இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மத்தேயு 18

                   
புத்தகங்களைக் காட்டு
1அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.மாற் 9:33-37
2இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:மத் 19:13 மத் 19:14 1இரா 3:7 எரே 1:7 மாற் 9:36 மாற் 9:37
3நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 5:18 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 யோவா 1:51 யோவா 3:3
4ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.மத் 23:11 மத் 23:12 சங் 131:1 சங் 131:2 ஏசா 57:15 லூக் 14:11 1பேது 5:5 யாக் 4:10
5இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.மத் 10:40-42 மத் 25:40 மத் 25:45 மாற் 9:41 லூக் 9:48 லூக் 17:1 லூக் 17:2
6என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.சங் 105:15 சகரி 2:8 மாற் 9:42 லூக் 17:1 லூக் 17:2 அப் 9:5 ரோம 14:13-15 ரோம 14:21-15 ரோம 15:1-3 1கொரி 8:9-13 1கொரி 10:32 1கொரி 10:33 2தெச 1:6-9
7இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ!ஆதி 13:7 1சாமு 2:17 1சாமு 2:22-25 2சாமு 12:14 லூக் 17:1 ரோம 2:23 ரோம 2:24 1தீமோ 5:14 1தீமோ 5:15 1தீமோ 6:1 தீத் 2:5 தீத் 2:8 2பேது 2:2
8உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.மத் 5:29 மத் 5:30 மத் 14:3 மத் 14:4 உபா 13:6-8 மாற் 9:43-48 லூக் 14:26 லூக் 14:27 லூக் 14:33 லூக் 18:22 லூக் 18:23
9உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.மத் 19:17 மத் 19:23 மத் 19:24 அப் 14:22 எபிரெ 4:11 வெளிப் 21:27
10இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 18:6 மத் 18:14 மத் 12:20 சங் 15:4 சகரி 4:10 லூக் 10:16 ரோம 14:1-3 ரோம 14:10-3 ரோம 14:13-15 ரோம 14:21-15 ரோம 15:1 1கொரி 8:8-13 1கொரி 9:22 1கொரி 11:22 1கொரி 16:11 2கொரி 10:1 2கொரி 10:10 கலா 4:13 கலா 4:14 கலா 6:1 1தெச 4:8 1தீமோ 4:12
11மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.மத் 9:12 மத் 9:13 மத் 10:6 மத் 15:24 லூக் 9:56 லூக் 15:24 லூக் 15:32 லூக் 19:10 யோவா 3:17 யோவா 10:10 யோவா 12:47 1தீமோ 1:15
12உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?மத் 21:28 மத் 22:42 1கொரி 10:15
13அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.சங் 147:11 ஏசா 53:11 ஏசா 62:5 எரே 32:37-41 மீகா 7:18 செப் 3:17 லூக் 15:5-10 லூக் 15:23-10 லூக் 15:24-10 யோவா 4:34-36 யாக் 2:13
14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.லூக் 12:32 யோவா 6:39 யோவா 6:40 யோவா 10:27-30 யோவா 17:12 ரோம 8:28-39 எபே 1:5-7 1பேது 1:3-5
15உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.மத் 18:35 லேவி 6:2-7 லூக் 17:3 லூக் 17:4 1கொரி 6:6-8 1கொரி 8:12 2கொரி 7:12 கொலோ 3:13 1தெச 4:6
16அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.எண் 35:30 உபா 17:6 உபா 19:15 1இரா 21:13 யோவா 8:17 2கொரி 13:1 1தீமோ 5:19 எபிரெ 10:28 1யோவா 5:7 1யோவா 5:8 வெளிப் 11:3
17அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.அப் 6:1-3 அப் 15:6 அப் 15:7 1கொரி 5:4 1கொரி 5:5 1கொரி 6:1-4 2கொரி 2:6 2கொரி 2:7 3யோவா 1:9 3யோவா 1:10
18பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 16:19 யோவா 20:23 அப் 15:23-31 1கொரி 5:4 1கொரி 5:5 2கொரி 2:10 வெளிப் 3:7 வெளிப் 3:8
19அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 5:24 மத் 21:22 மாற் 11:24 யோவா 15:7 யோவா 15:16 அப் 1:14 அப் 2:1 அப் 2:2 அப் 4:24-31 அப் 6:4 அப் 12:5 எபே 6:18-20 பிலிப் 1:19 யாக் 5:14-16 1யோவா 3:22 1யோவா 5:14-16 வெளிப் 11:4-6
20ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.ஆதி 49:10 யோவா 20:19 யோவா 20:26 1கொரி 5:4 1தெச 1:1 பிலேமோ 1:2
21அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.மத் 18:15 லூக் 17:3 லூக் 17:4
22அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.மத் 6:11 மத் 6:12 மத் 6:14 மத் 6:15 ஏசா 55:7 மீகா 7:19 மாற் 11:25 மாற் 11:26 ரோம 12:21 எபே 4:26 எபே 4:31 எபே 4:32 எபே 5:1 கொலோ 3:13 1தீமோ 2:8
23எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.மத் 3:2 மத் 13:24 மத் 13:31 மத் 13:33 மத் 13:44 மத் 13:45 மத் 13:47 மத் 13:52 மத் 25:1 மத் 25:14
24அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.லூக் 7:41 லூக் 7:42 லூக் 13:4 லூக் 16:5 லூக் 16:7
25கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.லேவி 25:39 2இரா 4:1 நெகே 5:5 நெகே 5:8 ஏசா 50:1
26அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.மத் 18:29 லூக் 7:43 ரோம 10:3
27அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.நியா 10:16 நெகே 9:17 சங் 78:38 சங் 86:5 சங் 86:15 சங் 145:8 ஓசி 11:8
28அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.மத் 20:2
29அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.மத் 18:26 மத் 6:12 பிலேமோ 1:18 பிலேமோ 1:19
30அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.1இரா 21:27-29 1இரா 22:27
31நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.சங் 119:136 சங் 119:158 எரே 9:1 மாற் 3:5 லூக் 19:41 ரோம 9:1-3 ரோம 12:15 2கொரி 11:21 எபிரெ 13:3
32அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.மத் 25:26 லூக் 19:22 ரோம 3:19
33நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,மத் 5:44 மத் 5:45 லூக் 6:35 லூக் 6:36 எபே 4:32 எபே 5:1 எபே 5:2 கொலோ 3:13
34அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.மத் 5:25 மத் 5:26 லூக் 12:58 லூக் 12:59 2தெச 1:8 2தெச 1:9 வெளிப் 14:10 வெளிப் 14:11
35நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.மத் 6:12 மத் 6:14 மத் 6:15 மத் 7:1 மத் 7:2 நீதி 21:13 மாற் 11:26 லூக் 6:37 லூக் 6:38 யாக் 2:13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.