| 1 | மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். | மாற் 1:21 மத் 12:9-14 லூக் 6:6-11 |
| 2 | அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். | சங் 37:32 ஏசா 29:20 ஏசா 29:21 எரே 20:10 தானி 6:4 லூக் 6:7 லூக் 11:53 லூக் 11:54 லூக் 14:1 லூக் 20:20 யோவா 9:16 |
| 3 | அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; | ஏசா 42:4 தானி 6:10 லூக் 6:8 யோவா 9:4 1கொரி 15:58 கலா 6:9 பிலிப் 1:14 பிலிப் 1:28-30 1பேது 4:1 |
| 4 | அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். | மாற் 2:27 மாற் 2:28 ஓசி 6:6 மத் 12:10-12 லூக் 6:9 லூக் 13:13-17 லூக் 14:1-5 |
| 5 | அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. | லூக் 6:10 லூக் 13:15 எபே 4:26 வெளிப் 6:16 |
| 6 | உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள். | சங் 109:3 சங் 109:4 மத் 12:14 லூக் 6:11 லூக் 20:19 லூக் 20:20 லூக் 22:2 யோவா 11:53 |
| 7 | இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார். | மத் 10:23 மத் 12:15 லூக் 6:12 யோவா 10:39-41 யோவா 11:53 யோவா 11:54 அப் 14:5 அப் 14:6 அப் 17:10 அப் 17:14 |
| 8 | கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள். | ஏசா 34:5 எசே 35:15 எசே 36:5 மல்கி 1:2-4 |
| 9 | அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள். | மாற் 5:30 யோவா 6:15 |
| 10 | ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். | மத் 12:15 மத் 14:14 |
| 11 | அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. | மாற் 1:23 மாற் 1:24 மாற் 5:5 மாற் 5:6 மத் 8:31 லூக் 4:41 அப் 16:17 அப் 19:13-17 யாக் 2:19 |
| 12 | தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். | மாற் 1:25 மாற் 1:34 மத் 12:16 அப் 16:18 |
| 13 | பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். | மத் 10:1-4 லூக் 6:12-16 |
| 14 | அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், | யோவா 15:16 அப் 1:24 அப் 1:25 கலா 1:1 கலா 1:15-20 |
| 15 | வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். |
| 16 | அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். | மாற் 1:16 மத் 16:16-18 யோவா 1:42 1கொரி 1:12 1கொரி 3:22 1கொரி 9:5 கலா 2:7-9 |
| 17 | செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், | மாற் 1:19 மாற் 1:20 மாற் 5:37 மாற் 9:2 மாற் 10:35 மாற் 14:33 யோவா 21:2 யோவா 21:20-25 அப் 12:1 |
| 18 | அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், | யோவா 1:40 யோவா 6:8 யோவா 12:21 யோவா 12:22 அப் 1:13 |
| 19 | அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. | மத் 26:14-16 மத் 26:47-16 மத் 27:3-5 யோவா 6:64 யோவா 6:71 யோவா 12:4-6 யோவா 13:2 யோவா 13:26-30 அப் 1:16-25 |
| 20 | பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள். | மாற் 3:9 மாற் 6:31 லூக் 6:17 யோவா 4:31-34 |
| 21 | அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். | மாற் 3:31 யோவா 7:3-10 |
| 22 | எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். | மாற் 7:1 மத் 15:1 லூக் 5:17 |
| 23 | அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? | சங் 49:4 மத் 13:34 |
| 24 | ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. | நியா 9:23-57 நியா 12:1-6 2சாமு 20:1 2சாமு 20:6 1இரா 12:16-20 ஏசா 9:20 ஏசா 9:21 ஏசா 19:2 ஏசா 19:3 எசே 37:22 சகரி 11:14 யோவா 17:21 1கொரி 1:10-13 எபே 4:3-6 |
| 25 | ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. | ஆதி 13:7 ஆதி 13:8 ஆதி 37:4 சங் 133:1 கலா 5:15 யாக் 3:16 |
| 26 | சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே. |
| 27 | பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான். | ஆதி 3:15 ஏசா 27:1 ஏசா 49:24-26 ஏசா 53:12 ஏசா 61:1 மத் 12:29 லூக் 10:17-20 லூக் 11:21-23 யோவா 12:31 ரோம 16:20 எபே 6:10-13 கொலோ 2:15 எபிரெ 2:14 1யோவா 3:8 1யோவா 4:4 வெளிப் 12:7-9 வெளிப் 20:1-3 |
| 28 | மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; | மத் 12:31 மத் 12:32 லூக் 12:10 எபிரெ 6:4-8 எபிரெ 10:26-31 1யோவா 5:16 |
| 29 | ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். | மாற் 12:40 மத் 25:46 2தெச 1:9 யூதா 1:7 யூதா 1:13 |
| 30 | அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார். | மாற் 3:22 யோவா 10:20 |
| 31 | அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். | மத் 12:46-48 லூக் 8:19-21 |
| 32 | அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். |
| 33 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி; | உபா 33:9 லூக் 2:49 யோவா 2:4 2கொரி 5:16 |
| 34 | தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! | சங் 22:22 உன்ன 4:9 உன்ன 4:10 உன்ன 5:1 உன்ன 5:2 மத் 12:49 மத் 12:50 மத் 25:40-45 மத் 28:10 லூக் 11:27 லூக் 11:28 யோவா 20:17 ரோம 8:29 எபிரெ 2:11 எபிரெ 2:12 |
| 35 | தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார். | மத் 7:21 யோவா 7:17 யாக் 1:25 1யோவா 2:17 1யோவா 3:22 1யோவா 3:23 |