இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மத்தேயு 21

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி:மாற் 11:1 லூக் 19:28
2உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.மத் 26:18 மாற் 11:2 மாற் 11:3 மாற் 14:13-16 லூக் 19:30-32 யோவா 2:5-8
3ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.1நாளா 29:14-16 சங் 24:1 சங் 50:10 சங் 50:11 ஆகா 2:8 ஆகா 2:9 யோவா 3:35 யோவா 17:2 அப் 17:25 2கொரி 8:9
4இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,மத் 1:22 மத் 26:56 யோவா 19:36 யோவா 19:37
5தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.சங் 9:14 ஏசா 12:6 ஏசா 40:9 ஏசா 62:11 செப் 3:14 செப் 3:15 மாற் 11:4-11
6சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,ஆதி 6:22 ஆதி 12:4 யாத் 39:43 யாத் 40:16 1சாமு 15:11 யோவா 15:14
7கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.மாற் 11:4-8 லூக் 19:32-35
8திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.லேவி 23:40 யோவா 12:13
9முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.மத் 21:15 சங் 118:24-26 மாற் 11:9 மாற் 11:10
10அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.மத் 2:3 ரூத் 1:19 1சாமு 16:4 யோவா 12:16-19
11அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.மத் 16:13 மத் 16:14 உபா 18:15-19 லூக் 7:16 யோவா 7:40 யோவா 9:17 அப் 3:22 அப் 3:23 அப் 7:37
12இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:மல்கி 3:1 மல்கி 3:2 மாற் 11:11
13என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.மத் 2:5 யோவா 15:25
14அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.மத் 9:35 மத் 11:4 மத் 11:5 ஏசா 35:5 அப் 3:1-9 அப் 10:38
15அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதன ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,மத் 21:23 மத் 26:3 மத் 26:59 மத் 27:1 மத் 27:20 ஏசா 26:11 மாற் 11:18 லூக் 19:39 லூக் 19:40 லூக் 20:1 லூக் 22:2 லூக் 22:66 யோவா 11:47-49 யோவா 11:57-49 யோவா 12:19
16அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.லூக் 19:39 லூக் 19:40 யோவா 11:47 யோவா 11:48 அப் 4:16-18
17அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.மத் 16:4 எரே 6:8 ஓசி 9:12 மாற் 3:7 லூக் 8:37 லூக் 8:38
18காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.மாற் 11:12 மாற் 11:13
19அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.ஏசா 5:4 ஏசா 5:5 லூக் 3:9 லூக் 13:6-9 யோவா 15:2 யோவா 15:6 2தீமோ 3:5 தீத் 1:16
20சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.ஏசா 40:6-8 மாற் 11:20 மாற் 11:21 யாக் 1:10 யாக் 1:11
21இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 17:20 மாற் 11:22 மாற் 11:23 லூக் 17:6 லூக் 17:7 ரோம 4:19 ரோம 4:20 1கொரி 13:2 யாக் 1:6
22மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.மத் 7:7 மத் 7:11 மத் 18:19 மாற் 11:24 லூக் 11:8-10 யோவா 14:13 யோவா 15:7 யோவா 16:24 யாக் 5:16 1யோவா 3:22 1யோவா 5:14 1யோவா 5:15
23அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.மாற் 11:27 மாற் 11:28 லூக் 19:47 லூக் 19:48 லூக் 20:1 லூக் 20:2
24இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.மத் 10:16 நீதி 26:4 நீதி 26:5 லூக் 6:9 கொலோ 4:6
25யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;மத் 3:1-12 மத் 11:7-15 மத் 17:12 மத் 17:13 மாற் 1:1-11 மாற் 11:27-33 லூக் 1:11-17 லூக் 1:67-80 லூக் 3:2-20 லூக் 7:28-35 யோவா 1:6 யோவா 1:15 யோவா 1:25-34 யோவா 3:26-36
26மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,மத் 21:46 மத் 14:5 ஏசா 57:11 மாற் 11:32 மாற் 12:12 லூக் 20:6 லூக் 20:19 லூக் 22:2 யோவா 9:22 அப் 5:26
27இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.மத் 15:14 மத் 16:3 மத் 23:16-28 ஏசா 6:10 ஏசா 28:9 ஏசா 29:10-12 ஏசா 42:19 ஏசா 42:20 ஏசா 56:10 ஏசா 56:11 எரே 8:7-9 மல்கி 2:6-9 லூக் 20:7 லூக் 20:8 யோவா 9:30 யோவா 9:40 யோவா 9:41 ரோம 1:18-22 ரோம 1:28-22 2கொரி 4:3 2தெச 2:9 2தெச 2:10
28ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.மத் 17:25 மத் 22:17 லூக் 13:4 1கொரி 10:15
29அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்.மத் 21:31 எரே 44:16 எபே 4:17-19
30இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.மத் 23:3 எசே 33:31 ரோம 2:17-25 தீத் 1:16
31இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 7:21 மத் 12:50 எசே 33:11 லூக் 15:10 அப் 17:30 2பேது 3:9
32ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.மத் 3:1-8 ஏசா 35:8 எரே 6:16 லூக் 3:8-13 2பேது 2:21
33வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.மத் 13:18 1இரா 22:19 ஏசா 1:10 எரே 19:3 ஓசி 4:1
34கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.2இரா 17:13 2இரா 17:14-23 2நாளா 36:15 2நாளா 36:16 நெகே 9:29 நெகே 9:30 எரே 25:3-7 எரே 35:15 சகரி 1:3-6 சகரி 7:9-13 மாற் 12:2-5 லூக் 20:10-19
35தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.மத் 5:12 மத் 23:31-37 1இரா 18:4 1இரா 18:13 1இரா 19:2 1இரா 19:10 1இரா 22:24 2நாளா 16:10 2நாளா 24:21 2நாளா 24:22 2நாளா 36:15 2நாளா 36:16 நெகே 9:26 எரே 2:30 எரே 25:3-7 எரே 26:21-24 லூக் 13:33 லூக் 13:34 அப் 7:52 1தெச 2:15 1தெச 2:16 எபிரெ 11:36 எபிரெ 11:37 வெளிப் 6:9
36பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.மத் 3:17 மாற் 12:6 லூக் 20:13 யோவா 1:18 யோவா 1:34 யோவா 3:16 யோவா 3:35 யோவா 3:36 எபிரெ 1:1 எபிரெ 1:2
38தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;மத் 2:13-16 மத் 26:3 மத் 26:4 மத் 27:1 மத் 27:2 ஆதி 37:18-20 சங் 2:2-8 மாற் 12:7 மாற் 12:8 லூக் 20:14 யோவா 11:47-53 அப் 4:27 அப் 4:28 அப் 5:24-28
39அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.மத் 26:50 மத் 26:57 மாற் 14:46-53 லூக் 22:52-54 யோவா 18:12 யோவா 18:24 அப் 2:23 அப் 4:25-27
40அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.மாற் 12:9 லூக் 20:15 லூக் 20:16 எபிரெ 10:29
41அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.மத் 3:12 மத் 22:6 மத் 22:7 மத் 23:35-38 மத் 24:21 மத் 24:22 லேவி 26:14-46 உபா 28:59-68 சங் 2:4 சங் 2:5 சங் 2:9 ஏசா 5:5-7 தானி 9:26 சகரி 11:8-10 சகரி 12:12 சகரி 13:8 சகரி 14:2 சகரி 14:3 மல்கி 4:1-6 லூக் 17:32-37 லூக் 19:41-44 லூக் 21:22-24 1தெச 2:16 எபிரெ 2:3 எபிரெ 12:25
42இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?சங் 118:22 சங் 118:23 ஏசா 28:16 சகரி 3:8 சகரி 3:9 மாற் 12:10 மாற் 12:11 லூக் 20:17 லூக் 20:18 அப் 4:11 ரோம 9:33 எபே 2:20 1பேது 2:4-8
43ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.மத் 21:41 மத் 8:11 மத் 8:12 மத் 12:28 ஏசா 28:2 லூக் 17:20 லூக் 17:21 யோவா 3:3 யோவா 3:5
44இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.சங் 2:12 ஏசா 8:14 ஏசா 8:15 ஏசா 60:12 சகரி 12:3 லூக் 20:18 ரோம 9:33 2கொரி 4:3 2கொரி 4:4 1பேது 2:8
45பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,மத் 12:12 லூக் 11:45 லூக் 20:19
46அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.2சாமு 12:7-13 நீதி 9:7-9 நீதி 15:12 ஏசா 29:1 யோவா 7:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.