| 1 | பரிசேயரும், சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். | மத் 5:20 மத் 9:11 மத் 12:14 மத் 15:1 மத் 22:15 மத் 22:34 மத் 23:2 மத் 27:62 |
| 2 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். | லூக் 12:54-56 |
| 3 | உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? | மத் 7:5 மத் 15:7 மத் 22:18 மத் 23:13 லூக் 11:44 லூக் 13:15 |
| 4 | இந்தப் பொல்லாத விபசாரசந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். | மத் 12:39 மத் 12:40 மாற் 8:12 மாற் 8:38 அப் 2:40 |
| 5 | அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள். | மத் 15:39 மாற் 8:13 மாற் 8:14 |
| 6 | இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். | லூக் 12:15 |
| 7 | நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். | மாற் 8:16-18 மாற் 9:10 லூக் 9:46 |
| 8 | இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? | யோவா 2:24 யோவா 2:25 யோவா 16:30 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 9 | இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; | மத் 15:16 மத் 15:17 மாற் 7:18 லூக் 24:25-27 வெளிப் 3:19 |
| 10 | ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? | மத் 15:34 மத் 15:38 மாற் 8:5-9 மாற் 8:17-21 |
| 11 | பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். | மாற் 4:40 மாற் 8:21 லூக் 12:56 யோவா 8:43 |
| 12 | அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள். | மத் 15:4-9 மத் 23:13-28 அப் 23:8 |
| 13 | பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். | மத் 15:21 அப் 10:38 |
| 14 | அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். | மத் 14:2 மாற் 8:28 |
| 15 | அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். | மத் 13:11 மாற் 8:29 லூக் 9:20 |
| 16 | சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். | மத் 14:33 மத் 26:63 மத் 27:54 சங் 2:7 மாற் 14:61 யோவா 1:49 யோவா 6:69 யோவா 11:27 யோவா 20:31 அப் 8:37 அப் 9:20 ரோம 1:4 எபிரெ 1:2-5 1யோவா 4:15 1யோவா 5:5 1யோவா 5:20 |
| 17 | இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். | மத் 5:3-11 மத் 13:16 மத் 13:17 லூக் 10:23 லூக் 10:24 லூக் 22:32 1பேது 1:3-5 1பேது 5:1 |
| 18 | மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. | மத் 10:2 யோவா 1:42 கலா 2:9 |
| 19 | பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். | அப் 2:14-42 அப் 10:34-43 அப் 15:7 |
| 20 | அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். | மத் 8:4 மத் 17:9 மாற் 8:30 மாற் 9:9 லூக் 9:21 லூக் 9:36 |
| 21 | அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். | மத் 17:22 மத் 17:23 மத் 20:17-19 மத் 20:28-19 மத் 26:2 மாற் 8:31 மாற் 9:31 மாற் 9:32 மாற் 10:32-34 லூக் 9:22 லூக் 9:31 லூக் 9:44 லூக் 9:45 லூக் 18:31-34 லூக் 24:6 லூக் 24:7 லூக் 24:26 லூக் 24:27 லூக் 24:46 1கொரி 15:3 1கொரி 15:4 |
| 22 | அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். | மத் 16:16 மத் 16:17 மத் 26:51-53 மாற் 8:32 யோவா 13:6-8 |
| 23 | அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். | மத் 4:10 ஆதி 3:1-6 ஆதி 3:17-6 மாற் 8:33 லூக் 4:8 2கொரி 11:14 2கொரி 11:15 |
| 24 | அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். | மத் 10:38 மாற் 8:34 மாற் 10:21 லூக் 9:23-27 லூக் 14:27 அப் 14:22 கொலோ 1:24 1தெச 3:3 2தீமோ 3:12 எபிரெ 11:24-26 |
| 25 | தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். | மத் 10:39 எஸ்தர் 4:14 எஸ்தர் 4:16 மாற் 8:35 லூக் 17:33 யோவா 12:25 அப் 20:23 அப் 20:24 வெளிப் 12:11 |
| 26 | மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? | மத் 5:29 யோபு 2:4 மாற் 8:36 லூக் 9:25 |
| 27 | மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். | மத் 24:30 மத் 25:31 மத் 26:64 மாற் 8:38 மாற் 14:62 லூக் 9:26 லூக் 21:27 லூக் 22:69 |
| 28 | இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். | மாற் 9:1 லூக் 9:27 |