| 1 | தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். | லூக் 1:2 லூக் 1:3 லூக் 2:10 லூக் 2:11 அப் 1:1 அப் 1:2 |
| 2 | இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; | சங் 40:7 மத் 2:5 மத் 26:24 மத் 26:31 லூக் 1:70 லூக் 18:31 |
| 3 | கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; | ஏசா 40:3-5 மத் 3:3 லூக் 3:4-6 யோவா 1:15 யோவா 1:19-34 யோவா 3:28-36 |
| 4 | யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். | மத் 3:1 மத் 3:2 மத் 3:6 மத் 3:11 லூக் 3:2 லூக் 3:3 யோவா 3:23 அப் 10:37 அப் 13:24 அப் 13:25 அப் 19:3 அப் 19:4 |
| 5 | அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். | மத் 3:5 மத் 3:6 மத் 4:25 |
| 6 | யோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான். | 2இரா 1:8 சகரி 13:4 மத் 3:4 |
| 7 | அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. | மத் 3:11 மத் 3:14 லூக் 3:16 லூக் 7:6 லூக் 7:7 யோவா 1:27 யோவா 3:28-31 அப் 13:25 |
| 8 | நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான். | மத் 3:11 |
| 9 | அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். | மத் 3:13-15 லூக் 3:21 |
| 10 | அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். | மத் 3:16 யோவா 1:31-34 |
| 11 | அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. | மத் 3:17 யோவா 5:37 யோவா 12:28-30 2பேது 1:17 2பேது 1:18 |
| 12 | உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். | மத் 4:1-11 லூக் 4:1-4 |
| 13 | அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். | யாத் 24:18 யாத் 34:28 உபா 9:11 உபா 9:18 உபா 9:25 1இரா 19:8 |
| 14 | யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: | மத் 4:12 மத் 11:2 மத் 14:2 லூக் 3:20 யோவா 3:22-24 |
| 15 | காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். | தானி 2:44 தானி 9:25 கலா 4:4 எபே 1:10 |
| 16 | அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். | மத் 4:18-22 லூக் 5:1 லூக் 5:4-11 |
| 17 | இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். | எசே 47:10 மத் 4:19 மத் 4:20 லூக் 5:10 அப் 2:38-41 |
| 18 | உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். | மாற் 10:28-31 மத் 19:27-30 லூக் 5:11 லூக் 14:33 லூக் 18:28-30 பிலிப் 3:8 |
| 19 | அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, | மாற் 3:17 மாற் 5:37 மாற் 9:2 மாற் 10:35 மாற் 14:33 மத் 4:21 அப் 1:13 அப் 12:2 |
| 20 | உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். | மாற் 10:29 உபா 33:9 1இரா 19:20 மத் 4:21 மத் 4:22 மத் 8:21 மத் 8:22 மத் 10:37 லூக் 14:26 2கொரி 5:16 |
| 21 | பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார். | மாற் 2:1 மத் 4:13 லூக் 4:31 லூக் 10:15 |
| 22 | அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். | எரே 23:29 மத் 7:28 மத் 7:29 மத் 13:54 லூக் 4:32 லூக் 21:15 யோவா 7:46 அப் 6:10 அப் 9:21 அப் 9:22 2கொரி 4:2 எபிரெ 4:12 எபிரெ 4:13 |
| 23 | அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். | மாற் 1:34 மாற் 5:2 மாற் 7:25 மாற் 9:25 மத் 12:43 லூக் 4:33-37 |
| 24 | அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். | மாற் 5:7 யாத் 14:12 மத் 8:29 லூக் 8:28 லூக் 8:37 யாக் 2:19 |
| 25 | அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். | மாற் 1:34 மாற் 3:11 மாற் 3:12 மாற் 9:25 சங் 50:16 லூக் 4:35 லூக் 4:41 அப் 16:17 |
| 26 | உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. | மாற் 9:20 மாற் 9:26 லூக் 9:39 லூக் 9:42 லூக் 11:22 |
| 27 | எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். | மாற் 7:37 மத் 9:33 மத் 12:22 மத் 12:23 மத் 15:31 |
| 28 | அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று. | மாற் 1:45 மீகா 5:4 மத் 4:24 மத் 9:31 லூக் 4:17 லூக் 4:37 |
| 29 | உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள். | மத் 8:14 மத் 8:15 லூக் 4:38 லூக் 4:39 லூக் 9:58 |
| 30 | அங்கே சீமோனுடைய மாமி ஜூரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள். | 1கொரி 9:5 |
| 31 | அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். | மாற் 5:41 அப் 9:41 |
| 32 | சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். | மாற் 1:21 மாற் 3:2 மத் 8:16 லூக் 4:40 |
| 33 | பட்டணத்தார் எல்லாரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். | மாற் 1:5 அப் 13:44 |
| 34 | பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை. | மாற் 1:25 மாற் 3:12 லூக் 4:41 அப் 16:16-18 |
| 35 | அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். | மாற் 6:46-48 சங் 5:3 சங் 109:4 லூக் 4:42 லூக் 6:12 லூக் 22:39-46 யோவா 4:34 யோவா 6:15 எபே 6:18 பிலிப் 2:5 எபிரெ 5:7 |
| 36 | சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், |
| 37 | அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். | மாற் 1:5 சகரி 11:11 யோவா 3:26 யோவா 11:48 யோவா 12:19 |
| 38 | அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; | லூக் 4:43 |
| 39 | கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். | மாற் 1:21 மத் 4:23 லூக் 4:43 லூக் 4:44 |
| 40 | அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். | மத் 8:2-4 லூக் 5:12-14 |
| 41 | இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். | மாற் 6:34 மத் 9:36 லூக் 7:12 லூக் 7:13 எபிரெ 2:17 எபிரெ 4:15 |
| 42 | இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். | மாற் 1:31 மாற் 5:29 சங் 33:9 மத் 15:28 யோவா 4:50-53 யோவா 15:3 |
| 43 | அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; | மாற் 3:12 மாற் 5:43 மாற் 7:36 மத் 9:30 லூக் 8:56 |
| 44 | ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். | லேவி 14:2-32 மத் 23:2 மத் 23:3 லூக் 5:14 லூக் 17:14 |
| 45 | அவனோ புறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். | சங் 77:11 மத் 9:31 லூக் 5:15 தீத் 1:10 |