இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மத்தேயு 22

                   
புத்தகங்களைக் காட்டு
1இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:மத் 9:15-17 மத் 12:43-45 மத் 13:3-11 மத் 20:1-16 மத் 21:28-46 மாற் 4:33 மாற் 4:34 லூக் 8:10 லூக் 14:16
2பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.மத் 13:24 மத் 13:31-33 மத் 13:44-47 மத் 25:1 மத் 25:14
3அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.மத் 3:2 மத் 10:6 மத் 10:7 சங் 68:11 நீதி 9:1-3 ஏசா 55:1 ஏசா 55:2 எரே 25:4 எரே 35:15 மாற் 6:7-11 லூக் 9:1-6 லூக் 14:15-17 வெளிப் 22:17
4அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.லூக் 10:1-16 லூக் 24:46 லூக் 24:47 அப் 1:8 அப் 11:19 அப் 11:20 அப் 13:46 அப் 28:17-31
5அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.ஆதி 19:14 ஆதி 25:34 சங் 106:24 சங் 106:25 நீதி 1:7 நீதி 1:24 நீதி 1:25 அப் 2:13 அப் 24:25 ரோம 2:4 எபிரெ 2:3
6மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.மத் 5:10-12 மத் 10:12-18 மத் 10:22-25 மத் 21:35-39 மத் 23:34-37 யோவா 15:19 யோவா 15:20 யோவா 16:2 யோவா 16:3 அப் 4:1-3 அப் 5:40 அப் 5:41 அப் 7:51-57 அப் 8:1 1தெச 2:14 1தெச 2:15
7ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.மத் 21:40 மத் 21:41 தானி 9:26 சகரி 14:1 சகரி 14:2 லூக் 19:27 லூக் 19:42-44 லூக் 21:21 லூக் 21:24 1தெச 2:16 1பேது 4:17 1பேது 4:18
8அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.மத் 10:11-13 மத் 10:37-13 மத் 10:38-13 லூக் 20:35 லூக் 21:36 அப் 13:46 2தெச 1:5 வெளிப் 3:4 வெளிப் 22:14
9ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.நீதி 1:20-23 நீதி 8:1-5 நீதி 9:4-6 ஏசா 55:1-3 ஏசா 55:6-3 ஏசா 55:7-3 மாற் 16:15 மாற் 16:16 லூக் 14:21-24 லூக் 24:47 அப் 13:47 எபே 3:8 வெளிப் 22:17
10அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.மத் 22:11 மத் 22:12 மத் 13:38 மத் 13:47 மத் 13:48 மத் 25:1 மத் 25:2 1கொரி 6:9-11 2கொரி 12:21 1யோவா 2:19 வெளிப் 2:14 வெளிப் 2:15 வெளிப் 2:20-23
11விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:மத் 3:12 மத் 13:30 மத் 25:31 மத் 25:32 செப் 1:12 1கொரி 4:5 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:23
12சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.மத் 20:13 மத் 26:50
13அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.மத் 12:29 மத் 13:30 ஏசா 52:1 தானி 3:20 யோவா 21:18 அப் 21:11 வெளிப் 21:27
14அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.மத் 7:13 மத் 7:14 மத் 20:16 லூக் 13:23 லூக் 13:24
15அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,சங் 2:2 மாற் 12:13-17 லூக் 20:20-26
16தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.மத் 16:11 மத் 16:12 மாற் 3:6 மாற் 8:15
17ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.எரே 42:2 எரே 42:3 எரே 42:20 அப் 28:22
18இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?மாற் 2:8 லூக் 5:22 லூக் 9:47 லூக் 20:23 யோவா 2:25 வெளிப் 2:23
19வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.மத் 18:28 மத் 20:2 வெளிப் 6:6
20அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.லூக் 20:24
21இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.மத் 17:25-27 நீதி 24:21 லூக் 23:2 ரோம 13:7
22அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.மத் 22:33 மத் 22:46 மத் 10:16 நீதி 26:4 நீதி 26:5 லூக் 20:25 லூக் 20:26 லூக் 21:15 அப் 6:10 கொலோ 4:6
23உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து:மாற் 12:18-27 லூக் 20:27-40
24போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.மத் 22:16 மத் 22:36 மத் 7:21 லூக் 6:46
25எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.மாற் 12:19-23 லூக் 20:29-33 எபிரெ 9:27
26அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
27எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
28ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.யோபு 19:25-27 சங் 16:9-11 சங் 17:15 சங் 49:14 சங் 49:15 சங் 73:25 சங் 73:26 ஏசா 25:8 ஏசா 26:19 ஏசா 57:1 ஏசா 57:2 தானி 12:2 தானி 12:3 ஓசி 13:14 லூக் 24:44-47 யோவா 20:9 ரோம 15:4
30உயிர்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;மாற் 12:24 மாற் 12:25 லூக் 20:34-36 யோவா 5:28 யோவா 5:29 1கொரி 7:29-31 1யோவா 3:1 1யோவா 3:2
31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?மத் 9:13 மத் 12:3 மத் 12:7 மத் 21:16 மத் 21:42
32தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்.யாத் 3:6 யாத் 3:15 யாத் 3:16 அப் 7:32 எபிரெ 11:16
33ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.மத் 22:22 மத் 7:28 மத் 7:29 மாற் 6:2 மாற் 12:17 லூக் 2:47 லூக் 4:22 லூக் 20:39 லூக் 20:40 யோவா 7:46
34அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.மாற் 12:28
35அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:லூக் 7:30 லூக் 10:25-37 லூக் 11:45 லூக் 11:46 லூக் 11:52 லூக் 14:3 தீத் 3:13
36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.மத் 5:19 மத் 5:20 மத் 15:6 மத் 23:23 மத் 23:24 ஓசி 8:12 மாற் 12:28-33 லூக் 11:42
37இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;உபா 6:5 உபா 10:12 உபா 30:6 மாற் 12:29 மாற் 12:30 மாற் 12:33 லூக் 10:27 ரோம 8:7 எபிரெ 10:16 எபிரெ 10:17 1யோவா 5:2-5
38இது முதலாம் பிரதான கற்பனை.
39இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.மத் 19:19 லேவி 19:18 மாற் 12:31 லூக் 10:27 லூக் 10:28 ரோம 13:9 ரோம 13:10 கலா 5:14 யாக் 2:8
40இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.மத் 7:12 யோவா 1:17 ரோம 3:19-21 ரோம 13:9 1தீமோ 1:5 1யோவா 4:7-11 1யோவா 4:19-21 யாக் 2:8
41பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:மத் 22:15 மத் 22:34 மாற் 12:35-37 லூக் 20:41-44
42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.மத் 2:4-6 மத் 14:33 மத் 16:13-17 யோவா 1:49 யோவா 6:68 யோவா 6:69 யோவா 20:28 பிலிப் 2:9-11 பிலிப் 3:7-10 கொலோ 3:11 1பேது 2:4-7 வெளிப் 5:12-14
43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?2சாமு 23:2 மாற் 12:36 லூக் 2:26 லூக் 2:27 அப் 1:16 அப் 2:30 அப் 2:31 எபிரெ 3:7 2பேது 1:21 வெளிப் 4:2
44நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.சங் 110:1 அப் 2:34 அப் 2:35 1கொரி 15:25 எபிரெ 1:3 எபிரெ 1:13 எபிரெ 10:12 எபிரெ 10:13 எபிரெ 12:2
45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.யோவா 8:58 ரோம 1:3 ரோம 1:4 ரோம 9:5 பிலிப் 2:6-8 1தீமோ 3:16 எபிரெ 2:14 வெளிப் 22:16
46அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.மத் 21:27 யோபு 32:15 யோபு 32:16 ஏசா 50:2-9 லூக் 13:17 லூக் 14:6 யோவா 8:7-9 அப் 4:14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.