங் 16:5-11 சங் 22:23-26 சங் 145:1 சங் 145:2 எபிரெ 11:16 |
| 39 | அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள். | மத் 22:34-40 மாற் 12:28-34 அப் 23:9 |
| 40 | அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை. | நீதி 26:5 மத் 22:46 மாற் 12:34 |
| 41 | அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்? | மத் 22:41 மத் 22:42 மாற் 12:35-37 |
| 42 | நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று, | லூக் 24:44 2சாமு 23:1 2சாமு 23:2 மத் 22:43 மாற் 12:36 மாற் 12:37 அப் 1:20 அப் 13:33-35 எபிரெ 3:7 |
| 43 | கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே. | லூக் 19:27 சங் 2:1-9 சங் 21:8-12 சங் 72:9 சங் 109:4-20 சங் 110:5 சங் 110:6 வெளிப் 19:14-21 |
| 44 | தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். | லூக் 1:31-35 லூக் 2:11 ஏசா 7:14 மத் 1:23 ரோம 9:5 கலா 4:4 1தீமோ 3:16 வெளிப் 22:16 |
| 45 | பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: | மத் 15:10 மத் 23:1 மாற் 8:34 மாற் 12:38 1தீமோ 5:20 |
| 46 | நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, | லூக் 12:1 மத் 16:6 மாற் 8:15 2தீமோ 4:15 |
| 47 | விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். | ஏசா 10:2 எரே 7:6-10 எசே 22:7 ஆமோ 2:7 ஆமோ 8:4-6 மீகா 2:2 மீகா 2:8 மீகா 3:2 மத் 23:14 மாற் 12:40 2தீமோ 3:6 |