இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மத்தேயு 17

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,மாற் 9:2-13 லூக் 9:28-36
2அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.லூக் 9:29 ரோம 12:2 பிலிப் 2:6 பிலிப் 2:7
3அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.மாற் 9:4 லூக் 9:30 லூக் 9:31
4அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.மாற் 9:5 மாற் 9:6 லூக் 9:33
5அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.யாத் 40:34 யாத் 40:35 1இரா 8:10-12 சங் 18:10 சங் 18:11 லூக் 9:34 அப் 1:9 வெளிப் 1:7
6சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.லேவி 9:24 நியா 13:20 நியா 13:22 1நாளா 21:16 எசே 3:23 எசே 43:3 தானி 8:17 தானி 10:7-9 தானி 10:16 தானி 10:17 அப் 22:7 அப் 26:14 2பேது 1:18
7அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.தானி 8:18 தானி 9:21 தானி 10:10 தானி 10:18 வெளிப் 1:17
8அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.மாற் 9:8 லூக் 9:36 அப் 12:10 அப் 12:11
9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.மத் 16:20 மாற் 8:30 மாற் 9:9 மாற் 9:10 லூக் 8:56 லூக் 9:21 லூக் 9:22
10அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.மத் 17:3 மத் 17:4 மத் 11:14 மத் 27:47-49 மல்கி 4:5 மல்கி 4:6 மாற் 9:11 யோவா 1:21 யோவா 1:25
11இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.மல்கி 4:6 லூக் 1:16 லூக் 1:17 லூக் 3:3-14 அப் 3:21
12ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.மத் 11:9-15 மத் 21:23-25 மத் 21:32-25 மாற் 9:12 மாற் 9:13 மாற் 11:30-32 லூக் 7:33 யோவா 1:11 யோவா 5:32-36 அப் 13:24-28
13அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.மத் 11:14
14அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:மாற் 9:14-29 லூக் 9:37-43
15ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.மத் 15:22 மாற் 5:22 மாற் 5:23 மாற் 9:22 லூக் 9:38-42 யோவா 4:46 யோவா 4:47
16அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.மத் 17:19 மத் 17:20 2இரா 4:29-31 லூக் 9:40 அப் 3:16 அப் 19:15 அப் 19:16
17இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.மத் 6:30 மத் 8:26 மத் 13:58 மத் 16:8 மாற் 9:19 மாற் 16:14 லூக் 9:41 லூக் 24:25 யோவா 20:27 எபிரெ 3:16-19
18இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.மத் 12:22 மாற் 1:34 மாற் 5:8 மாற் 9:25-27 லூக் 4:35 லூக் 4:36 லூக் 4:41 லூக் 8:29 லூக் 9:42 அப் 16:18 அப் 19:13-15
19அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.மாற் 4:10 மாற் 9:28
20அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 17:17 மத் 14:30 மத் 14:31 எபிரெ 3:19
21இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.மத் 12:45
22அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.மத் 16:21 மத் 20:17 மத் 20:18 மாற் 8:31 மாற் 9:30 மாற் 9:31 மாற் 10:33 மாற் 10:34 லூக் 9:22 லூக் 9:44 லூக் 18:31-34 லூக் 24:6 லூக் 24:7 லூக் 24:26 லூக் 24:46
23அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.சங் 22:15 சங் 22:22-31 ஏசா 53:7 ஏசா 53:10-12 தானி 9:26 சகரி 13:7
24அவர்கள் கப்பர்நகூமில்வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.மாற் 9:33
25அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.மத் 3:15 மத் 22:21 ரோம 13:6 ரோம 13:7
26அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
27ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.மத் 15:12-14 ரோம 14:21 ரோம 15:1-3 1கொரி 8:9 1கொரி 8:13 1கொரி 9:19-22 1கொரி 10:32 1கொரி 10:33 2கொரி 6:3 1தெச 5:22 தீத் 2:7 தீத் 2:8
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.