இணை வசன வேதாகமம்

Click to Subscribe

லூக்கா 19

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,யோசு 2:1 யோசு 6:1-25 யோசு 6:26-25 யோசு 6:27-25 1இரா 16:34 2இரா 2:18-22
2ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,லூக் 18:24-27 2நாளா 17:5 2நாளா 17:6
3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,லூக் 9:7-9 லூக் 23:8 யோவா 12:21
4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.லூக் 5:19
5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.சங் 139:1-3 எசே 16:6 யோவா 1:48 யோவா 4:7-10
6அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.லூக் 2:16 ஆதி 18:6 ஆதி 18:7 சங் 119:59 சங் 119:60 கலா 1:15 கலா 1:16
7அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.லூக் 5:30 லூக் 7:34 லூக் 7:39 லூக் 15:2 லூக் 18:9-14 மத் 9:11 மத் 21:28-31
8சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.லூக் 3:8-13 லூக் 11:41 லூக் 12:33 லூக் 16:9 லூக் 18:22 லூக் 18:23 சங் 41:1 அப் 2:44-46 அப் 4:34 அப் 4:35 2கொரி 8:7 2கொரி 8:8 1தீமோ 6:17 1தீமோ 6:18 யாக் 1:10 யாக் 1:11
9இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.லூக் 2:30 லூக் 13:30 யோவா 4:38-42 அப் 16:30-32 1கொரி 6:9-11 1பேது 2:10
10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.லூக் 5:31 லூக் 5:32 லூக் 15:4-7 லூக் 15:32-7 எசே 34:16 மத் 1:21 மத் 9:12 மத் 9:13 மத் 10:6 மத் 15:24 மத் 18:11 ரோம 5:6 1தீமோ 1:13-16 எபிரெ 7:25 1யோவா 4:9-14
11அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:லூக் 17:20 அப் 1:6 2தெச 2:1-3
12பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.மத் 25:14-30 மாற் 13:34-37
13புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.மத் 25:14 யோவா 12:26 கலா 1:10 யாக் 1:1 2பேது 1:1
14அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாதிபதிகளை அனுப்பினார்கள்.லூக் 19:27 1சாமு 8:7 சங் 2:1-3 ஏசா 49:7 சகரி 11:8 யோவா 1:11 யோவா 15:18 யோவா 15:23 யோவா 15:24 அப் 3:14 அப் 3:15 அப் 4:27 அப் 4:28 அப் 7:51 அப் 7:52
15அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.சங் 2:4-6
16அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.1நாளா 29:14-16 1கொரி 15:10 கொலோ 1:28 கொலோ 1:29 2தீமோ 4:7 2தீமோ 4:8 யாக் 2:18-26
17எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.ஆதி 39:4 1சாமு 2:30 மத் 25:21 ரோம 2:29 1கொரி 4:5 2தீமோ 2:10 1பேது 1:7 1பேது 5:4
18அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.மத் 13:23 மாற் 4:20 2கொரி 8:12
19அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.ஏசா 3:10 1கொரி 3:8 1கொரி 15:41 1கொரி 15:42 1கொரி 15:58 2கொரி 9:6 2யோவா 1:8
20பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.லூக் 19:13 லூக் 3:9 லூக் 6:46 நீதி 26:13-16 மத் 25:24 யாக் 4:17
21நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.யாத் 20:19 யாத் 20:20 1சாமு 12:20 மத் 25:24 மத் 25:25 ரோம 8:15 2தீமோ 1:7 யாக் 2:10 1யோவா 4:18
22அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,2சாமு 1:16 யோபு 15:5 யோபு 15:6 மத் 12:37 மத் 22:12 ரோம 3:19
23பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்ளுவேனே என்று சொல்லி;ரோம 2:4 ரோம 2:5
24சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.லூக் 12:20 லூக் 16:2
25அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.லூக் 16:2 2சாமு 7:19 ஏசா 55:8 ஏசா 55:9
26அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங்கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.லூக் 8:18 மத் 13:12 மத் 25:28 மத் 25:29 மாற் 4:25 யோவா 5:1-3
27அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.லூக் 19:14 லூக் 19:42-44 லூக் 21:22 லூக் 21:24 எண் 14:36 எண் 14:37 எண் 16:30-35 சங் 2:3-5 சங் 2:9-5 சங் 21:8 சங் 21:9 சங் 69:22-28 ஏசா 66:6 ஏசா 66:14 நாகூ 1:2 நாகூ 1:8 மத் 21:37-41 மத் 22:7 மத் 23:34-36 1தெச 2:15 1தெச 2:16 எபிரெ 10:13
28இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.லூக் 9:51 லூக் 12:50 லூக் 18:31 சங் 40:6-8 மாற் 10:32-34 யோவா 18:11 எபிரெ 12:2 1பேது 4:1
29அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:மத் 21:1-11 மாற் 11:1-11 யோவா 12:12-16
30உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.லூக் 19:32 லூக் 22:8-13 1சாமு 10:2-9 யோவா 14:29
31அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.சங் 24:1 சங் 50:10-12 மத் 21:2 மத் 21:3 மாற் 11:3-6 அப் 10:36
32அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
33கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,சகரி 9:9 யோவா 10:35 யோவா 12:16 2கொரி 8:9
35அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.2இரா 9:13 மத் 21:7 மாற் 11:7 மாற் 11:8 யோவா 12:14 கலா 4:15 கலா 4:16
36அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.மத் 21:8
37அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,லூக் 19:20 மாற் 13:3 மாற் 14:26
38கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.லூக் 13:35 சங் 72:17-19 சங் 118:22-26 சகரி 9:9 மத் 21:9 மாற் 11:9 மாற் 11:10
39அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.ஏசா 26:11 மத் 23:13 யோவா 11:47 யோவா 11:48 யோவா 12:10 யோவா 12:19 அப் 4:1 அப் 4:2 அப் 4:16-18 யாக் 4:5
40அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.சங் 96:11 சங் 98:7-9 சங் 114:1-8 ஏசா 55:12 ஆபகூ 2:11 மத் 3:9 மத் 21:15 மத் 21:16 மத் 27:45 மத் 27:51-54 2பேது 2:6
41அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,சங் 119:53 சங் 119:136 சங் 119:158 எரே 9:1 எரே 13:17 எரே 17:16 ஓசி 11:8 யோவா 11:35 ரோம 9:2 ரோம 9:3
42உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.உபா 5:29 உபா 32:29 சங் 81:13 ஏசா 48:18 எசே 18:31 எசே 18:32 எசே 33:11
43உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,லூக் 21:20-24 உபா 28:49-58 சங் 37:12 சங் 37:13 தானி 9:26 தானி 9:27 மத் 22:7 மத் 23:37-39 மாற் 13:14-20 1தெச 2:15 1தெச 2:16
44உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்குவரும் என்றார்.1இரா 9:7 1இரா 9:8 மீகா 3:12
45பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:மத் 21:12 மத் 21:13 மாற் 11:15-17 யோவா 2:13-17
46என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.சங் 93:5 ஏசா 56:7 எரே 7:11 எசே 43:12 ஓசி 12:7 மத் 23:14
47அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,லூக் 21:37 லூக் 21:38 மத் 21:23 மாற் 11:27-33 யோவா 18:20
48ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.லூக் 20:19 லூக் 20:20 லூக் 22:2-4 மத் 22:15 மத் 22:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.