இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மத்தேயு 10

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.மத் 19:28 மத் 26:20 மத் 26:47 மாற் 3:13 மாற் 3:14 மாற் 6:7-13 லூக் 6:13 யோவா 6:70 வெளிப் 12:1 வெளிப் 21:12-14
2அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,லூக் 6:13 லூக் 9:10 லூக் 11:49 லூக் 22:14 அப் 1:26 எபே 4:11 எபிரெ 3:1 வெளிப் 18:20
3பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,மாற் 3:18 லூக் 6:14 யோவா 1:43-46 யோவா 6:5-7 யோவா 12:21 யோவா 12:22 யோவா 14:9
4கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.மாற் 3:18 லூக் 6:15
5இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,மத் 22:3 லூக் 9:2 லூக் 10:1 யோவா 20:21
6காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.மத் 15:24-26 லூக் 24:47 அப் 3:26 அப் 13:46 அப் 18:6 அப் 26:20 அப் 28:25-28 ரோம 11:11-15
7போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.மத் 4:17 மத் 11:1 ஏசா 61:1 யோவா 3:2 மாற் 6:12 லூக் 9:60 லூக் 16:16 அப் 4:2
8வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.மத் 10:1 மாற் 16:18 லூக் 10:9 அப் 4:9 அப் 4:10 அப் 4:30 அப் 5:12-15
9உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,மாற் 6:8 லூக் 9:3 லூக் 10:4 லூக் 22:35 1கொரி 9:7-27
10வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது,. பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.1சாமு 9:7 1சாமு 17:40
11எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.ஆதி 19:1-3 நியா 19:16-21 1இரா 17:9-24 யோபு 31:32 லூக் 10:38-42 லூக் 19:7 அப் 16:15 அப் 18:1-3 3யோவா 1:7 3யோவா 1:8
12ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.லூக் 10:5 லூக் 10:6 அப் 10:36 2கொரி 5:20 3யோவா 1:14
13அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.சங் 35:13 லூக் 10:6 2கொரி 2:16
14எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.மத் 10:40 மத் 10:41 மத் 18:5 மாற் 6:11 மாற் 9:37 லூக் 9:5 லூக் 9:48 லூக் 10:10 லூக் 10:11 யோவா 13:20 1தெச 4:8
15நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 5:18 மத் 24:34 மத் 24:35
16ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்.லூக் 10:3 அப் 20:29
17மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.மீகா 7:5 மாற் 13:9 மாற் 13:12 அப் 14:5 அப் 14:6 அப் 17:14 அப் 23:12-22 2கொரி 11:24-26 பிலிப் 3:2 2தீமோ 4:15
18அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.சங் 2:1-6 அப் 5:25-27 அப் 12:1-4 அப் 23:33 அப் 23:34 அப் 24:1-26 2தீமோ 4:16 2தீமோ 4:17
19அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.மாற் 13:11-13 லூக் 12:11 லூக் 21:14 லூக் 21:15
20பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.2சாமு 23:2 மாற் 12:36 லூக் 11:13 லூக் 21:15 அப் 2:4 அப் 4:8 அப் 6:10 அப் 7:55 அப் 7:56 அப் 28:25 1பேது 1:12 2பேது 1:21
21சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.மத் 10:34-36 மத் 24:10 மீகா 7:5 மீகா 7:6 சகரி 13:3 மாற் 13:12 மாற் 13:13 லூக் 12:51-53 லூக் 21:16 லூக் 21:17
22என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.மத் 24:9 ஏசா 66:5 ஏசா 66:6 லூக் 6:22 யோவா 7:7 யோவா 15:18 யோவா 15:19 யோவா 17:14 1யோவா 3:13
23ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 2:13 மத் 4:12 மத் 12:14 மத் 12:15 லூக் 4:29-31 யோவா 7:1 யோவா 10:39-42 யோவா 11:53 யோவா 11:54 அப் 8:1 அப் 9:24 அப் 9:25 அப் 13:50 அப் 13:51 அப் 14:6 அப் 14:7 அப் 14:19 அப் 14:20 அப் 17:10 அப் 17:14 அப் 20:1
24சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.2சாமு 11:11 லூக் 6:40 யோவா 13:16 யோவா 15:20 எபிரெ 12:2-4
25சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?மத் 9:34 மத் 12:24 மாற் 3:22 லூக் 11:15 யோவா 7:20 யோவா 8:48 யோவா 8:52 யோவா 10:20
26அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.மத் 10:28 நீதி 28:1 நீதி 29:25 ஏசா 41:10 ஏசா 41:14 ஏசா 43:1 ஏசா 43:2 ஏசா 51:7 ஏசா 51:8 ஏசா 51:12 ஏசா 51:13 எரே 1:8 எரே 1:17 எரே 1:18 எசே 2:6 அப் 4:13 அப் 4:19 1பேது 3:14
27நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.மத் 13:1-17 மத் 13:34-17 மத் 13:35-17 லூக் 8:10 யோவா 16:1 யோவா 16:13 யோவா 16:25 யோவா 16:29 2கொரி 3:12
28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.மத் 10:26 ஏசா 8:12 ஏசா 8:13 ஏசா 51:7 ஏசா 51:12 தானி 3:10-18 லூக் 12:4 லூக் 12:5 அப் 20:23 அப் 20:24 அப் 21:13 ரோம 8:35-39 2தீமோ 4:6-8 எபிரெ 11:35 1பேது 3:14 வெளிப் 2:10
29ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.லூக் 12:6 லூக் 12:7
30உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.1சாமு 14:45 2சாமு 14:11 1இரா 1:52 லூக் 12:7 லூக் 21:18 அப் 27:34
31ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.மத் 6:26 மத் 12:11 மத் 12:12 சங் 8:5 லூக் 12:24 1கொரி 9:9 1கொரி 9:10
32மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.சங் 119:46 லூக் 12:8 லூக் 12:9 யோவா 9:22 ரோம 10:9 ரோம 10:10 1தீமோ 6:12 1தீமோ 6:13 2தீமோ 1:8 1யோவா 4:15 வெளிப் 2:13
33மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.மத் 26:70-75 மாற் 14:30 மாற் 14:72 லூக் 9:26 லூக் 12:9 2தீமோ 2:12 2பேது 2:1 1யோவா 2:23
34பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.எரே 15:10 லூக் 12:49-53 யோவா 7:40-52 அப் 13:45-50 அப் 14:2 அப் 14:4
35எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.மத் 10:21 மத் 24:10 மீகா 7:5 மாற் 13:12 லூக் 21:16
36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.ஆதி 3:15 ஆதி 4:8-10 ஆதி 37:17-28 1சாமு 17:28 2சாமு 16:11 யோபு 19:13-19 சங் 41:9 சங் 55:13 எரே 12:6 எரே 20:10 மீகா 7:6 யோவா 13:8
37தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.மத் 22:37 உபா 33:9 லூக் 14:26 யோவா 5:23 யோவா 21:15-17 2கொரி 5:14 2கொரி 5:15 பிலிப் 3:7-9
38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.மத் 16:24 மத் 27:32 மாற் 8:34 மாற் 10:21 லூக் 9:23 லூக் 9:24 லூக் 14:27 யோவா 19:17
39தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.மத் 16:25 மத் 16:26 மாற் 8:35 மாற் 8:36 லூக் 17:33 யோவா 12:25 பிலிப் 1:20 பிலிப் 1:21 2தீமோ 4:6-8 வெளிப் 2:10
40உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.மத் 18:5 மத் 25:40 மத் 25:45 லூக் 9:48 லூக் 10:16 யோவா 13:20 யோவா 20:21 2கொரி 5:20 கலா 4:14 1தெச 4:8
41தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.ஆதி 20:7 1இரா 17:9-15 1இரா 17:20-24 1இரா 18:3 1இரா 18:4 2இரா 4:8-10 2இரா 4:16-10 2இரா 4:17-10 2இரா 4:32-37 அப் 16:15 ரோம 16:1-4 ரோம 16:23-4 2தீமோ 1:16-18 எபிரெ 6:10 3யோவா 1:5-8
42சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.மத் 8:5 மத் 8:6 மத் 18:3-6 மத் 18:10-6 மத் 18:14-6 மத் 25:40 சகரி 13:7 மாற் 9:42 லூக் 17:2 1கொரி 8:10-13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.