| 1 | கர்த்தர் சொல்லுகிறதைச் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது. | மீகா 1:2 1சாமு 15:16 எரே 13:15 ஆமோ 3:1 எபிரெ 3:7 எபிரெ 3:8 |
| 2 | பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார். | உபா 32:22 2சாமு 22:8 2சாமு 22:16 சங் 104:5 நீதி 8:29 எரே 31:37 |
| 3 | என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல். | மீகா 6:5 சங் 50:7 சங் 81:8 சங் 81:13 |
| 4 | நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். | யாத் 12:51 யாத் 14:30 யாத் 14:31 யாத் 20:2 உபா 4:20 உபா 4:34 உபா 5:6 உபா 9:26 நெகே 9:9-11 சங் 78:51-53 சங் 106:7-10 சங் 136:10 சங் 136:11 ஏசா 63:9-12 எரே 32:21 எசே 20:5-9 ஆமோ 2:10 அப் 7:36 |
| 5 | என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள். | உபா 8:2 உபா 8:18 உபா 9:7 உபா 16:3 சங் 103:1 சங் 103:2 சங் 111:4 எபே 2:11 |
| 6 | என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒருவயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? | 2சாமு 21:3 மத் 19:16 லூக் 10:25 யோவா 6:26 அப் 2:37 அப் 16:30 ரோம 10:2 ரோம 10:3 |
| 7 | ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? | 1சாமு 15:22 சங் 10:8-13 சங் 50:9 சங் 51:16 ஏசா 1:11-15 ஏசா 40:16 எரே 7:21 எரே 7:22 ஓசி 6:6 ஆமோ 5:22 |
| 8 | மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். | ரோம 9:20 1கொரி 7:16 யாக் 2:20 |
| 9 | கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள். | மீகா 3:12 ஏசா 24:10-12 ஏசா 27:10 ஏசா 32:13 ஏசா 32:14 ஏசா 40:6-8 ஏசா 66:6 எரே 19:11-13 எரே 26:6 எரே 26:18 எரே 37:8-10 ஓசி 13:16 ஆமோ 2:5 ஆமோ 3:8-15 ஆமோ 6:1 யோனா 3:4 செப் 3:2 |
| 10 | துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ? | யோசு 7:1 2இரா 5:23 2இரா 5:24 நீதி 10:2 நீதி 21:6 எரே 5:26 எரே 5:27 ஆமோ 3:10 ஆபகூ 2:5-11 செப் 1:9 சகரி 5:3 சகரி 5:4 யாக் 5:1-4 |
| 11 | கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? | ஓசி 12:7 |
| 12 | அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது. | மீகா 2:1 மீகா 2:2 மீகா 3:1-3 மீகா 3:9-11 மீகா 7:2-6 ஏசா 1:23 ஏசா 5:7 எரே 5:5 எரே 5:6 எரே 5:26-29 எரே 6:6 எரே 6:7 எசே 22:6-13 எசே 22:25-29 ஓசி 4:1 ஓசி 4:2 ஆமோ 5:11 ஆமோ 5:12 ஆமோ 6:1-3 செப் 3:3 |
| 13 | ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன். | லேவி 26:16 உபா 28:21 உபா 28:22 யோபு 33:19-22 சங் 107:17 சங் 107:18 ஏசா 1:5 ஏசா 1:6 எரே 14:18 அப் 12:23 |
| 14 | நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம்பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன். | லேவி 26:26 ஏசா 65:13 எசே 4:16 எசே 4:17 ஓசி 4:10 ஆகா 1:6 ஆகா 2:16 |
| 15 | நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை. | லேவி 26:20 உபா 28:38-40 ஏசா 62:8 ஏசா 62:9 ஏசா 65:21 ஏசா 65:22 எரே 12:13 யோவே 1:10-12 ஆமோ 5:11 செப் 1:13 ஆகா 1:6 |
| 16 | நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள். | 1இரா 16:25-30 ஓசி 5:11 |