இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மத்தேயு 9

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.மத் 7:6 மத் 8:18 மத் 8:23 மாற் 5:21 லூக் 8:37 வெளிப் 22:11
2அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.மத் 4:24 மத் 8:16 மாற் 1:32 மாற் 2:1-3 லூக் 5:18 லூக் 5:19 அப் 5:15 அப் 5:16 அப் 19:12
3அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.மத் 7:29 மாற் 2:6 மாற் 2:7 மாற் 7:21 லூக் 5:21 லூக் 7:39 லூக் 7:40
4இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?மத் 12:25 மத் 16:7 மத் 16:8 சங் 44:21 சங் 139:2 மாற் 2:8 மாற் 8:16 மாற் 8:17 மாற் 12:15 லூக் 5:22 லூக் 6:8 லூக் 7:40 லூக் 9:46 லூக் 9:47 லூக் 11:17 யோவா 2:24 யோவா 2:25 யோவா 6:61 யோவா 6:64 யோவா 16:19 யோவா 16:30 யோவா 21:17 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:23
5உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?மாற் 2:9-12 லூக் 5:23-25
6பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.ஏசா 43:25 மீகா 7:18 மாற் 2:7 மாற் 2:10 லூக் 5:21 யோவா 5:21-23 யோவா 10:28 யோவா 17:2 யோவா 20:21-23 அப் 5:31 அப் 7:59 அப் 7:60 2கொரி 2:10 2கொரி 5:20 எபே 4:32 கொலோ 3:13
7உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
8ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.மத் 12:23 மத் 15:31 மாற் 2:12 மாற் 7:37 லூக் 5:26 லூக் 7:16
9இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.மத் 21:31 மத் 21:32 மாற் 2:14-17 லூக் 5:27 லூக் 5:28
10பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.மாற் 2:15 மாற் 2:16 மாற் 2:17 லூக் 5:29-32
11பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.மாற் 2:16 மாற் 9:14-16
12இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.சங் 6:2 சங் 41:4 சங் 147:3 எரே 17:14 எரே 30:17 எரே 33:6 ஓசி 14:4 மாற் 2:17 லூக் 5:31 லூக் 8:43 லூக் 9:11 லூக் 18:11-13 ரோம 7:9-24 வெளிப் 3:17 வெளிப் 3:18
13பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.மத் 12:3 மத் 12:5 மத் 12:7 மத் 19:4 மத் 21:42 மத் 22:31 மத் 22:32 மாற் 12:26 லூக் 10:26 யோவா 10:34
14அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.மத் 11:2 யோவா 3:25 யோவா 4:1
15அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.மத் 25:1-10 நியா 14:11-20 சங் 45:14 சங் 45:15 யோவா 3:29 வெளிப் 19:9 வெளிப் 21:2
16ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.ஆதி 33:14 சங் 125:3 ஏசா 40:11 யோவா 16:12 1கொரி 3:1 1கொரி 3:2 1கொரி 13:13
17புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.யோசு 9:4 யோபு 32:19 சங் 119:83
18அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.மாற் 5:22-43 லூக் 8:41-56
19இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார்.மத் 8:7 யோவா 4:34 அப் 10:38 கலா 6:9 கலா 6:10
20அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:மாற் 5:25-43 லூக் 8:43-56
21நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.மாற் 5:26-33 லூக் 8:45-47 அப் 19:12
22இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.மத் 9:2 மாற் 5:34 லூக் 8:48
23இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:மத் 9:18 மத் 9:19 மாற் 5:35-38 லூக் 8:49-51
24விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.1இரா 17:18-24 அப் 9:40 அப் 20:10
25ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.2இரா 4:32-36 அப் 9:40 அப் 9:41
26இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.மத் 4:24 மத் 14:1 மத் 14:2 மாற் 1:45 மாற் 6:14 அப் 26:26
27இயேசு அவ்விடம் விட்டுப்போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.மத் 11:5 மத் 12:22 மத் 20:30 மாற் 8:22 மாற் 8:23 மாற் 10:46 லூக் 7:21 யோவா 9:1-12
28அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.மத் 8:14 மத் 13:36
29அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.மத் 20:34 யோவா 9:6 யோவா 9:7
30உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.சங் 146:8 ஏசா 35:5 ஏசா 42:7 ஏசா 52:13 யோவா 9:7-26
31அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.மாற் 1:44 மாற் 1:45 மாற் 7:36
32அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.மத் 12:22 மத் 12:23 மாற் 9:17-27 லூக் 11:14
33பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.மத் 15:30 மத் 15:31 யாத் 4:11 யாத் 4:12 ஏசா 35:6 மாற் 7:32-37 லூக் 11:14
34பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.மத் 12:23 மத் 12:24 மாற் 3:22 லூக் 11:15 யோவா 3:20
35பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.மத் 4:23 மத் 4:24 மத் 11:1 மத் 11:5 மாற் 1:32-39 மாற் 6:6 மாற் 6:56 லூக் 4:43 லூக் 4:44 லூக் 13:22 அப் 2:22 அப் 10:38
36அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,மத் 14:14 மத் 15:32 மாற் 6:34 எபிரெ 4:15 எபிரெ 5:2
37தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;மத் 28:19 மாற் 16:15 லூக் 10:2 லூக் 24:47 யோவா 4:35 யோவா 4:36 அப் 16:9 அப் 18:10
38ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.லூக் 6:12 லூக் 6:13 அப் 13:2 2தெச 3:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.