| 1 | அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். | மாற் 2:23-28 லூக் 6:1-5 |
| 2 | பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். | மத் 12:10 யாத் 20:9-11 யாத் 23:12 யாத் 31:15-17 யாத் 35:2 எண் 15:32-36 ஏசா 58:13 மாற் 3:2-5 லூக் 6:6-11 லூக் 13:10-17 லூக் 23:56 யோவா 5:9-11 யோவா 5:16-11 யோவா 5:17-11 யோவா 7:21-24 யோவா 9:14-16 |
| 3 | அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? | மத் 12:5 மத் 19:4 மத் 21:16 மத் 22:31 மாற் 12:10 மாற் 12:26 லூக் 6:3 லூக் 10:26 |
| 4 | அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே. | யாத் 25:30 லேவி 24:5-9 |
| 5 | அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? | எண் 28:9 எண் 28:10 யோவா 7:22 யோவா 7:23 |
| 6 | தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | மத் 12:41 மத் 12:42 மத் 23:17-21 2நாளா 6:18 ஆகா 2:7-9 மல்கி 3:1 யோவா 2:19-21 எபே 2:20-22 கொலோ 2:9 1பேது 2:4 1பேது 2:5 |
| 7 | பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். | மத் 9:13 மத் 22:29 அப் 13:27 |
| 8 | மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். | மத் 9:6 மாற் 2:28 மாற் 9:4-7 லூக் 6:5 யோவா 5:17-23 1கொரி 9:21 1கொரி 16:2 வெளிப் 1:10 |
| 9 | அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். | மாற் 3:1-5 லூக் 6:6-11 |
| 10 | அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். | 1இரா 13:4-6 சகரி 11:17 யோவா 5:3 |
| 11 | அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? | லூக் 13:15-17 லூக் 14:5 |
| 12 | ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார். | மத் 6:26 லூக் 12:24 |
| 13 | பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று. | லூக் 13:13 அப் 3:7 அப் 3:8 |
| 14 | அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள். | மத் 27:1 மாற் 3:6 லூக் 6:11 யோவா 5:18 யோவா 10:39 யோவா 11:53 யோவா 11:57 |
| 15 | இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி, | மத் 10:23 லூக் 6:12 யோவா 7:1 யோவா 10:40-42 யோவா 11:54 |
| 16 | தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். | மத் 9:30 மத் 17:9 மாற் 7:36 லூக் 5:14 லூக் 5:15 |
| 17 | ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது: | மத் 8:17 மத் 13:35 மத் 21:4 ஏசா 41:22 ஏசா 41:23 ஏசா 42:9 ஏசா 44:26 லூக் 21:22 லூக் 24:44 யோவா 10:35 யோவா 12:38 யோவா 19:28 அப் 13:27 |
| 18 | இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். | ஏசா 49:5 ஏசா 49:6 ஏசா 52:13 ஏசா 53:11 சகரி 3:8 பிலிப் 2:6 பிலிப் 2:7 |
| 19 | வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. | மத் 11:29 சகரி 9:9 லூக் 17:20 யோவா 18:36-38 2கொரி 10:1 2தீமோ 2:24 2தீமோ 2:25 |
| 20 | அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். | மத் 11:28 2இரா 18:21 சங் 51:17 சங் 147:3 ஏசா 40:11 ஏசா 57:15 ஏசா 61:1-3 புலம் 3:31-34 எசே 34:16 லூக் 4:18 2கொரி 2:7 எபிரெ 12:12 எபிரெ 12:13 |
| 21 | அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே. | ஏசா 11:10 ரோம 15:12 ரோம 15:13 எபே 1:12 எபே 1:13 கொலோ 1:27 |
| 22 | அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். | மத் 9:32 மாற் 3:11 லூக் 11:14 |
| 23 | ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். | மத் 9:33 மத் 15:30 மத் 15:31 |
| 24 | பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். | மத் 9:34 மாற் 3:22 லூக் 11:15 |
| 25 | இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. | மத் 9:4 சங் 139:2 எரே 17:10 ஆமோ 4:13 மாற் 2:8 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 1கொரி 2:11 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 26 | சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத்தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? | யோவா 12:31 யோவா 14:30 யோவா 16:11 2கொரி 4:4 கொலோ 1:13 1யோவா 5:19 வெளிப் 9:11 வெளிப் 12:9 வெளிப் 16:10 வெளிப் 20:2 வெளிப் 20:3 |
| 27 | நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். | மாற் 9:38 மாற் 9:39 லூக் 9:49 லூக் 9:50 லூக் 11:19 அப் 19:13-16 |
| 28 | நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. | மத் 12:18 மாற் 16:17 லூக் 11:20 அப் 10:38 |
| 29 | அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். | ஏசா 49:24 ஏசா 53:12 மாற் 3:27 லூக் 11:21 லூக் 11:22 1யோவா 3:8 1யோவா 4:4 வெளிப் 12:7-10 வெளிப் 20:1-3 வெளிப் 20:7-9 |
| 30 | என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். | மத் 6:24 யோசு 5:13 யோசு 24:15 1நாளா 12:17 1நாளா 12:18 மாற் 9:40 லூக் 9:50 லூக் 11:23 2கொரி 6:15 2கொரி 6:16 1யோவா 2:19 வெளிப் 3:15 வெளிப் 3:16 |
| 31 | ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. | ஏசா 1:18 ஏசா 55:7 எசே 33:11 1தீமோ 1:13-15 எபிரெ 6:4 எபிரெ 10:26 எபிரெ 10:29 1யோவா 1:9 1யோவா 2:1 1யோவா 2:2 |
| 32 | எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. | மத் 11:19 மத் 13:55 லூக் 7:34 லூக் 23:34 யோவா 7:12 யோவா 7:52 அப் 3:14 அப் 3:15 அப் 3:19 அப் 26:9-11 1தீமோ 1:13 1தீமோ 1:15 |
| 33 | மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். | மத் 23:26 எசே 18:31 ஆமோ 5:15 லூக் 11:39 லூக் 11:40 யாக் 4:8 |
| 34 | விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். | மத் 3:7 மத் 23:33 லூக் 3:7 யோவா 8:44 1யோவா 3:10 |
| 35 | நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். | மத் 13:52 சங் 37:30 சங் 37:31 நீதி 10:20 நீதி 10:21 நீதி 12:6 நீதி 12:17-19 நீதி 15:4 நீதி 15:23 நீதி 15:28 நீதி 16:21-23 நீதி 25:11 நீதி 25:12 எபே 4:29 கொலோ 3:16 கொலோ 4:6 |
| 36 | மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். | பிரச 12:14 ரோம 2:16 எபே 6:4-6 யூதா 1:14 யூதா 1:15 வெளிப் 20:12 |
| 37 | ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். | நீதி 13:3 |
| 38 | அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள். | மத் 16:1-4 மாற் 8:11 மாற் 8:12 லூக் 11:16 லூக் 11:29 யோவா 2:18 யோவா 4:48 1கொரி 1:22 |
| 39 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. | ஏசா 57:3 மாற் 8:38 யாக் 4:4 |
| 40 | யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். | யோனா 1:17 |
| 41 | யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். | லூக் 11:32 |
| 42 | தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். | 1இரா 10:1-13 2நாளா 9:1-12 லூக் 11:31 லூக் 11:32 அப் 8:27 அப் 8:28 |
| 43 | அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: | லூக் 11:24 அப் 8:13 |
| 44 | நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, | மத் 12:29 லூக் 11:21 லூக் 11:22 யோவா 13:27 எபே 2:2 1யோவா 4:4 |
| 45 | திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார். | மத் 12:24 மாற் 5:9 மாற் 16:9 எபே 6:12 |
| 46 | இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். | மாற் 2:21 மாற் 3:31-35 லூக் 8:10 லூக் 8:19-21 |
| 47 | அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். |
| 48 | தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, | மத் 10:37 உபா 33:9 மாற் 3:32 மாற் 3:33 லூக் 2:49 லூக் 2:52 யோவா 2:3 யோவா 2:4 2கொரி 5:16 |
| 49 | தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! | மத் 28:7 மாற் 3:34 யோவா 17:8 யோவா 17:9 யோவா 17:20 யோவா 20:17-20 |
| 50 | பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார். | மத் 7:20 மத் 7:21 மத் 17:5 மாற் 3:35 லூக் 8:21 லூக் 11:27 லூக் 11:28 யோவா 6:29 யோவா 6:40 யோவா 15:14 அப் 3:22 அப் 3:23 அப் 16:30 அப் 16:31 அப் 17:30 அப் 26:20 கலா 5:6 கலா 6:15 கொலோ 3:11 எபிரெ 5:9 யாக் 1:21 யாக் 1:22 1பேது 4:2 1யோவா 2:17 1யோவா 3:23 1யோவா 3:24 வெளிப் 22:14 |