| 1 | அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: | மாற் 7:1-13 |
| 2 | உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள். | மாற் 7:2 மாற் 7:5 ஆதி 1:14 கொலோ 2:8 கொலோ 2:20-23 1பேது 1:18 |
| 3 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? | மத் 7:3-5 மாற் 7:6-8 மாற் 7:13-8 கொலோ 2:8 கொலோ 2:23 தீத் 1:14 |
| 4 | உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. | மத் 4:10 மத் 5:17-19 ஏசா 8:20 ரோம 3:31 |
| 5 | நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, | மத் 23:16-18 ஆமோ 7:15-17 மாற் 7:10-13 அப் 4:19 அப் 5:29 |
| 6 | உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். | 1தீமோ 5:3 1தீமோ 5:4 1தீமோ 5:8 1தீமோ 5:16 |
| 7 | மாயக்காரரே, உங்களைக்குறித்து: | மத் 7:5 மத் 23:23-29 |
| 8 | இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; | ஏசா 29:13 எசே 33:31 யோவா 1:47 1பேது 3:10 |
| 9 | மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். | யாத் 20:7 லேவி 26:16 லேவி 26:20 1சாமு 25:21 சங் 39:6 சங் 73:13 பிரச 5:2-7 ஏசா 1:13-15 ஏசா 58:1-3 மல்கி 3:14 மாற் 7:7 1கொரி 15:2 யாக் 2:20 |
| 10 | பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள். | 1இரா 22:28 மாற் 7:14 மாற் 7:16 லூக் 20:45-47 |
| 11 | வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். | மாற் 7:15 லூக் 11:38-41 அப் 10:14 அப் 10:15 அப் 11:8 அப் 11:9 ரோம 14:14 ரோம 14:17 ரோம 14:20 1தீமோ 4:4 1தீமோ 4:5 தீத் 1:15 எபிரெ 13:9 |
| 12 | அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். | மத் 17:27 1இரா 22:13 1இரா 22:14 1கொரி 10:32 1கொரி 10:33 2கொரி 6:3 கலா 2:5 யாக் 3:17 |
| 13 | அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். | மத் 13:40 மத் 13:41 சங் 92:13 ஏசா 60:21 யோவா 15:2 யோவா 15:6 1கொரி 3:12-15 |
| 14 | அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். | ஓசி 4:17 1தீமோ 6:5 |
| 15 | அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். | மத் 13:36 மாற் 4:34 மாற் 7:17 யோவா 16:29 |
| 16 | அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? | மத் 15:10 மத் 13:51 மத் 16:9 மத் 16:11 ஏசா 28:9 ஏசா 28:10 மாற் 6:52 மாற் 7:18 மாற் 8:17 மாற் 8:18 மாற் 9:32 லூக் 9:45 லூக் 18:34 லூக் 24:45 எபிரெ 5:12 |
| 17 | வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? | மத் 7:19 மத் 7:20 லூக் 6:45 1கொரி 6:13 கொலோ 2:21 கொலோ 2:22 யாக் 3:6 |
| 18 | வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். | மத் 15:11 மத் 12:34 1சாமு 24:13 சங் 36:3 நீதி 6:12 நீதி 10:32 நீதி 15:2 நீதி 15:28 லூக் 19:22 யாக் 3:6-10 வெளிப் 13:5 வெளிப் 13:6 |
| 19 | எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். | ஆதி 6:5 ஆதி 8:21 நீதி 4:23 நீதி 6:14 நீதி 22:15 நீதி 24:9 எரே 17:9 மாற் 7:21-23 ரோம 3:10-19 ரோம 7:18 ரோம 8:7 ரோம 8:8 கலா 5:19-21 எபே 2:1-3 தீத் 3:2-6 |
| 20 | இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். | 1கொரி 3:16 1கொரி 3:17 1கொரி 6:9-11 1கொரி 6:18-20 எபே 5:3-6 வெளிப் 21:8 வெளிப் 21:27 |
| 21 | பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். | மாற் 7:24 |
| 22 | அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். | மத் 3:8 மத் 3:9 சங் 45:12 எசே 3:6 மாற் 7:26 |
| 23 | அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். | ஆதி 42:7 உபா 8:2 சங் 28:1 புலம் 3:8 |
| 24 | அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார். | மத் 9:36 மத் 10:5 மத் 10:6 ஏசா 53:6 எரே 50:6 எரே 50:7 எசே 34:5 எசே 34:6 எசே 34:16 எசே 34:23 லூக் 15:4-6 அப் 3:25 அப் 3:26 அப் 13:46 ரோம 15:8 |
| 25 | அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். | மத் 20:31 ஆதி 32:26 ஓசி 12:4 லூக் 11:8-10 லூக் 18:1-8 |
| 26 | அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். | மத் 7:6 மாற் 7:27 மாற் 7:28 அப் 22:21 அப் 22:22 ரோம 9:4 கலா 2:15 எபே 2:12 பிலிப் 3:2 வெளிப் 22:15 |
| 27 | அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். | மத் 8:8 ஆதி 32:10 யோபு 40:4 யோபு 40:5 யோபு 42:2-6 சங் 51:4 சங் 51:5 எசே 16:63 தானி 9:18 லூக் 7:6 லூக் 7:7 லூக் 15:18 லூக் 15:19 லூக் 18:13 லூக் 23:40-42 ரோம 3:4 ரோம 3:19 1கொரி 15:8 1கொரி 15:9 1தீமோ 1:13-15 |
| 28 | இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். | யோபு 13:15 யோபு 23:10 புலம் 3:32 |
| 29 | இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். | மாற் 7:31 |
| 30 | அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். | மத் 4:23 மத் 4:24 மத் 11:4 மத் 11:5 மத் 14:35 மத் 14:36 சங் 103:3 ஏசா 35:5 ஏசா 35:6 மாற் 1:32-34 மாற் 6:54-56 லூக் 6:17-19 லூக் 7:21 லூக் 7:22 அப் 2:22 அப் 5:15 அப் 5:16 அப் 19:11 அப் 19:12 |
| 31 | ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். | மத் 9:33 மாற் 7:37 |
| 32 | பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். | மத் 9:36 மத் 14:14 மத் 20:34 மாற் 8:1 மாற் 8:2 மாற் 9:22 லூக் 7:13 |
| 33 | அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள். | எண் 11:21 எண் 11:22 2இரா 4:42-44 மாற் 6:37 மாற் 8:4 மாற் 8:5 யோவா 6:5-7 |
| 34 | அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். | மத் 16:9 மத் 16:10 |
| 35 | அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, | மத் 14:19-21 மாற் 6:39 மாற் 6:40 லூக் 9:14-16 யோவா 6:10 |
| 36 | அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். | மத் 26:26 மத் 26:27 1சாமு 9:13 லூக் 22:19 லூக் 24:30 யோவா 6:11 அப் 27:35 ரோம 14:6 1கொரி 10:31 1தீமோ 4:3 1தீமோ 4:4 |
| 37 | எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள். | மத் 15:33 மத் 14:20 மத் 14:21 சங் 107:9 லூக் 1:53 |
| 38 | ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள். |
| 39 | அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார். | மத் 14:22 மாற் 8:10 |