| 1 | இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: | மத் 19:1 |
| 2 | இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். | மாற் 14:1 மாற் 14:2 லூக் 22:1 லூக் 22:2 லூக் 22:15 யோவா 13:1 |
| 3 | அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, | மத் 21:45 மத் 21:46 சங் 2:1 சங் 2:2 சங் 56:6 சங் 64:4-6 சங் 94:20 சங் 94:21 எரே 11:19 எரே 18:18-20 யோவா 11:47-53 யோவா 11:57-53 அப் 4:25-28 |
| 4 | இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். | சங் 2:2 |
| 5 | ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச்செய்யலாகாது என்றார்கள். | சங் 76:10 நீதி 19:21 நீதி 21:30 ஏசா 46:10 புலம் 3:37 மாற் 14:2 மாற் 14:12 மாற் 14:27 லூக் 22:7 யோவா 18:28 அப் 4:28 |
| 6 | இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், | மத் 21:17 மாற் 11:12 யோவா 11:1 யோவா 11:2 யோவா 12:1 |
| 7 | ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். | யோவா 12:2 யோவா 12:3 |
| 8 | அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? | 1சாமு 17:28 1சாமு 17:29 பிரச 4:4 மாற் 14:4 யோவா 12:4-6 |
| 9 | இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். | யோசு 7:20 யோசு 7:21 1சாமு 15:9 1சாமு 15:21 2இரா 5:20 மாற் 14:5 யோவா 12:5 யோவா 12:6 2பேது 2:15 |
| 10 | இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுப்படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். | யோபு 13:7 மாற் 14:6 லூக் 7:44-50 கலா 1:7 கலா 5:12 கலா 6:17 |
| 11 | தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். | மத் 25:34-40 மத் 25:42-45 உபா 15:11 மாற் 14:7 யோவா 12:8 கலா 2:10 1யோவா 3:17 |
| 12 | இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. | 2நாளா 16:14 மாற் 14:8 மாற் 16:1 லூக் 23:56 லூக் 24:1 யோவா 12:7 யோவா 19:39 யோவா 19:40 |
| 13 | இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 24:14 மத் 28:19 சங் 98:2 சங் 98:3 ஏசா 52:9 மாற் 13:10 மாற் 16:15 லூக் 24:47 ரோம 10:18 ரோம 15:19 கொலோ 1:6 கொலோ 1:23 1தீமோ 2:6 வெளிப் 14:6 |
| 14 | அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: | மாற் 14:10 லூக் 22:3-6 யோவா 13:2 யோவா 13:30 |
| 15 | நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். | ஆதி 38:16 நியா 16:5 நியா 17:10 நியா 18:19 நியா 18:20 ஏசா 56:11 1தீமோ 3:3 1தீமோ 6:9 1தீமோ 6:10 2பேது 2:3 2பேது 2:14 2பேது 2:15 |
| 16 | அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். | மாற் 14:11 லூக் 22:6 |
| 17 | புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். | யாத் 12:6 யாத் 12:18-20 யாத் 13:6-8 லேவி 23:5 லேவி 23:6 எண் 28:16 எண் 28:17 உபா 16:1-4 மாற் 14:12 லூக் 22:7 |
| 18 | அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். | மாற் 14:13-16 லூக் 22:10-13 |
| 19 | இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். | மத் 21:6 யோவா 2:5 யோவா 15:14 |
| 20 | சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். | மாற் 14:17-21 லூக் 22:14-16 யோவா 13:21 |
| 21 | அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 26:2 மத் 26:14-16 சங் 55:12-14 யோவா 6:70 யோவா 6:71 யோவா 13:21 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 22 | அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நான், நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். | மாற் 14:19 மாற் 14:20 லூக் 22:23 யோவா 13:22-25 யோவா 21:17 |
| 23 | அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். | சங் 41:9 லூக் 22:21 யோவா 13:18 யோவா 13:26-28 |
| 24 | மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். | மத் 26:54 மத் 26:56 ஆதி 3:15 சங் 22:1-31 சங் 69:1-21 ஏசா 50:5 ஏசா 50:6 ஏசா 53:1-12 தானி 9:26 சகரி 12:10 சகரி 13:7 மாற் 9:12 லூக் 24:25 லூக் 24:26 லூக் 24:46 யோவா 19:24 யோவா 19:28 யோவா 19:36 யோவா 19:37 அப் 13:27-29 அப் 17:2-3 அப் 26:22 அப் 26:23 அப் 28:23 1கொரி 15:3 1பேது 1:11 |
| 25 | அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். | 2இரா 5:25 நீதி 30:20 |
| 26 | அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். | மாற் 14:22 லூக் 22:19 |
| 27 | பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; | மாற் 14:23 மாற் 14:24 லூக் 22:20 |
| 28 | இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. | யாத் 24:7 யாத் 24:8 லேவி 17:11 எரே 31:31 சகரி 9:11 மாற் 14:24 லூக் 22:19 1கொரி 11:25 எபிரெ 9:14-22 எபிரெ 10:4-14 எபிரெ 13:20 |
| 29 | இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | சங் 4:7 சங் 104:15 ஏசா 24:9-11 மாற் 14:25 லூக் 22:15-18 |
| 30 | அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப்பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். | சங் 81:1-4 மாற் 14:26 எபே 5:19 எபே 5:20 கொலோ 3:16 கொலோ 3:17 |
| 31 | அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். | மத் 26:56 மத் 11:6 மத் 24:9 மத் 24:10 மாற் 14:27 மாற் 14:28 லூக் 22:31 லூக் 22:32 யோவா 16:32 |
| 32 | ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். | மத் 16:21 மத் 20:19 மத் 27:63 மத் 27:64 மாற் 9:9 மாற் 9:10 லூக் 18:33 லூக் 18:34 |
| 33 | பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான். | மாற் 14:29 லூக் 22:33 யோவா 13:36-38 யோவா 21:15 |
| 34 | இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். | மாற் 14:30 மாற் 14:31 லூக் 22:34 யோவா 13:38 |
| 35 | அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள். | மத் 20:22 மத் 20:23 நீதி 28:14 நீதி 29:23 ரோம 11:20 1கொரி 10:12 பிலிப் 2:12 1பேது 1:17 |
| 36 | அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; | மாற் 14:32-35 லூக் 22:39-46 யோவா 18:1-11 |
| 37 | பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். | மத் 4:18 மத் 4:21 மத் 17:1 மத் 20:20 மாற் 5:37 |
| 38 | அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, | யோபு 6:2-4 சங் 88:1-7 சங் 88:14-16 சங் 116:3 ஏசா 53:3 ஏசா 53:10 ரோம 8:32 2கொரி 5:21 கலா 3:13 1பேது 2:24 1பேது 3:18 |
| 39 | சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். | ஆதி 17:3 எண் 14:5 எண் 16:22 1நாளா 21:16 எசே 1:28 லூக் 17:16 அப் 10:25 வெளிப் 19:10 |
| 40 | பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? | மத் 26:43 மத் 25:5 உன்ன 5:2 மாற் 14:37 லூக் 9:32 லூக் 22:45 |
| 41 | நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். | மத் 24:42 மத் 25:13 மாற் 13:33-37 மாற் 14:38 லூக் 21:36 லூக் 22:40 லூக் 22:46 1கொரி 16:13 எபே 6:18 1பேது 4:7 1பேது 5:8 வெளிப் 16:15 |
| 42 | அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். | மத் 26:39 சங் 22:1 சங் 22:2 சங் 69:1-3 சங் 69:17-3 சங் 69:18-3 சங் 88:1 சங் 88:2 மாற் 14:39 மாற் 14:40 எபிரெ 4:15 எபிரெ 5:7 எபிரெ 5:8 |
| 43 | அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. | நீதி 23:34 யோனா 1:6 லூக் 9:32 அப் 20:9 ரோம 13:1 1தெச 5:6-8 |
| 44 | அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். | மத் 6:7 தானி 9:17-19 லூக் 18:1 2கொரி 12:8 |
| 45 | பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது. | 1இரா 18:27 பிரச 11:9 |
| 46 | என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். | 1சாமு 17:48 லூக் 9:51 லூக் 12:50 லூக் 22:15 யோவா 14:31 அப் 21:13 |
| 47 | அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். | மத் 26:55 மாற் 14:43 லூக் 22:47 லூக் 22:48 யோவா 18:1-8 அப் 1:16 |
| 48 | அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். | 2சாமு 3:27 2சாமு 20:9 2சாமு 20:10 சங் 28:3 சங் 55:20 சங் 55:21 |
| 49 | உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். | மத் 27:29 மத் 27:30 மாற் 15:18 யோவா 19:3 |
| 50 | இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். | மத் 20:13 2சாமு 16:17 சங் 41:9 சங் 55:13 சங் 55:14 லூக் 22:48 |
| 51 | அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். | மத் 26:35 மாற் 14:47 லூக் 9:55 லூக் 22:36-38 லூக் 22:49-51 யோவா 18:10 யோவா 18:11 யோவா 18:36 2கொரி 10:4 |
| 52 | அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். | மத் 5:39 ரோம 12:19 1கொரி 4:11 1கொரி 4:12 1தெச 5:15 1பேது 2:21-23 1பேது 3:9 |
| 53 | நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? | மத் 4:11 மத் 25:31 2இரா 6:17 தானி 7:10 2தெச 1:7 யூதா 1:14 |
| 54 | அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். | மத் 26:24 சங் 22:1-31 சங் 69:1-36 ஏசா 53:1-12 தானி 9:24-26 சகரி 13:7 லூக் 24:25 லூக் 24:26 லூக் 24:44-46 யோவா 10:35 அப் 1:16 |
| 55 | அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. | மாற் 14:48-50 லூக் 22:52 லூக் 22:53 |
| 56 | ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். | மத் 26:54 ஆதி 3:15 ஏசா 44:26 புலம் 4:20 தானி 9:24 தானி 9:26 சகரி 13:7 அப் 1:16 அப் 2:23 |
| 57 | இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். | சங் 56:5 சங் 56:6 மாற் 14:53 மாற் 14:54 லூக் 22:54 லூக் 22:55 யோவா 11:49 யோவா 18:12-14 யோவா 18:24-14 |
| 58 | பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். | யோவா 18:15 யோவா 18:16 யோவா 18:25 |
| 59 | பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; | உபா 19:16-21 1இரா 21:8-13 சங் 27:12 சங் 35:11 சங் 35:12 சங் 94:20 சங் 94:21 நீதி 25:18 மாற் 14:55 மாற் 14:56 அப் 6:11-13 அப் 24:1-13 |
| 60 | ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: | தானி 6:4 தானி 6:5 தீத் 2:8 1பேது 3:16 |
| 61 | தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். | மத் 26:71 மத் 12:24 ஆதி 19:9 1இரா 22:27 2இரா 9:11 சங் 22:6 சங் 22:7 ஏசா 49:7 ஏசா 53:3 லூக் 23:2 யோவா 9:29 அப் 17:18 அப் 18:13 அப் 22:22 |
| 62 | அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். | மத் 27:12-14 மாற் 14:60 லூக் 23:9 யோவா 18:19-24 யோவா 19:9-11 |
| 63 | இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். | சங் 38:12-14 ஏசா 53:7 தானி 3:16 அப் 8:32-35 1பேது 2:23 |
| 64 | அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மத் 26:25 மத் 27:11 மாற் 14:62 லூக் 22:70 யோவா 18:37 |
| 65 | அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. | லேவி 21:20 2இரா 18:37 2இரா 19:1-3 எரே 36:24 மாற் 14:63 மாற் 14:64 |
| 66 | உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். | லேவி 24:11-16 யோவா 19:7 அப் 7:52 அப் 13:27 அப் 13:28 யாக் 5:6 |
| 67 | அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: | மத் 27:30 எண் 12:14 உபா 25:9 யோபு 30:9-11 ஏசா 50:6 ஏசா 52:14 ஏசா 53:3 மாற் 14:65 மாற் 15:19 1கொரி 4:13 எபிரெ 12:2 |
| 68 | கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். | மத் 27:39-44 ஆதி 37:19 ஆதி 37:20 நியா 16:25 மாற் 14:65 லூக் 22:63-65 |
| 69 | அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். | மத் 26:58 1இரா 19:9 1இரா 19:13 சங் 1:1 மாற் 14:66-68 லூக் 22:55-57 யோவா 18:16 யோவா 18:17 யோவா 18:25 2பேது 2:7-9 |
| 70 | அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். | மத் 26:34 மத் 26:35 மத் 26:40-43 மத் 26:51-43 மத் 26:56-43 மத் 26:58-43 சங் 119:115-117 நீதி 28:26 நீதி 29:23 நீதி 29:25 ஏசா 57:11 எரே 17:9 ரோம 11:20 1கொரி 10:12 வெளிப் 21:8 |
| 71 | அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னான். | மாற் 14:68 மாற் 14:69 லூக் 22:58 யோவா 18:25-27 |
| 72 | அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். | மத் 5:34-36 யாத் 20:7 ஏசா 48:1 சகரி 5:3 சகரி 5:4 சகரி 8:17 மல்கி 3:5 அப் 5:3 அப் 5:4 |
| 73 | சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். | லூக் 22:59 லூக் 22:60 யோவா 18:26 யோவா 18:27 |
| 74 | அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. | மத் 27:25 நியா 17:2 நியா 21:18 1சாமு 14:24-28 மாற் 14:71 அப் 23:12-14 ரோம 9:3 1கொரி 16:22 |
| 75 | அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான். | மத் 26:34 லூக் 22:61 லூக் 22:62 யோவா 13:38 |