இணை வசன வேதாகமம்

Click to Subscribe

லூக்கா 15

                   
புத்தகங்களைக் காட்டு
1சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.லூக் 5:29-32 லூக் 7:29 லூக் 13:30 எசே 18:27 மத் 9:10-13 மத் 21:28-31 ரோம 5:20 1தீமோ 1:15
2அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.லூக் 15:29 லூக் 15:30 லூக் 5:30 லூக் 7:34 லூக் 7:39 லூக் 19:7 மத் 9:11 அப் 11:3 1கொரி 5:9-11 கலா 2:12
3அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?லூக் 13:15 மத் 12:11 மத் 18:12 ரோம 2:1
5கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,லூக் 19:9 லூக் 23:43 ஏசா 62:12 யோவா 4:34 யோவா 4:35 அப் 9:1-16 ரோம 10:20 ரோம 10:21 எபே 2:3-6 தீத் 3:3-7
6வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?லூக் 15:7 லூக் 15:10 லூக் 15:24 லூக் 2:13 லூக் 2:14 ஏசா 66:10 ஏசா 66:11 யோவா 3:29 யோவா 15:14 அப் 11:23 அப் 15:3 பிலிப் 1:4 பிலிப் 2:17 பிலிப் 4:1 1தெச 2:19 1தெச 3:7-9
7அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.லூக் 15:32 லூக் 5:32 மத் 18:13
8அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?லூக் 19:10 எசே 34:12 யோவா 10:16 யோவா 11:52 எபே 2:17
9கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?லூக் 15:6 லூக் 15:7
10அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.லூக் 2:1-14 எசே 18:23 எசே 18:32 எசே 33:11 மத் 18:10 மத் 18:11 மத் 28:5-7 அப் 5:19 அப் 10:3-5 எபிரெ 1:14 வெளிப் 5:11-14
11பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.மத் 21:23-31
12அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.உபா 21:16 உபா 21:17 சங் 16:5 சங் 16:6 சங் 17:14
13சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.2நாளா 33:1-10 யோபு 21:13-15 யோபு 22:17 யோபு 22:18 சங் 10:4-6 சங் 73:27 நீதி 27:8 ஏசா 1:4 ஏசா 30:11 எரே 2:5 எரே 2:13 எரே 2:17-19 எரே 2:31-19 மீகா 6:3 எபே 2:13 எபே 2:17
14எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,2நாளா 33:11 எசே 16:27 ஓசி 2:9-14 ஆமோ 8:9-12
15அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.லூக் 15:13 யாத் 10:3 2நாளா 28:22 ஏசா 1:5 ஏசா 1:9 ஏசா 1:10-13 ஏசா 57:17 எரே 5:3 எரே 8:4-6 எரே 31:18 எரே 31:19 2தீமோ 2:25 2தீமோ 2:26 வெளிப் 2:21 வெளிப் 2:22
16அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.ஏசா 44:20 ஏசா 55:2 புலம் 4:5 ஓசி 12:1 ரோம 6:19-21
17அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.லூக் 8:35 லூக் 16:23 சங் 73:20 பிரச 9:3 எரே 31:19 எசே 18:28 அப் 2:37 அப் 16:29 அப் 16:30 அப் 26:11-19 எபே 2:4 எபே 2:5 எபே 5:14 தீத் 3:4-6 யாக் 1:16-18
18நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.1இரா 20:30 1இரா 20:31 2இரா 7:3 2இரா 7:4 2நாளா 33:12 2நாளா 33:13 2நாளா 33:19 சங் 32:5 சங் 116:3-7 எரே 31:6-9 எரே 50:4 எரே 50:5 புலம் 3:18-22 புலம் 3:29-22 புலம் 3:40-22 ஓசி 2:6 ஓசி 2:7 ஓசி 14:1-3 யோனா 2:4 யோனா 3:9
19இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;லூக் 5:8 லூக் 7:6 லூக் 7:7 ஆதி 32:10 யோபு 42:6 1கொரி 15:9 1தீமோ 1:13-16
20எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.உபா 30:2-4 யோபு 33:27 யோபு 33:28 சங் 86:5 சங் 86:15 சங் 103:10-13 ஏசா 49:15 ஏசா 55:6-9 ஏசா 57:18 எரே 31:20 எசே 16:6-8 ஓசி 11:8 மீகா 7:18 மீகா 7:19 அப் 2:39 எபே 2:13 எபே 2:17
21குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.லூக் 15:18 லூக் 15:19 எரே 3:13 எசே 16:63 ரோம 2:4
22அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.சங் 45:13 சங் 132:9 சங் 132:16 ஏசா 61:10 எசே 16:9-13 சகரி 3:3-5 மத் 22:11 மத் 22:12 ரோம 3:22 ரோம 13:14 கலா 3:27 எபே 4:22-24 வெளிப் 3:4 வெளிப் 3:5 வெளிப் 3:18 வெளிப் 6:11 வெளிப் 7:9 வெளிப் 7:13 வெளிப் 7:14 வெளிப் 19:8
23கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.ஆதி 18:7 சங் 63:5 நீதி 9:2 ஏசா 25:6 ஏசா 65:13 ஏசா 65:14 மத் 22:2-14
24என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.லூக் 15:32 மாற் 8:22 யோவா 5:21 யோவா 5:24 யோவா 5:25 யோவா 11:25 ரோம 6:11 ரோம 6:13 ரோம 8:2 2கொரி 5:14 2கொரி 5:15 எபே 2:1 எபே 2:5 எபே 5:14 கொலோ 2:13 1தீமோ 5:6 யூதா 1:12 வெளிப் 3:1
25அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;லூக் 15:11 லூக் 15:12
26ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.லூக் 15:30 அப் 9:17 அப் 22:13 பிலேமோ 1:16
28அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.லூக் 15:2 லூக் 5:30 லூக் 7:39 1சாமு 17:28 1சாமு 18:8 ஏசா 65:5 ஏசா 66:5 யோனா 4:1-3 மத் 20:11 அப் 13:45 அப் 13:50 அப் 14:2 அப் 14:19 அப் 22:21 அப் 22:22 ரோம 10:19 1தெச 2:16
29அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.லூக் 17:10 லூக் 18:9 லூக் 18:11 லூக் 18:12 லூக் 18:20 லூக் 18:21 1சாமு 15:13 1சாமு 15:14 ஏசா 58:2 ஏசா 58:3 ஏசா 65:5 சகரி 7:3 மத் 20:12 ரோம 3:20 ரோம 3:27 ரோம 7:9 ரோம 10:3 பிலிப் 3:4-6 1யோவா 1:8-10 வெளிப் 3:17
30வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.லூக் 15:32 லூக் 18:11 யாத் 32:7 யாத் 32:11
31அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.லூக் 19:22 லூக் 19:23 மத் 20:13-16 மாற் 7:27 மாற் 7:28 ரோம 9:4 ரோம 11:1 ரோம 11:35
32உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.லூக் 7:34 சங் 51:8 ஏசா 35:10 ஓசி 14:9 யோனா 4:10 யோனா 4:11 ரோம 3:4 ரோம 3:19 ரோம 15:9-13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.