| 1 | பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக்கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். | சங் 2:2 மத் 27:1 மத் 27:2 லூக் 22:66 அப் 4:5 அப் 4:6 அப் 4:25-28 |
| 2 | பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். | மத் 2:2 மத் 27:11 லூக் 23:3 யோவா 18:33-37 யோவா 19:19-22 1தீமோ 6:13 |
| 3 | பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. | மத் 27:12 லூக் 23:2-5 யோவா 18:29-31 யோவா 19:6 யோவா 19:7 யோவா 19:12 |
| 4 | அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். | மத் 26:62 மத் 27:13 யோவா 19:10 |
| 5 | இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். | ஏசா 53:7 யோவா 19:9 |
| 6 | காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது. | மத் 26:2 மத் 26:5 மத் 27:15 லூக் 23:16 லூக் 23:17 யோவா 18:39 யோவா 18:40 அப் 24:27 அப் 25:9 |
| 7 | கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். | மத் 27:16 லூக் 23:18 லூக் 23:19 லூக் 23:25 |
| 8 | ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள். |
| 9 | பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து. | மத் 27:17-21 யோவா 18:39 யோவா 19:4 யோவா 19:5 யோவா 19:14-16 அப் 3:13-15 |
| 10 | அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான். | ஆதி 4:4-6 ஆதி 37:11 1சாமு 18:8 1சாமு 18:9 நீதி 27:4 பிரச 4:4 மத் 27:18 அப் 13:45 தீத் 3:3 யாக் 3:14-16 யாக் 4:5 1யோவா 3:12 |
| 11 | பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள். | ஓசி 5:1 மத் 27:20 யோவா 18:40 அப் 3:14 |
| 12 | பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். | மத் 27:22 மத் 27:23 லூக் 23:20-24 யோவா 19:14-16 |
| 13 | அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். |
| 14 | அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். | ஏசா 53:9 மத் 27:4 மத் 27:19 மத் 27:24 மத் 27:54 லூக் 23:4 லூக் 23:14 லூக் 23:15 லூக் 23:21 லூக் 23:41 லூக் 23:47 யோவா 18:38 யோவா 19:6 எபிரெ 7:26 1பேது 1:19 |
| 15 | அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். | நீதி 29:25 சங் 57:11 மத் 27:26 லூக் 23:24 லூக் 23:25 யோவா 19:1 யோவா 19:16 அப் 24:27 அப் 25:9 கலா 1:19 |
| 16 | அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, | மத் 27:27 |
| 17 | சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: | மத் 27:28-30 லூக் 23:11 யோவா 19:2-5 |
| 18 | யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, | மாற் 15:29-32 ஆதி 37:10 ஆதி 37:20 மத் 27:42 மத் 27:43 லூக் 23:36 லூக் 23:37 யோவா 19:14 யோவா 19:15 |
| 19 | அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். | மாற் 9:12 மாற் 10:34 மாற் 14:65 யோபு 13:9 யோபு 30:8-12 சங் 22:6 சங் 22:7 சங் 35:15-17 சங் 69:12 சங் 69:19 சங் 69:20 ஏசா 49:7 ஏசா 50:6 ஏசா 52:14 ஏசா 53:3-5 மீகா 5:1 மத் 20:18 மத் 20:19 லூக் 18:32 லூக் 18:33 லூக் 22:63 லூக் 23:11 லூக் 23:36 எபிரெ 12:2 எபிரெ 12:3 எபிரெ 13:13 |
| 20 | அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். | மத் 27:31 யோவா 19:16 |
| 21 | சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். | மத் 27:32 லூக் 23:26 |
| 22 | கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், | மத் 27:33-44 லூக் 23:27-33 |
| 23 | வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. | மத் 27:34 லூக் 23:36 யோவா 19:28-30 |
| 24 | அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். | உபா 21:23 சங் 22:16 சங் 22:17 ஏசா 53:4-8 அப் 5:30 2கொரி 5:21 கலா 3:13 1பேது 2:24 |
| 25 | அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. | மாற் 15:33 மத் 27:45 லூக் 23:44 யோவா 19:14 அப் 2:15 |
| 26 | அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள். | உபா 23:5 சங் 76:10 நீதி 21:1 ஏசா 10:7 ஏசா 46:10 |
| 27 | அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். | மத் 27:38 லூக் 23:32 லூக் 23:33 யோவா 19:18 |
| 28 | அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. | ஏசா 53:12 லூக் 22:37 எபிரெ 12:2 |
| 29 | அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே. | சங் 22:7 சங் 22:8 சங் 22:12-14 சங் 35:15-21 சங் 69:7 சங் 69:19 சங் 69:20 சங் 69:26 சங் 109:25 புலம் 1:12 புலம் 2:15 மத் 27:39 மத் 27:40 |
| 30 | உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். |
| 31 | அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை. | சங் 2:1-4 சங் 22:16 சங் 22:17 மத் 27:41-43 லூக் 23:35-37 |
| 32 | நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள். | மாற் 14:61 மாற் 14:62 ஏசா 44:6 செப் 3:15 சகரி 9:9 யோவா 1:49 யோவா 12:13 யோவா 19:12-15 யோவா 20:25-29 |
| 33 | ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. | மாற் 15:25 மத் 27:45 லூக் 23:44 லூக் 23:45 |
| 34 | ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். | தானி 9:21 லூக் 23:46 அப் 10:3 |
| 35 | அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். | மாற் 9:11-13 மத் 17:11-13 மத் 27:47-49 |
| 36 | ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான். | மாற் 15:23 சங் 69:21 லூக் 23:36 யோவா 19:28-30 |
| 37 | இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். | மத் 27:50 லூக் 23:46 யோவா 19:30 |
| 38 | அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. | யாத் 26:31-34 யாத் 40:20 யாத் 40:21 லேவி 16:2-19 2நாளா 3:8-14 மத் 27:51-53 லூக் 23:45 எபிரெ 4:14-16 எபிரெ 6:19 எபிரெ 9:3-12 எபிரெ 10:19-23 |
| 39 | அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். | மாற் 15:44 மத் 8:5-10 அப் 10:1 அப் 27:1-3 அப் 27:43-3 |
| 40 | சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், | சங் 38:11 மத் 27:55 மத் 27:56 லூக் 23:49 யோவா 19:25-27 |
| 41 | அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள். | மத் 27:56 லூக் 8:2 லூக் 8:3 |
| 42 | ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது. | மத் 27:57 மத் 27:62 லூக் 23:50-54 யோவா 19:38 |
| 43 | கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். | மாற் 10:23-27 |
| 44 | அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். | யோவா 19:31-37 |
| 45 | நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான். | மத் 27:58 யோவா 19:38 |
| 46 | அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். | மத் 27:59 மத் 27:60 லூக் 23:53 யோவா 19:38-42 |
| 47 | அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள். | மாற் 15:40 மாற் 16:1 மத் 27:61 மத் 28:1 லூக் 23:55 லூக் 23:56 லூக் 24:1 லூக் 24:2 |