| 1 | ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு. | மாற் 15:42 மத் 28:1-10 லூக் 23:54 லூக் 23:56 லூக் 24:1-12 யோவா 19:31 யோவா 20:1-10 |
| 2 | வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, | மத் 28:1 லூக் 24:1 யோவா 20:1 |
| 3 | கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். | மாற் 15:46 மாற் 15:47 மத் 27:60-66 |
| 4 | அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். | மத் 28:2-4 லூக் 24:2 யோவா 20:1 |
| 5 | அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். | லூக் 24:3 யோவா 20:8 |
| 6 | அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். | மத் 14:26 மத் 14:27 மத் 28:4 மத் 28:5 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 7 | நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். | மாற் 14:50 மாற் 14:66-72 மத் 28:7 2கொரி 2:7 |
| 8 | நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள். | மத் 28:8 லூக் 24:9-11 லூக் 24:22-24 |
| 9 | வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். | யோவா 20:19 அப் 20:7 1கொரி 16:2 வெளிப் 1:10 |
| 10 | அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். | மாற் 14:72 மத் 9:15 மத் 24:30 லூக் 24:17 யோவா 16:6 யோவா 16:20-22 |
| 11 | அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை. | மாற் 16:13 மாற் 16:14 மாற் 9:19 யாத் 6:9 யோபு 9:16 லூக் 24:11 லூக் 24:23-35 |
| 12 | அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். | லூக் 24:13-32 |
| 13 | அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. | லூக் 24:33-35 |
| 14 | அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். | லூக் 24:36-43 யோவா 20:19 யோவா 20:20 1கொரி 15:5 |
| 15 | பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். | மத் 10:5 மத் 10:6 மத் 28:19 லூக் 14:21-23 லூக் 24:47 லூக் 24:48 யோவா 15:16 யோவா 20:21 1யோவா 4:14 |
| 16 | விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். | மாற் 1:15 லூக் 8:12 யோவா 1:12 யோவா 1:13 யோவா 3:15 யோவா 3:16 யோவா 3:18 யோவா 3:36 யோவா 5:24 யோவா 6:29 யோவா 6:35 யோவா 6:40 யோவா 7:37 யோவா 7:38 யோவா 11:25 யோவா 11:26 யோவா 12:46 யோவா 20:31 அப் 10:43 அப் 13:39 அப் 16:30-32 ரோம 3:6 ரோம 4:24 ரோம 10:9 எபிரெ 10:38 எபிரெ 10:39 1பேது 1:21 1பேது 3:21 1யோவா 5:10-13 |
| 17 | விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; | யோவா 14:12 |
| 18 | சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். | ஆதி 3:15 சங் 91:13 லூக் 10:19 அப் 28:3-6 ரோம 16:20 |
| 19 | இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். | மத் 28:18-20 லூக் 24:44-50 யோவா 21:15 யோவா 21:22 அப் 1:2 அப் 1:3 |
| 20 | அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். | அப் 2:1-28 |